Tuesday, June 30, 2009

பிரபாகரன் தலைமையில் தமிழீழம் மலர்வது உறுதி களம் புகுவோம்! கடமையாற்றுவோம்!

பிரபாகரன் தலைமையில்தமிழீழம் மலர்வது உறுதிகளம் புகுவோம்! கடமையாற்றுவோம்!பழ.நெடுமாறன்

30 ஆண்டு காலம் அறவழியிலும் 30 ஆண்டு காலம் மறவழியிலும் ஈழத்தமிழர்கள் தங்கள் உரிமைகளைப் பெற நடத்திய போராட்டத்தை முற்றிலுமாக முறியடித்து விட்டதாக சிங்களப் பேரினவாத அரசு வெற்றிமுரசு கொட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் எந்த தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டமும் ஒருபோதும் ஓய்ந்து விடுவதில்லை. விழவிழ எழுவோம் என்பதுதான் விடுதலைப் போராளிகளின் இலட்சிய முழக்கமாகும்.

இராசபக்சேயைவிட மிகக்கொடிய இனவெறியர்களான இட்லரும், முசோலினியும் அய்ரோப்பாவில் பல்வேறு தேசிய இனங்களை அடக்கி ஒடுக்கச் செய்த முயற்சிகள் இறுதியில் என்ன ஆயின என்பதை உலக வரலாறு நமக்குத் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளது. வரலாறு கூறும் இந்த உண்மைகளை அறியாதவர்கள்தான் தமிழீழ விடுதலைப் போராட்டம் மீண்டும் எழ முடியாத வகையில் ஒடுக்கப்பட்டு விட்டது என வாய்வீச்சு வீசி வருகின்றனர்.
தமிழீழத்தில் ஏற்பட்டிருக்கிற மனிதப் பேரவலம் இதுவரை உலகம் சந்தித்திராத ஒன்றாகும். ஏறத்தாழ ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 3 இலட்சத் திற்கும் மேற்பட்ட தமிழர்கள் தங்களின் வாழ்விடங்களிலிருந்து விரட்டப்பட்டு இராணுவ முகாம்களுக்குள் பூட்டப்பட்டு ள்ளனர். போதுமான உணவோ மருந்தோ சுகாதார வசதிகளோ இல்லாமல் உயிர் வாழப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இளைஞர்கள் தனிமைப் படுத்தப்பட்டு சொல்லொணாத சித்ரவதை களுக்கு ஆளாகிக்கொண்டிருக்கிறார்கள். இளம் பெண்கள் பிரித்தெடுக்கப்பட்டு சிங்கள இராணுவத்தின் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.

சிங்களப் படையினர் நோயாளிகளை தனியாகப் பிரித்தெடுத்து அவர்களை வேறிடத்திற்கு கொண்டுச் சென்று அடைத்து வைத்துள்ளனர். உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கும் அந்த நோயாளிகளின் கண்கள், சிறு நீரகங்கள், ஈரல், எலும்பின் உட்சத்து, இருதயம் ஆகியவற்றை மயக்க மருந்து தராமலேயே வெட்டி எடுத்து விற்பனைக்கு அனுப்பி வைக்கின் றனர்.

குறைந்தது இன்னும் 4 அல்லது 5 ஆண்டுகளுக்கு அவர்கள் தங்கள் ஊர்களுக்கோ வீடுகளுக்கோ திரும்பு வதற்கு அனுமதிக்கப் போவதில்லை என சிங்கள அரசு வெளிப்படையாகக் கூறுகிறது. அவர்கள் வாழ்ந்த இடங்களில் ஏராளமான கண்ணிவெடிகள் புதைக்கப் பட்டிருப்பதாகவும் ஆகவே அவற்றை யெல்லாம் அப்புறப்படுத்திய பிறகே மக்களை குடியேற அனுமதிக்க முடியும் என்று சிங்கள அரசு கூறுகிறது. உண்மை அது அல்ல. இராணுவம் ஆக்கிரமித்த ஊர்களில் உள்ள வீடுகள் எல்லாம் விமான குண்டு வீச்சு களினாலும் பீரங்கித் தாக்குதல்களினாலும் அனேகமாக இடிந்து தகர்ந்துவிட்டன. இடியாமல் இருந்த வீடுகளை சிங்கள இராணுவம் இடித்துத் தரைமட்டமாக்கி விட்டது. விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதைத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. தமிழர்களை மீண்டும் தங்கள் ஊர்களில் வாழ்வதற்கு சிங்கள அரசு ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்பது திண்ணம். அவர்களை எல்லாம் உளவியல் ரீதியில் பலவீனப்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக செயலற்றுப்போக வைக்க சிங்கள அரசு திட்டமிட்டுள்ளது. தாங்கள் வாழ்ந்த வீடுகளைப் பற்றியோ ஊர்களைப் பற்றியோ மக்கள் நினைத்துப் பார்க்கக் கூடாத அளவில் மறந்துவிட வேண்டும். இராணுவ காவலோடு உள்ள முகாம்களில் காலமெல்லாம் வாழ்ந்து மடியவேண்டும் அப்பொழுதுதான் அவர்களுக்கு மொழி உணர்வோ இன உணர்வோ கொஞ்சம்கூட இல்லாமல் மழுங்கிப்போன மக்களாக விளங்குவார்கள் என சிங்கள அரசு கருதுகிறது.

இந்த மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களும் விடுதலைப் புலிகளுடன் இணைந்து வெளியேறியவர்கள். இறுதி வரை அவர்களுடன் உறுதியாக நின்றவர்கள் என்ற காரணத்திற்காக அவர்களைப் பழி வாங்க வேண்டும் என்ற வெறியுடன் சிங்கள அரசு நடந்து கொள்கிறது.

சிங்கள அரசின் திட்டம் குறித்து பல செய்திகள் கிடைத்துள்ளன. ஜெர்மனியில் வாழ்ந்த யூதர்களை ஒழித்துவிட்டு அவர்கள் வாழ்ந்த இடங்களில் ஜெர்மானிய மக்களை குடியேற்றினர். ஜெர்மன் மக்களுக்கு வாழ்வதற்கு இடம் தேவை ஆகவேதான் யூதர்களை ஒழித்துக்கட்டியதாக இட்லர் கூறினர். அதே திட்டத்தைத்தான் இராசபக்சே இன்றைக்குச் செயல் படுத்துகிறார். தமிழர்களைப் படுகொலை செய்துவிட்டு எஞ்சிய தமிழர்களை வதைமுகாம்களில் அடைத்துவிட்டு அவர்கள் வாழ்ந்த இடங்களில் சிங்களர்களைக் குடியேற்றத் திட்டமிட்டு இருக்கிறார். இராணுவம் கைப்பற்றிய இடங்களில் புத்த விகாரைகள் அவசர அவசரமாகக் கட்டப்படுகின்றன. விகாரைகளைச் சுற்றி சிங்களக் குடியேற்றங்களை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.

"எதிர்காலத்தில் இலங்கையில் இரண்டு இனங்கள் தான் இருக்கும். ஒன்று சிங்கள இனம், மற்றொன்று சிங்கள கலப்பினம்"
என இராசபக்சே வெளிப்படை யாகவே கூறுகிறார். அதாவது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாக்கி சிங்களக் கலப்பினத்தை தோற்றுவிப்பது அவரின் திட்டமாகும். தமிழ் இளைஞர்களை எல்லாம் தனிமைப்படுத்தி இராணுவம் கொன்று குவித்துவருகிறது

தமிழர் வாழும் பகுதிகளில் சிங்களப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. தமிழ்க் குழந்தைகள் சிங்களம் கற்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தப் படுகிறார்கள். அரசு அலுவலகங்களில் இனி சிங்கள மொழி மட்டுமே ஆட்சிமொழியாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி வேகவேகமாக தமிழர் பகுதிகளைச் சிங்கள மயமாக்கும் முயற்சி நடைபெறுகிறது. எதிர்காலத்தில் இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதே கேள்விக்குறியாக மாறிவிடும்

சிங்களஅரசின் சதி
திடீரென இந்த நிலை ஏற்பட்டு விடவில்லை. புலிகளுடனான இறுதிப் போருக்கான ஆயத்தங்களை சிங்கள அரசு முன் கூட்டியே செய்தது.

1. இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடம் ஏராளமான ஆயுதங் களை வாங்கிக் குவித்தது.

2. இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் சிங்கள இராணுவ வீரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் அதி நவீன பயிற்சிகள் அளித்தன. நவீன ஆயுதங்களை எப்படிக் கையாள்வது என்பதை கற்றுக் கொடுத்தன. சிங்கள இராணுவ வீரர்களில் 63 சதவீதம் பேர் இவ்வாறு பயிற்சி பெற்றவர்களே யாவார்கள்.

3. இந்தியக் கடற்படையும் சிங்களக் கடற்படை வீரர்களுக்கு பயிற்சி அளித்தது. பாகிஸ்தான் விமானப்படை அதிகாரிகள் சிங்கள விமானிகளுக்குப் பயிற்சி அளித்தார்கள்.

4. இந்திய உளவு விமானங்கள் இந்துமாக்கடல் பகுதியில் புலிகளுக்கு ஆயுதங்கள் மற்றும் பொருட்களைக் கொண்டுவந்த கப்பல்களைக் கண்டறிந்து அவற்றை மூழ்கடிப்பதற்கு உதவின.

5. செய்மதிகள் மூலம் புலிகளின் நடமாட்டத்தையும் இருப்பிடத்தையும் கண்டறிந்து சிங்கள இராணுவத்திற்குத் தெரிவித்தன.

6. ஈவு இரக்கம் இல்லாமல் அப்பாவி தமிழ் மக்களைக் கொன்று குவிக்கும் கொலைவெறி இராணுவமாக சிங்கள இராணுவத்தை மாற்றினார்கள்.

7. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதி களில் வாழ்ந்த புலிகளின் ஆதரவாளர் களையும் குடும்பத்தினரையும் வெள்ளை வாகனங்களில் கடத்திப் படுகொலை செய்தார்கள்.

8. தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டார்கள். எஞ்சிய உறுப்பி னர்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள உலக நாடுகளில் தஞ்சம் புகுந்தார்கள்.

9. சிங்கள அரசைக் கண்டித்த நடுநிலையான சிங்களவர்களையும் ஊடகங்களைச் சேர்ந்தவர்களையும் புலி ஆதரவாளர்கள் எனக்கூறி படுகொலைச் செய்தார்கள்.

10. கருணா, டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களின் கூலிப்படை தமிழர் களுக்கு எதிராக அட்டுழியங்களைச் செய்தது.

11. சர்வதேச ஊடகவியலாளரை நாட்டைவிட்டு வெளியேற்றினர்.

12. தொண்டு நிறுவனங்கள் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம், அய்.நா. அகதிகள் ஆணையம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் திட்டமிட்டு வெளியேற்றப்
பட்டனர்.
சாட்சி சொல்ல யாரும் இல்லாத நிலைமையை உருவாக்கிக்கொண்டு தமிழின அழிப்பு நடவடிக்கையை சிங்கள இராணுவம் தொடர்ந்தது.ஐந்து ஆண்டுகாலத்திற்கு மேலாக சிங்கள அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே சமரசத் தூதராக செயல்பட்ட நார்வே பிரதிநிதிகளை அவமதிப்பான வகையில் சிங்கள அரசு வெளியேற்றியது. இதற்கு இந்தியாவும் உடந்தையாக இருந்தது. இலங்கை இனப்பிரச்சினையில் இருந்து நீங்கள் வெளியேறிவிடுவது நல்லது என நார்வே பிரதிநிதியான எரிக் சொல்கைம்மிடம் இந்தியப் பாதுகாப்புத் துறை ஆலோசகர் எம்.கே. நாராயணன் கூறியதாக அவரே கூறினார். அதாவது இலங்கைப் போரை இந்தியாதான் நடத்துகிறது. எனவே வேறு யாரும் அங்கிருக்கத் தேவையில்லை என்பதுதான் இந்திய அரசு சொன்ன செய்தியாகும்.

ஜே.வி.பி. நோக்கம்சிங்கள தீவிரவாத இயக்கமான ஜேவிபி இயக்கம் ஈழத்தமிழர்களுக்கு எதிரான இயக்கம் மட்டுமல்ல. இந்தியாவுக்கும் எதிரான இயக்கமாகும். அந்த இயக்கத்தின் தலைவர் சோமவன்ச அமரசிங்க என்பவர் போர் முடிவுற்ற பிறகு நடத்திய சிறப்புச் செய்தியாளர் மாநாட்டில் பின்வருமாறு அறிவித்தார்."விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் இந்தியாவை விட அதிகமான உதவி செய்த நாடு உண்டென்றால் அது பாகிஸ்தான் ஆகும். எனவே இலங்கைப் பிரச்சினைகளுக்கான தீர்வுத் திட்டம் தொடர்பாக அழுத்தம் கொடுக்க ஏனைய நாடுகளைவிட பாகிஸ்தானுக்கே முழு உரிமையும் தகுதியும் உண்டு. நமது நாட்டின் தேசியப் பிரச்சினைகளில் சர்வதேச அழுத்தங்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் தீர்வுகாணப்போவதாக அதிபர் இராசபக்சே தெரிவித்திருக்கிறார். அப்படி யானால் 13-ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் ஒரு தீர்வை முன்வைக்க முடியாது. 13-ஆவது திருத்த சட்டம் என்பது முழுக்க முழுக்க இந்தியாவின் தேவைகளுக்கான தீர்வுத்திட்டம் ஆகும். 1987-ஆம் ஆண்டு முதல் இதை நடைமுறைப்படுத்த இந்தியா எடுத்த முயற்சிகள் சிங்கள மக்களின் எதிர்ப்புகளால் தோல்விகண்டது.இந்த உள்நாட்டுப் போரில் சிங்கள இராணுவம் வெற்றியடைவதற்கு கனரக ஆயுதங்கள் பாகிஸ்தான் வழங்கி உதவியது. அடுத்து சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் பெரும் உதவி அளித்தன. ஆனால் மேற் கண்ட 3 நாடுகளும் இலங்கையின் உள் விவகாரங்களில் அநாகரிகமான முறையில் தலையிடவில்லை. எவ்வித உள் நோக்கமும் இன்றி இலங்கைக்கு உதவி செய்தவர்களை புறக்கணித்துவிட்டு இலங்கையின் மீது எப்போதும் ஒரு கண் வைத்து கபடத்தனமாகவும் குள்ளநரி போலவும் காய்களை நகர்த்தும் இந்தியாவுக்கு இடமளிப்பது எந்த வகையிலும் நல்லதல்ல"இதே சோமவன்ச அனுராதபுரத்தில் பேசியபோது யார் நமது எதிரிகள் என்ற கேள்வியை எழுப்பி அவரே அதற்குப் பதிலும் கூறினார். "முதலில் நார்வே, பிறகு ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, ஜப்பான் ஆகியவை நமது நிரந்தர எதிரிகள் ஆனால் இன்னொரு பகை மறைந்தி ருக்கிறது அதுதான் இந்தியா."13ஆவது அரசியல் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் ஈழத் தமிழர் களுக்கு உரிமைகளை வழங்க இலங்கை அரசு உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டுமென இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் இந்திய உயர் அதிகாரி களும் அடிக்கடி கூறி வருகிறார்கள். ஆனால் இராசபக்சேயை வழி நடத்தும் ஜேவிபி இயக்கம் இதற்கு முற்றிலும் எதிராக இருக்கிறது. அந்த இயக்கத்தைப் பகைத்துக் கொண்டு இராசபக்சே ஒரு போதும் செயல்பட மாட்டார். எனவே இந்தியாவின் இந்த நம்பிக்கை வீணான நம்பிக்கை என்பது மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் செயலாகும்.இந்திய நிலை - பின்னணிஇலங்கை இனப்பிரச்சினையில் ஈழத்தமிழர்களுக்கு எதிராகவும் சிங்கள இனவெறியர்களுக்கு ஆதரவாகவும் இந்திய அரசு எடுத்துள்ள நிலைக்கு எவை காரணங்கள் என்பதை நாம் ஆராய வேண்டும். இந்திய அரசின் சார்பில் கீழ்க்கண்ட காரணங்களைக் கூறுகிறார்கள்.1. இலங்கையில் நடைபெறுவது தமிழர்களுக்கு எதிரான போர் அல்ல. பயங்கரவாதத்திற்கு எதிராக நடைபெறும் போராகும்.2. புலிகளைத் தோற்கடிப்பது இந்தியாவின் தேசியப் பாதுகாப்பிற்கு இன்றியமையாதது.3. இலங்கையில் சீனாவின் கை மேலோங்காமல் இருப்பதற்கு சிங்கள அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.4. ஈழத் தமிழர் போராட்டத்தை ஆதரிப்பது தமிழ்நாட்டில் பிரிவினை வாதத்தை ஊக்குவிக்கும்.5. இந்தியாவின் நட்பு நாடாக இலங்கையை வைத்திருக்க வேண்டும்.மேலே கண்ட காரணங்கள் எந்த வகையிலும் சரியானவை அல்ல. பயங்கர வாதத்திற்கு எதிரான போர் என்று சொன் னால் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டது ஏன்? தமிழர்களுக்கு எதிரான இன அழிப்புப் போரையே சிங்கள அரசு நடத்தி வருகிறது என்ற உண்மையை இந்திய அரசு மறைக்கிறது.இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு புலிகள் ஒருபோதும் எதிரான நிலை எடுத்ததில்லை. இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எவற்றிடமும் விடுதலைப்புலிகள் எந்த உதவியையும் நாடியது மில்லை. பெற்றதுமில்லை. அவர்கள் நினைத்திருந்தால் சுலபமாக பெற்றி ருக்க முடியும். தமிழர் தாயகப் பகுதியில் அந்நிய வல்லரசுகளின் இராணுவத் தளங்கள் அமைவதற்கு எதிராகவும் புலிகள் போராடி வந்திருக் கிறார்கள். இன்னொரு வகையில் அத்தகைய தளங்கள் அமைவது இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை புலிகள் தெளிவாக உணர்ந்திருந்தார்கள். எனவே அவற்றை எதிர்த்துப் போராடினார்கள். இந்தியாவின் பாதுகாப்புக்காக போராடிய புலிகளுக்கு உதவ வேண்டிய இந்தியா அதற்கு நேர்மாறாக அவர்களுக்கு எதிரான சிங்களருக்கு உதவியிருப்பது தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டதற்கு சமமாகும்.இலங்கையில் சீனாவின் கை மேலோங்காமல் இருப்பதற்காகவே சிங்கள அரசுக்கு ஆதரவு அளிப்பதாக இந்தியா கூறுவது அப்பட்டமான ஏமாளித்தன மானது. இலங்கையில் சீனா ஆழமாக காலூன்றிவிட்டது.ஈழத்தமிழர் போராட்டத்தை ஆதரிப்பதன் மூலம் தமிழ்நாட்டில் பிரிவினைவாதம் தலைதூக்கும் என்று கூறுவது எதிர்மறையான அணுகுமுறை யாகும். வங்க விடுதலைப் போராட்டத்திற்கு இந்தியா உதவ முன்வந்தபோது, இந்தியாவிலும் ஒரு வங்கம் இருக்கிறது. இரண்டு வங்கங்களும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஒன்றாக இருந்தவை. எனவே கிழக்கு வங்கம் சுதந்திரம் பெற உதவினால் இந்தியாவில் உள்ள மேற்கு வங்கமும் பிரிந்து போய்விடும் என்ற கருத்து அப்போது யாருக்கும் எழவில்லை. வங்காளி மீது வராத சந்தேகம். எதற்காக தமிழர்கள் மீது வருகிறது?வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொட்டு தமிழீழமும் தமிழகமும் வெவ்வேறு நாடுகளாகத்தான் இருந்து வந்திருக்கின்றன. இரண்டும் இணைந்து ஒரே நாடாக ஒருபோதும் இருந்ததில்லை. ஈழத் தமிழர்கள் விடுதலைபெற உதவினால் தமிழ்நாடு அதற்கு நன்றி பாராட்டும். ஆனால் அந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு இந்தியா துணை நிற்கிறது என்ற செய்தியே தமிழக மக்கள் மத்தியில் ஆறாத கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.சிங்கள அரசுகள் பல கட்டங்களில் இந்தியாவுக்கு எதிரான நாடுகளுடன் கை கோர்த்திருக்கின்றன. இந்தியாவின் மீது சீனா படையெடுத்தபோதும், வங்காளதேசப் போராட்டம் நடைபெற்றபோதும். இந்தியா வுக்கு எதிராகவே இலங்கை செயல் பட்டது. இப்போதும் இந்தியாவுக்கு எதிரான நாடுகளான சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இலங்கையில் தளங்கள் அமைக்க உதவி யுள்ளது. இலங்கை ஒருபோதும் இந்தியா வுக்கு உண்மையான நட்பு நாடாக இருந்ததில்லை. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என்பது இப்படியொரு தவறான தளத்தின் மேல் கட்டப்பட்டுள்ளது. ஜவகர்லால் நேரு, இந்திராகாந்தி போன்ற பெரும் தலைவர்கள் வகுத்து வழிநடத்திய வெளியுறவுக் கொள்கை என்பது இப்போது விரல்விட்டு எண்ணக்கூடிய சில அதிகாரி களால் வழிநடத்தப்படுகிறது. அதிலும் குறிப்பாக இந்திய அரசின் வெளியுறவுத் துறையில் மலையாளிகளின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது. இந்திய வெளியுறவுத் துறை செயலாளராக சிவசங்கரமேனன், பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகராக எம்.கே. நாராயணன், ஜெனீவாவில் மனித உரிமை ஆணையத்தில் இந்தியப் பிரதிநிதியாக கோபிநாத் அச்சம் குளங்கரே, அய்.நா. பொதுச்செயலாளரின் அலுவலக தலைமை அதிகாரியாக விஜய்நம்பியார், இந்திய அமைச்சரவையின் செயலாளராக பி.கே.நாயர் ஆகிய மலையாளிகள் அமர்ந் திருக்கிறார்கள். இவர்கள்தான் இலங்கை பற்றிய இந்திய அரசின் தவறான கொள்கை வகுப்பாளர்கள். அதுமட்டுமல்ல. அய். நாவில் உயரதிகாரியாக இருக்கும் விஜய் நம்பியாரின் சொந்த சகோதரர். லெப். ஜெனரல் சதீஷ் சந்திரா என்பவர் இந்திய இராணுவத்தில் உயரதிகாரியாக பதவி வகித்தவர். பிறகு அய்.நா அமைதிப் படையில் பதவி வகித்தவர். 2002-ஆம் ஆண்டிலிருந்து சிங்கள இராணுவத்திற்கு ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார்.இலங்கையில் போரின் இறுதி நாட்களில் இருபதினாயிரத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்ச்சி குறித்த அத்தனை உண்மை களையும் விஜய நம்பியார் அறிவார். ஆனால் அய்.நா. பொதுச்செயலாளருக்கோ மற்ற நாடுகளுக்கோ தெரியாமல் அவற்றை அவர் மறைத்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு பலமாக எழுந்துள்ளது.மேற்கண்ட அதிகாரிகள் அனை வரும் தமிழர்களுக்கு எதிராகவே செயல் பட்டு வருகிறார்கள். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோருக்கு உலக பிரச்சினைகள் குறித்து எதுவும் தெரியாத நிலையில் இந்த அதிகாரிகள் கூறும் ஆலோசனையின்படி அவர்கள் நடந்துகொள்கிறார்கள். சில வேளைகளில் இந்த அதிகாரிகள் பிரதமர் கருத்துக்கு எதிராகவும் பகிரங்கமாகவே செயல்படுகிறார்கள்.

10-06-09 அன்று வெளியுறவுத் துறை செயலாளர் சிவசங்கரமேனன் "இலங்கை இனப்பிரச்சினையில் இனி என்ன செய்ய வேண்டும் என்று சொல்லமாட்டோம், அப்படி சொல்வது இந்தியாவின் வேலை அல்ல. இது தொடர்பாக அதிபர் இராசபக்சே என்ன முடிவெடுத்தாலும் அதை இந்தியா வழக்கம்போல ஆதரிக்கும். இந்தியாவின் போரை நான் நடத்தினேன் என்று இலங்கை அதிபர் இராசபக்சே சொன்னது ஒருவகையில் சரிதான். இலங்கையின் பாதுகாப்பு இந்தியாவின் பாதுகாப்பு டன் பின்னிப் பிணைந்திருக்கிறது. இலங்கையின் பாதுகாப்பிற்கு அச்சுறு த்தல் ஏற்படும் போது இந்தியா பாதுகாப்பாக இருக்க முடியாது" என்று கூறியுள்ளார்.

ஆனால் அதற்கு முன் தினம் இந்திய நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங் "இலங்கையில் சிங்களவர் களுக்குச் சமமான உரிமைகளை தமிழர்கள் பெற்று வாழ வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொள்ளவேண்டும்" என வலியுறுத்தி இருக்கிறார். ஆனால் அதைக் கொஞ்சமும் மதிக்காத வகையில் ஒரு அதிகாரியான சிவசங்கரமேனன் நடந்துகொள்கிறார்.இலங்கை இனப்பிரச்சினையைப் பொறுத்தவரையில் இந்தியா, சீனா, அமெரிக்கா, ரசியா, மேற்குநாடுகள், ஈரான், பாகிஸ்தான் ஆகியவை சிங்கள அரசுக்கு ஆயுதம் மற்றும் நிதியுதவிகளை வழங்கி வந்திருக்கின்றன. இந்நாடுகளுக்கிடையே பகைமை இருந்தாலும் சிங்கள அரசுக்கு உதவுவதில் ஒன்றாக உள்ளன. நார்வே நாட்டின் முயற்சியால் போர் நிறுத்தம் ஏற்பட்டிருந்த காலகட்டத்தில் அங்கு நிரந்தரமான அமைதி நிலவவேண்டு மானால் சிங்கள அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே படை வலு சம நிலையில் பேணப்பட்டிருக்க வேண்டும். போஸ்னியா போன்ற பிரச்சினைகளில் உலக நாடுகள் இந்த அணுகுமுறையைத் தான் கையாண்டன. ஆனால் இலங்கைப் பிரச்சினையைப் பொறுத்தவரையில் போர்நிறுத்த காலத்தில் சிங்கள இராணுவத்தை மேலும் வலுப்படுத்துவதற்கு மேற்கண்ட நாடுகள் அனைத்தும் உதவின.தமிழர் பகுதிகள் மீது சிங்கள அரசு பொருளாதாரத் தடை விதித்தபோது உலக நாடுகள் அதைக் கண்டிக்கவில்லை. இந்திய - இலங்கை உடன்பாட்டின்படி இணைக்கப்பட்ட வடக்கு - கிழக்கு மாநிலங்களை சிங்கள அரசு மீண்டும் பிரித்தபோது இந்திய அரசும் ஏன் என்று கேட்கவில்லை. உலக நாடுகளும் ஒதுங்கிக் கொண்டன.விடுதலைப்புலிகளின் வினியோகக் கப்பல்கள் தொடர்பான புலனாய்வுத் தகவல் கள், புலிகளின் நகர்வு தொடர்பான செய் மதித் தகவல்கள் கடற்புலிகளின் நடவடிக் கைகள் தொடர்பான தகவல்கள் சிங்கள அரசுக்கு இந்திய அரசினால் வழங்கப்பட்டு வந்தன. தமிழ்நாட்டுக் கரையோரங்களில் வான்பாதுகாப்பு ராடர்களை நிறுவியதன் மூலம் வான்புலிகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களை தடுக்கும் முயற்சி களிலும் இந்தியா ஈடுபட்டிருந்தது.சமரச முயற்சியிலிருந்து நார்வே அகற்றப்பட்டபோது இந்தியா மகிழ்ந்தது. இலங்கையின் ஆட்சியாளர்கள் இனி இந்தியாவை நம்பியிருப்பதைத் தவிர வேறுவழியில்லை என கருதியது. ஆனால் இந்தியாவுக்கு பிராந்திய எதிரிகளாக உள்ள சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளை நோக்கியே இலங்கை நகர்ந்ததே தவிர இந்தியாவை நாடி வரவில்லை.

இந்தியாவின் துரோகம்

குதிரை கீழே தள்ளியதல்லாமல் குழியையும் பறித்த கதையாக ஈழத் தமிழர்களுக்கு எதிரான போரில் சிங்கள இராணுவத்திற்கு எல்லாவகையிலும் உதவி செய்த இந்தியா அந்நாட்டின் போர்க் குற்றங்களை மறைக்கவும் உதவியுள்ளது

இலங்கையில் நடைபெறும் மனித உரிமைகள் சீர்குலைவு பற்றி ஆராய 2009 அன்று மே இறுதியில் 20 நாடுகளின் ஆதரவுடன் சுவிட்சர்லாந்து நாடு ஒரு விண்ணப்பத்தை அனுப்பி வைத்தது. சுவிட்சர்லாந்து விண்ணப்பத்தை மறுத்து இலங்கைத் தூதர் ஒரு தீர்மானத்தை அனுப்பினார். இலங்கயின் தீர்மானத்தில் ஒரு நாட்டின் உள்நாட்டு நடவடிக்கை களில் மற்ற நாடுகள் தலையிடக்கூடது என வற்புறுத்தப்பட்டது. ஆனால் சுவிட்சர் லாந்து நாட்டின் தீர்மானத்திற்கு பெரும்பான்மை நாடுகளின் ஆதரவு இல்லை என்பதால் இலங்கை அரசின் தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப் பட்டது. 27-5-09 அன்று நடைபெற்ற அய்.நா மனித உரிமை அமைப்பின் கூட்டத்தில் இலங்கை தீர்மானத்திற்கு 29 நாடுகளின் ஆதரவும் 12 நாடுகளின் எதிர்ப்பும் இருந்தன. 6 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.சுவிட்சர்லாந்து நாட்டின் தீர் மானத்தை முதலில் மனித உரிமை அமைப்பு எடுத்துக்கொண்டபோது. இந்தியா அதை எதிர்த்து வெளிநடப்பு செய்தது. இலங்கை தீர்மானம் குறித்த வாக்கெடுப்பில் இந்தியா, சீனா, பாகிஸ்தான் இணைந்து திரட்டிய ஆதரவின் பேரில் 29 நாடுகள் வாக்களித்தன

இலங்கையில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட விவரமும் 3 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எந்த அடிப்படை வசதியும் இல்லாத முகாம்களில் அடைக்கப்பட்டு சித்ர வதை செய்யப்படுவதும். அண்டை நாடான இந்தியாவிற்கு தெரியாமல் இல்லை. அப்படியிருந்தும் இந்தியா இலங்கைக்கு ஆதரவாகச் செயல் பட்டிருப்பது மன்னிக்க முடியாத ஒன்றாகும்

அதுமட்டுமல்ல 2008ஆம் ஆண்டு மே மாதத்தில் இதே மனித உரிமை அமைப்புக்கு 4 நாடுகளை தேர்ந் தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் இலங்கையும் போட்டி யிட்டது. உலகிலேயே மனித உரிமைகளை மிகவும் சீரழிக்கும் நாடான இலங்கைக்கு உலக நாடுகள் எதுவும் ஆதரவு தரக் கூடாது என உலக அளவில் இயங்கிய முக்கியமான மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இத்தேர்தலில் இந்தியா இலங்கையையே ஆதரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இலங்கை படுதோல்வியடைந்தது.இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற மனித உரிமை மீறல்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என அய்.நா. மனிதஉரிமை விவகாரங்களுக்கான ஆணையாளர் நவநீதம் பிள்ளை 6-6-09 அன்று வலியுறுத்தி இருந்தார். அவரின் இந்த கருத்துக்கு அய்.நா மனித உரிமைக் குழுவின் இந்தியப் பிரதிநிதி கோபிநாத் அச்சம் குளங்கரே கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.ஈழத்தமிழர் பிரச்சினை தனக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத இன்னொரு நாட்டு பிரச்சினைபோல இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை அமைக்கப்பட்டி ருப்பதுதான் இதற்குக் காரணமாகும். அதிலும் குறிப்பாக வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி எல்லா வகையிலும் இராசபக்சேயின் அரசை வருடிக் கொடுப்பதையும், குளிர்விப்பதையும் நோக்கமாகக் கொண்டிருந்தார். சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் நடுவில் இந்திய நாடாளுமன்றக் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பேசும்போது இலங்கை அரசும் விடுதலைப்புலிகளும் போரை கைவிட்டு விட்டு பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் எனக் குறிப்பிட்டார். ஆனால் இதை அடுத்து இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து பிரணாப் முகர்ஜி மக்களவையில் அளித்த அறிக்கையில் "இலங்கை இனப் பிரச்சினை அண்டை நாட்டின் பிரச்சினை, இதில் தலையிடவோ அல்லது போரை நிறுத்துங்கள் என கட்டளையிடவோ இந்தியாவுக்கு அதிகாரமில்லை" எனக் குறிப்பிட்டார். இதனால் இராசபக்சே அரசு மேலும் துணிவுபெற்றது. ஆகவேதான் அவர் ஒருமுறை அல்ல பலமுறை கீழ்க்கண்ட இரண்டு கருத்துக்களை திரும்பத் திரும்பக் கூறினார்

1. போர் நிறுத்தம் செய்யும்படி இந்திய அரசு ஒருபோதும் இலங்கையிடம் கூறவில்லை.2. விடுதலைப்புலிகளுக்கு எதிராக இந்தியா நடத்தவேண்டிய போரை, இலங்கை நடத்துகிறது.இராசபக்சே யாரோ எவரோ அல்ல. ஒரு நாட்டின் அதிபர். அவர் மேற்கண்டவாறு பலமுறை கூறியதை இந்திய அரசு ஒருபோதும் மறுக்கவில்லை. ஏன்? அப்படியானால் அதன் பொருள் என்ன?தமிழ்நாட்டு மக்களை ஏமாற்று வதற்காக தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் போர் நிறுத்தம் செய்யும்படி இலங்கை அரசை இந்திய அரசு வற்புறுத்தி இருப்பதாக பலமுறை கூறினார்.9-4-09 அன்று இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் தமிழக முதலமைச்சர் கருணாநிதி அண்ணா சமாதியில் சாகும் வரை உண்ணா நோன்பை மேற்கொண்டார். 5 மணி நேரத்தில் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாக இந்திய அரசிடமிருந்து செய்தி வந்திருப்பதாகக் கூறி உண்ணாநோன்பை முடித்துக் கொண்டார். ஆனால் அன்றைய தினமே சிங்கள இராணுவமானது அப்பாவி தமிழர்கள் மீது விமானகுண்டு வீசி தாக்குதல் நடத்தி ஆயிரக்கணக் கானவர்களை கொன்று குவித்தது என்பதுதான் உண்மை. ஆக திரும்பத் திரும்பத் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதற்காக இது போன்ற நாடகங் களை இந்திய அரசும் தமிழக முதல்வரும் நடத்தினார்களே தவிர, அங்கு உண்மை யில் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கு உரிய நடவடிக்கைகள் எதையும் இவர்கள் மேற்கொள்ளவில்லை என்பதை இராச பக்சேயின் கூற்றும் அம்பலப்படுத்தியது.

தமிழகத்தின் கடமை

தமிழீழப் பிரச்சினையை சர்வதேச மயப்படுத்துவதற்கான முழுப் பொறுப்பும் தமிழ்நாட்டு மக்களிடம்தான் உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 6 மாத காலமாக நடைபெற்றுவந்த போராட்டங்களும் அவற்றின் விளைவாக உருவான எழுச்சியும்தான் உலகத்தமிழர்களின் எழுச்சிமிக்க போராட்டங்களுக்கு அடிப்படையாக அமைந்தன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. எனவே தான் தமிழகத்தின் எழுச்சியை திசை திருப்புவதற்காகவும் மழுங்கடிப்பதற் காகவும் இந்திய அரசின் கொள்கை வகுப் பாளர்களும், இந்திய உளவுத் துறையான "ரா" அமைப்பும் மிகக்கடுமையான முயற்சிகளை தொடர்ந்து மேற் கொண்டனர்.தமிழகத்திலிருந்து ஆயுதங் களையும் வெடிப் பொருட்களையும் புலிகள் கைப்பற்றியதாகவும் தமிழக மீனவர்களைப் புலிகள் கடத்தியதாகவும் "ரா" உளவுத்துறை திட்டமிட்டு பொய்யான செய்திகளைப் பரப்பியது. இதற்கு தமிழக முதலமைச்சர் கருணாநிதியும் முழுமை யான ஒத்துழைப்புக் கொடுத்தார். ஆனாலும் தமிழகத்தின் எழுச்சி கொஞ்சமும் குறையவில்லை. நாளுக்கு நாள் வளர்ந்தோங்கியது. இதன் உச்சக்கட்டமாக தி.மு.க., அ.தி.மு.க. அணி களிலிருந்த பல கட்சிகளும் இந்த இரு அணிகளைச் சாராத கட்சிகளும் ஒன்றி ணைந்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் அமைப்பு ஒன்றினை ஏற்படுத்தி அதன் சார்பில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள், மனிதச் சங்கிலிகள், பேரணிகள், கருப்புக் கொடி ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றை நடத்தின. இதன் விளைவாக ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான எழுச்சி உச்சக்கட்டத்தை அடைந்தது. இதன் விளைவாக தமிழக ஆளும் கட்சிக்கு ஈழப்பிரச்சினையில் ஏதாவது செய்தாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.14-10-08 அன்று முதலமைச்சர் கருணாநிதி அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றிணைக் கூட்டினார். அந்தக் கூட்ட த்தில் இருவாரக் காலத்தில் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட உரிய நடவடிக்கை களை இந்திய அரசு மேற்கொள்ளா விட்டால் தமிழகம் - புதுச்சேரியைச் சேர்ந்த 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவது என்ற தீர்மானம் ஒரே மனதாக நிறைவேற்றப் பட்டது. இந்தத் தீர்மானம் இந்திய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்திற்று. அதே வேளையில் உலகெங்கும் இருந்த தமிழர்கள் உற்சாகமும் புதிய நம்பிக்கை யையும் பெற்றார்கள்.

இதன் விளைவாக பிரதமர் மன் மோகன்சிங் உடனடியாக இலங்கை அதிபர் இராசபக்சேவுடன் தொலைப்பேசியின் மூலம் பேசி போர் நிறுத்தத்தை வலியுறுத்தியதாக செய்திகள் வெளியாயின. இதன் பிறகு வெளியுறவுத்துறை அமைச்சரான பிரணாப் முகர்ஜி சென்னைக்கு வந்து முதலமைச்சர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு தனக்கு மனநிறைவை அளித்திருப்பதாகவும் இந்திய அரசு சரியான வகையில் செயல்படுவதாகவும் அறிவித்த முதலமைச்சர் கருணாநிதி நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகவேண்டிய அவசியம் இல்லை என அறிவித்தார். 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகவேண்டும் என அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் முடிவு செய்தது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை தன்னிச்சையாகக் கைவிடும் அதிகாரம் முதலமைச்சருக்கு இல்லை. மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அக்கூட்டத்தில் பிரணாப்முகர்ஜி தெரிவித்த கருத்துக்களை கூறி அனைத்துக் கட்சித் தலைவர்களின் ஒப்புதலைப் பெற்று அதற்குப் பின்னர் இவர் அறிவித்திருந்தால் சரியானதாக இருந்திருக்கும். ஆனால் அவ்வாறு செய்வதற்கு முதலமைச்சர் தவறிவிட்டார். அனைத்துத் தலைவர்களின் நிர்ப்பந்தத் திற்கு பணிந்து நாடாளுமன்ற உறுப்பினர் கள் பதவி விலகவேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார். ஆனால் மத்திய ஆட்சிக்குப் பணிந்து அக் கருத்தை கைவிட்டுவிட்டார்

உளவியல் சமர்

உலகம் முழுவதிலும் ஏறத்தாழ 9 கோடி தமிழர்கள் பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் இதில் மிக மிக அதிகமான தமிழர்கள் தமிழ்நாட்டில் தான் வாழ்கிறார்கள். இந்த ஆறரைக்கோடி தமிழர்கள் ஈழத்தமிழ் மக்களுக்காக அணி திரளும்போது அதற்கான வலிமை என்பது மிக மிக அதிகமானதாகும். அனைத்து லகத்திலும் அதனால் ஏற்படும் தாக்கம் மிக அதிகமானதாகும். ஒட்டுமொத்த தமிழகமும் அணி திரண்டு ஈழத்தமிழர்களுக்கான ஆதரவுக் கரத்தை நீட்டும்போது இந்திய அரசு மட்டுமல்ல உலகநாடுகளும் சிந்திக்க முற்படும்.ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் அண்மையில் ஏற்பட்ட மாபெரும் எழுச்சி இந்திய அரசின் இரட்டை வேடத்தை உலகத் தமிழர் களுக்கு இனங்காட்டியது. ஈழத்தமிழரை அழித்தொழிக்க சிங்கள பேரின வாதத்திற்குத் துணைபோகும் இந்திய அரசுக்கு எதிராக உலகத் தமிழர்கள் நடுவில் கொதிப்புணர்வு உருவாகியுள்ளது. இதை சிதைக்க வேண்டும் என்று இந்திய அரசின் கொள்கை வகுப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இலங்கையில் புலிகளின் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட நிலையில் புலம்பெயர்ந்த தமிழர்களின் உதவியுடன் மீண்டும் அந்தப் போராட்டம் சிலிர்த்தெழுந்துவிடக்கூடாது என இந்திய அரசு நினைக்கிறது. மீண்டும் விடுதலைப் புலிகளின் எழுச்சி உருவாகி விடக்கூடாது என கருதும் இந்தியா அதற்கான சூழ்நிலைகள் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்களிடமிருந்து வரக்கூடும் என கருதுகிறது.எனவேதான் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மீது உளவியல் ரீதியான சமர் ஒன்று கட்டவிழ்த்து விடப்பட்டு ள்ளது. தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் இருக்கிறாரா? இல்லையா? என்பதைப் பற்றி பல செய்திகள் கட்டவிழ்த்துவிடப்பட்டு அதனடிப் படையில் எழும் விவாதங்கள் விரிவடைந்து நீண்டு செல்ல வேண்டும் என இந்தியா விரும்பு கிறது.இந்திய அரசின் இந்த சதித் திட்டத்தை முறியடிக்கவேண்டிய கடமை தமிழகத் தமிழர்களுக்கு உண்டு. அவர்கள் அதை சரிவரச் செய்வார்களானால் புலம் பெயர்ந்த தமிழர்களும் புத்துணர்வோடும் புதிய நம்பிக்கையோடும் செயல்படுவார்கள். தமிழீழ விடுதலைப்போராட்டத்தை முன்னெடுப்பார்கள்

புலிகளின் போர் நமது போர்

நான்காம் ஈழப்போரில் சிங்கள இராணுவம் வெற்றிப் பெற்று விட்டதாகத் தம்பட்டம் அடிக்கலாம். ஆனால் உலக அளவில் ஈழத் தமிழர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது.

உலகின் முக்கிய நாடுகள் பலவும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது பயங்கரவாதப் பட்டத்தைச் சுமத்தி அதற்குத் தடை விதித்திருக்கும் சூழலில் அந்த நாடுகளில் வாழும் புலம் பெயர்ந்த தமிழர்கள் புலிகள் பயங்கரவாதிகள் அல்லர். அவர்கள் எங்கள் சுதந்தி ரத்தை வென்றெடுக்கப் போராடும் போராளிகள் என உரத்தக் குரலில் முழக்கமிட்டனர். புலிகளுக்கு எதிரான போர் தமிழர்களுக்கு எதிரான போர் என்றும் அவர்கள் உலகிற்குப் பறையறைந்து தெரிவித்தனர்

புலிகளுக்குத் தடை விதித்திருக்கும் நாடுகளில் இலட்சக்கணக்கானத் தமிழர்கள் புலிக் கொடிகளைத் தாங்கி பிரபாகரனின் படங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை பிடித்த வண்ணம் உணர்ச்சி மயமான ஊர்வலங்களை நடத்திய போது அந்த நாடுகளின் காவல்துறையும் சட்டங்களும் திகைத்துத் திணறி நின்றன.

நீண்ட காலமாக தமிழர்களின் போராட்டங்களுக்கு செவி சாய்க்காத உலகம் இன்று புலிக் கொடிகளோடு தமிழர்கள் தெருக்களில் இறங்கிய பிறகுதான் தமிழர் பிரச்னைகளில் கவனத்தைத் திருப்புகிறது.உலக நாடுகளில் மட்டுமல்ல. ஆறரைக் கோடித் தமிழர்கள் வாழும் தமிழ்நாட்டிலும் மக்கள் மாபெரும் எழுச்சிப் பெற்றுள்ளனர். இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசுவதே குற்றம் என அடக்கு முறைச் சட்டங்கள் சீறிப் பாயும் காலக்கட்டத்தில் தமிழகத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் உருவம் பொறித்த பதாகைகளை தூக்கிப் பிடித்த வண்ணம் பல்லாயிரக் கணக்கான மக்கள் தமிழக வீதிகளில் திரண்ட போது ஆளும் வர்க்கம் அதிர்ந்தது. இந்தப் போராட்டங் களைத் தடுக்க அது துணியவில்லை. மக்களும் அடக்குமுறைகளுக்கோ கொடிய ஆள் தூக்கிச் சட்டங் களுக்கோ அஞ்சி ஒடுங்கும் நிலையிலும் இல்லை.தமிழ்நாட்டு மக்களின் இந்த மகத்தான எழுச்சிதான் உலகத் தமிழர்களின் பேரெழுச்சிக்கு வழிகாட்டியது.பெரும் பொறுப்பும் கடமையும் தமிழ்நாட்டுத் தமிழர்களை எதிர்நோக்கி நிற்கின்றன. சாவின் விளிம்பில் நிறுத்தப் பட்டிருக்கும் ஈழத் தமிழினம் நம்மைத்தான் பெருநம்பிக்கையோடு எதிர்நோக்கி நிற்கிறது

2000 ஆண்டு காலத்திற்கு மேற்பட்ட தமிழர் வரலாற்றில் நெருக்கடி யான காலக்கட்டம் இது. இதிலிருந்து ஈழத் தமிழினம் மட்டுமல்ல நாமும் மீண்டாக வேண்டும். நம்மை எதிர்நோக்கி நிற்கும் அறைகூவல்களை துணிவோடு சந்தித்தாக வேண்டிய கட்டம் இது. இந்த காலக் கட்டத்தில் எவ்வித கலக்க மில்லாமலும் சோர்வில்லாமலும் நமது கடமையை நாம் செய்தாக வேண்டும்.இந்திய, சீனா, பாகிஸ்தான் போன்ற அணு ஆயுத வல்லரசுகளின் துணை யோடு போராடும் சிங்கள வல்லரக்கர்களை எதிர்த்து தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் தலைமையில் புலிகளும் ஈழத் தமிழர்களும் களத்தில் போராடி வருகின்றனர். எவ்வளவோ இழப்புகளுக்கு நடுவே உறுதியாக அவர்கள் நிற்கின்றனர். அவர்களுக்குத் தோள் கொடுத்து துணை நிற்க நம்மைத் தவிர வேறு யாரும் இல்லை. இதைத் தவிர நமக்கு வேறு முக்கிய கடமையும் இல்லை.நம்மை குழப்பவும் சோர் வடையச் செய்யவும் பிரபாகரன் குறித்த பொய்யானச் செய்திகளை இந்திய ரா உளவுத் துறையும் ஊடகங்களும் பரப்புகின்றன. நெடி துயர்ந்து நிற்கும் தமிழ்ப் பொதிகை மலை போல அந்தத் தலைவன் களத்தில் காலூன்றி நிற்கிறான். முழுமதியை சில நேரங்களில் மேகங்கள் மறைக்கலாம். ஆனால் நிரந்தரமாக மறைத்து விட முடியாது. முகிலை கிழித்து முழு மதி முன்னிலும் ஒளிவிட்டு மின்னும். தலைவர் பிரபாகரனும் முன்னிலும் அதிகமான துடிப்புடன் நம்மை வழிநடத்துவார்.தமிழர் வரலாற்றில் பிரபாகரனைப் போன்ற ஒரு வீரன் பிறந்ததில்லை என மறைந்த முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதன் அவர்கள் ஒரு முறை மன நெகிழ்ச்சியுடன் கூறினார். கல்லின் மேல் எழுத்துப் போன்ற அந்த சொற்களை மனதில் பதிய வையுங்கள். வாராது போல் வந்த மாமணியாக அந்த தலைவன் வாழும் காலத்திலேயே தமிழீழம் மலரும். அதன் மூலம் உலகத் தமிழர்களுக்கும் விடிவுப் பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் களம் இறங்குவோம். கடமையாற்றுவோம்.தமிழக வரலாற்றில் ஈழத் தமிழர் களுக்கு ஆதரவாகத் தங்களைத் தாங்களே எரித்துக் கொண்ட தியாக சீலர்கள் நம் காலத்தில் வாழ்ந்தார்கள். நம் கண் முன்னாலேயே மறைந்தார்கள். முத்துக் குமார் தொடக்கி வைத்த இந்த தியாக காவியத்தில் தமிழகத்தில் 13 தோழர்களும் வெளிநாடுகளிலும் 3 தோழர்களும் என்றும் அழியாத இடம் பெற்றுள்ளனர். அவர்கள் எதற்காக தங்களைத் தாங்களே அழித்துக் கொண்டார்கள்? வாழ வேண்டிய வயதில் தங்கள் குடும்பங்களை குறித்தோ, வேறு எதைப் பற்றியுமோ சிந்திக்காமல் ஈழத் தமிழ்ச் சகோதரர்களுக்காக தியாகத் தீப்பிழம்புகளாக மாறி எரிந்து சாம்பலான இவர்களின் உன்னதமான தியாகம் ஒரு போதும் வீணாகக் கூடாது. அந்த தியாக தீபங்களின் சுடரொளியில் தமிழகத்தில் பரவியிருக்கும் இருளை அகற்றுவோம். அந்த வழிகாட்டும் ஒளியில் இலட்சியப் பாதையில் முன்னேறுவோம்.
நன்றி தமிழ் முஷ்லீம்
http://thamilislam.blogspot.com/

Sunday, June 28, 2009

எமது தலைவரின் மூத்த மகன் சாள்ஸ் அன்ரனியும் மகள் துவாரகாவும் வீரச்சாவடைந்தனர்:செ.பத்மநாதன்

>> Saturday, June 27, 2009
உலகத் தமிழர் ஆதரவுடன் அரசியல் வழிகளில் இனி நாம் போராட்டத்தை முன்னெடுப்போம்: செ.பத்மநாதன்

தேசியம், தாயகம், சுயநிர்ணய உரிமை என்ற தமிழர்களின் அரசியல் வேட்கைகளுக்காக எமது இயக்கம் ஒரு புதிய பாதையில் இனிப் போராடும். அரசியல் வழியில் போராட்டத்தைத் தொடரும் வகையில் எமது அமைப்பில் நாம் மாற்றங்கள் செய்து வருகின்றோம். அதனடிப்படையில் - புலம்பெயர் தமிழர்களினதும் தமிழ் நாட்டு மக்களதும் ஆதரவுடன் நாம் அனைத்துலக மட்டத்தில் எமது போராட்டத்தை முன்னெடுப்போம் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் அறிவித்துள்ளார்.

நேற்று முன்நாள் வியாழக்கிழமை 'இந்தியா ருடே' குழுமத்தின் 'ஹெட்லைன்ஸ் ருடே'க்கு அவர் வழங்கிய நேர்காணலின் முக்கிய பகுதிகள்:
பிரபாகரன் அவர்களின் மரணம் பற்றிய உண்மைகள் என்ன?
எனக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி, எமது தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சிறிலங்கா படைகளுடனான போரில் மே 17 ஆம் நாள் மாவீரர் ஆனார்.

இறுதி மணித்துளிகள் வரை நீங்கள் தொடர்பில் இருந்தீர்களா? அந்த இறுதி மணித்துளிகள் எப்படியாக இருந்தன?
ஆம், அவரின் தொடர்பு இணைப்புத் துண்டிக்கப்படும் கடைசி மணி நேரம் வரையில் நான் எமது தலைவருடன் தொடர்பில் இருந்தேன். எனது இறுதித் தொடர்பு கேணல் சூசையுடன் இருந்தது. அந்த நேரத்தில் அவர் சிறிலங்கா படையினருடன் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணியை கடைசி மணிவரை வழி நடத்திக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் களத்தில் நடப்பதை விபரமாக அவர் எனக்கு விபரித்தார்.
கடைசி நேரத்தில் சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதல் நிறையக் கோரமும் பயங்கரமும் கொண்டிருந்தது. ஆயிரக்கணக்கான எமது மக்கள் கொல்லப்பட்டும் காயப்பட்டும் இருந்தனர். அங்கே மருத்துவர்களோ, மருத்துவ வசதிகளோ, காயப்பட்டவர்களைக் கவனிப்பதற்கு இருக்கவில்லை. மருத்துவ கவனிப்பு இல்லாமல் மக்கள் இறந்து கொண்டிருந்தனர். எமது தலைவர் சிறிலங்கா இராணுவத்துடன் மோதி ஈழத் தமிழ் தேசியத்துக்காக தமது உயிரைத் தியாகம் செய்து கொண்டிருக்கிறார் எனவும் சூசை தெரிவித்தார்.

பிரபாகரனின் குடும்பத்தில் யார், யார் எஞ்சியுள்ளனர்?
எமக்கு கிடைத்த மிக நம்பகரமான தகவல்களின் படி எமது தலைவரின் மூத்த மகன் சாள்ஸ் அன்ரனியும் மகள் துவாரகாவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் படையணியில் இணைந்து சிறிலங்கா படையினருடனான போரில் இறுதி நேரத்தில் அவர்களும் வீரச்சாவடைந்தனர். இந்தக் கணம் வரை தலைவரின் துணைவியார் மதிவதனியும் இளைய மகன் பாலச்சந்திரனின் கதியும் என்ன என்பது பற்றிய துல்லியமான தகவல் எமக்கு கிடைக்கவில்லை.

'ஹெட்லைன்ஸ் ருடே'க்கு இன்று எரிக் சொல்ஹெய்ம் வழங்கிய பேட்டியில் கடைசிப் போரின் இறுதிக் கணங்கள் வரை தமிழீழ விடுதலைப் புலிகள் தம்முடன் தொடர்பில் இருந்தனர் என்று சொல்லியிருந்தார். ஏனைய உலகத் தலைவர்களுடனும் நீங்கள் தொடர்பு வைத்திருந்தீர்களா?
ஆம். நான் சில உலகத் தலைவர்களுடன் தொடர்பு வைத்திருந்தேன். ஆனால் இராஜதந்திரக் காரணங்களுக்காக அத்தகைய தொடர்புகள் பற்றிய தகவல்களை இந்தத் தருணத்தில் எம்மால் வெளியிட முடியாதுள்ளது.

இந்த முயற்சிகள் ஏன் பயன் தராமல் போயின?
போரை நிறுத்த அர்த்தமான நடவடிக்கைகளை அவர்கள் எடுக்க முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது ஆயுதங்களைக் கீழே வைக்க வேண்டும் என அனைத்துலக சமூகம் தொடர்ச்சியாக வற்புறுத்தி வந்துள்ளது. ஆயுதங்களை கீழே வைக்கும் முன்பாக ஏற்றுக்கொள்ளத்தக்க அரசியல் தீர்வு வைக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எமது தலைமை இருந்தது.
ஆயுதங்களை கீழே வைப்பதற்குப் பதிலாக நாம் ஒரு போர் நிறுத்தத்தையும் அரசியல் தீர்வையும் தேடினோம். தூரதிர்ஷ்டவசமாக எமது கோரிக்கை சிறிலங்கா அரசுக்கு ஏற்க முடியாத காரணத்தால் அனைத்துலக சமூகத்துக்கு அது ஏற்றுக்கொள்ளத்தக்கதாய் இருக்கவில்லை. எனவே போரை நிறுத்த கனதியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
கடைசி நேரத்தில் சிறிலங்கா இராணுவத்தின் கடுமையான மிருகத்தனமான தாக்குதல்களின் காரணமாகவும் மருத்துவ வசதிகளும் இல்லாத காரணத்தால் பொதுமக்களினதும் எஞ்சிய வீரர்களின் உயிரைக் காக்கவும் எமது தலைமை துப்பாக்கிகளை அமைதிப்படுத்தியது.
எமது தலைமை துப்பாக்கிகளை நிறுத்தாது விட்டால் அதனை ஒரு சாட்டாக வைத்து சிறிலங்கா அரசு எமது மக்களின் அழிப்பை நியாயப்படுத்திவிடும் எனக் கவலை கொண்டிருந்தது. துப்பாக்கிகளை அமைதிப்படுத்தும் செய்தி எனக்கு 15 ஆம் நாள் மாலை தெரியப்படுத்தப்பட்டது. அது ஒரு வெள்ளிக்கிழமை. அடுத்த 48 மணி நேரமும் நாம் அனைத்துலக சமூகத்துடன் தொடர்ச்சியாகச் செயற்பட்டு உடனடிப் போர் நிறுத்தத்தை நடைமுறையாக்க முயற்சித்து அதில் எமக்குச் சாதகமான சில பதில்களும் கிடைத்திருந்தன.
மீதமான நாட்கள் வார இறுதியான சனி, ஞாயிறு நாட்களாக இருந்த போதும் அனைத்துலக சமூகத்தின் உறுப்பினர்கள் சிறிலங்கா அரசை போர் நிறுத்தம் செய்ய முயற்சித்தனர். ஆனால், சிறிலங்கா அரசின் பதில் மறுப்பாகவே இருந்தது. சிறிலங்கா அரசும் அதன் படையினரும் இறுதித் தாக்குதலிலும் தமது மிருகத்தனமான அழிப்பிலும் பிடிவாதமாக இருந்தனர்.

இந்தியாவில் உள்ள வைகோ, நெடுமாறன் உட்பட பல தமிழீழ வீடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர்கள் நீங்கள் பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற அறிவித்தலை விடுத்தமைக்காக உங்களைக் கண்டித்துள்ளார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உள்ள சிலரும் பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதை ஏற்க மறுக்கின்றனர். இவற்றை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
நான் தமிழ் மக்களுக்கு விடுத்த செய்தி மிகவும் கெட்டதும் பெரும் துன்பம் நிறைந்ததும் ஆகும். நிச்சயமாக இச்செய்தியை ஏற்கவும் உண்மை என எடுக்கவும் எனக்குப் பல மணி நேரங்கள் பிடித்தது. சில உறுப்பினரும் பெரும் பகுதியான தமிழ் மக்களும் நான் வெளிக்கொணர்ந்த செய்தியை நம்ப முடியாதுள்ளனர். நான் அவர்களின் மனநிலையைப் புரிந்து கொள்கிறேன் அவர்களுக்காக மிகுந்த அனுதாபம் கொண்டுள்ளேன். அவர்களின் நடவடிக்கைகள் உணர்வுகளின் வெளிப்பாடுகளின் காரணமாக உள்ளன. ஓரு பொறுப்பு வாய்ந்த விடுதலை இயக்கமாக நாம் எமது மக்களிடம் இருந்து உண்மைகளை மறைத்து விட முடியாது. அரசியல் ரீதியாகவும் எம் மக்களிடம் இருந்து உண்மைகளை மறைப்பது தவறானதாகும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வன்முறை வழியை கைவிட்டமை அமைப்புக்குள் பரவலான ஆதரவைக் கொண்டுள்ளதா? இது நிரந்தரமானதா அல்லது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீளவும் பின்னால் ஆயுதத்தை எடுக்கும் உரிமையைத் தன்வசம் கொண்டுள்ளதா?
எமது துப்பாக்கிகளின் பாவனையை நிறுத்தும் முடிவு எமது தலைவரால் அவரது மறைவுக்கு முன்னர் எடுக்கப்பட்டதாகும். நாம் இப்போது ஒரு புதிய பாதையை நோக்கி முன்னேறுகிறோம். இந்நிலையானது அமைப்புக்குள்ளே பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. இது தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் நிலைப்பாடு ஆகும்.
எந்த ஒரு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வும் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் கொள்கைகளான, தமிழ்த் தேசியத்தின் அங்கீகாரம், வடக்கு - கிழக்கு தமிழரின் வரலாற்றுத் தாயகம் மற்றும் சுயநிர்ணய உரிமை என்பவற்றை அங்கீகரிப்பதாக அமைதல் வேண்டும்.
தமிழ் மக்களின் இந்த அரசியல் வேட்கைகளை அடையும் வரை எமது அரசியல் போராட்டம் தொடரும். நாங்கள் இந்த நிலைப்பாட்டில் உறுதியாக நிற்போம். நீங்கள் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் தொடக்கத்தில் ஆயுதப் போராட்டம் தோற்றுவதற்கு அடக்குமுறை, ஆக்கிரமிப்பு, அரசியல் முறையான எதிர்ப்புகளையும் ஜனநாயகப் போராட்ட உரிமைகள் என்பனவற்றை அடக்கப்பட்ட மக்களுக்கு மறுத்தமையும், மூலகாரணமாக இருப்பதை இலகுவாக அவதானிக்க முடியும்.
இந்நிலை எமக்கும் ஏற்பட்டது. விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் தமிழ்த் தேசியத்துக்கு ஏற்பட்ட அநீதிகளின் வரலாற்றுப் பிரதிபலனாகும். தமிழீழ விடுதலைப் புலிகள் இப்போது அரசியல் வழியைத் தெரிவு செய்துள்ளனர். மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் பற்றிய கேள்வி வரலாற்றில் தமிழ் மக்களின் உரிமையாக விட்டுவிட விரும்புகிறேன்.

அமைப்புக்கு உள்ளும் வெளியிலும் உள்ள ஆதரவாளர்கள் மத்தியில் இப்போதும் ஆயுதப் போராட்டம் மட்டுமே தமிழ் ஈழம் பெறுவதற்கான ஓரே வழி என நம்பும் மக்களைப் பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?
மூன்று தசாப்த கால ஆயுதப் போராட்ட வழியில் எமது தலைவர் பெரும் சவால்களை எதிர்நோக்கி இருந்தார். அக்காலத்தில் நிலவிய நிலைமைகளுக்குள் பெறக்கூடிய அதிகபட்ச நன்மைகளை பெற்று விட்டார். இலட்சியத்துக்காக மிகவும் பாடுபட்டு உழைத்தவர். சுயநலங்களை அச்சாகக் கொண்டு சுழலும் இந்த உலக இயக்கத்துக்கு எமது ஆயுதப் போராட்டம் அனுதாபத்தைப் பெற முடியாது போய்விட்டது.
மாறாக சிறிலங்கா அரசு இன்றைய உலக நிலைப்பாட்டினையும் பூகோள அரசியல் கட்டமைப்புகளையும் தனது பக்கம் அணிதிரட்டி விட்டதை நாம் பார்த்துள்ளோம். நாம் எமது கொள்கைகளிலும் கோரிக்கைகளிலும் உறுதியாக நின்று அடுத்தகட்டப் போராட்டத்தை அரசியல் வழியில் தொடருவதே எம்முன் இருக்கும் சிறந்த தெரிவாக உள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்குத்துக்குள் பிளவு என்றும் அதற்குள் ஒரு பலப்போர் நடக்கிறது என்றும் கூறப்படும் செய்தி அறிக்கைகள் பற்றி உங்கள் பதில் என்ன?
நான் அதனை மறுக்கிறேன். தலைவரின் மரணச் செய்தி அறிவித்தலால் எமக்குள் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன என்பது உண்மைதான். இந்த விடயத்தில் நாம் ஒரு ஒற்றுமையைக் காண்பதில் வெற்றிபெற முடியவில்லை. ஆனால், உரையாடல் மூலம் அதனைத் தீர்த்துவிட உழைத்து வருகிறோம்.
இனிவரும் காலத்தில் அமைப்பில் உங்களது பங்கு என்னவாக இருக்கும்?
தமிழீழ அமைப்பின் அனைத்துலக உறவுகளுக்கான பிரிவின் தலைவராக நான் எமது அரசியல் இலட்சியங்களை வென்றெடுக்கத் தேவையான அனைத்துலக உறவுகள் எதிர்பார்க்கும் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து நடத்துவேன். நாம் அமைப்பில் மறுசீரமைப்புப் பணிகள் பற்றித் திட்டம் இட்டு வருகிறோம். இது முடிவுற்றதும் தமிழ் மக்களுக்கும் உலகத்துக்கும் அறிவிப்போம்.

எதிர்வரும் காலத்தில் புதிய வன்முறைகள் அற்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் எத்தகைய பங்கை வகிக்கும்?
தமிழ்த் தேசியம், தமிழர் தாயகம், சுயநிர்ணய உரிமை என்ற தமிழர்களின் அரசியல் வேட்கைகளுக்காகப் போராடும். நாம் ஒரு புதிய பாதையைத் தெரிவுசெய்து விட்டபடியால், நாம் எமது அமைப்பை அரசியல் வழியில் போராட்டத்தைத் தொடரும் வகையில் மாற்றம் செய்து வருகிறோம். அதன் எமது ஒரு செயற்பாடாக புலம்பெயர் தமிழர்களினதும் தமிழ் நாட்டிலும் உலகின் வேறு பகுதிகளிலும் உள்ள தமிழ் உறவுகளினதும் ஆதரவுடன் எமது அமைப்பின் மீது உள்ள அனைத்துலக தடையை நீக்குவதற்காக உழைக்க வேண்டி உள்ளது.
அனைத்துலக சமூகம் முக்கியமாக இந்தியாவும் மேற்குலக நாடுகளும் எமது புதிய வழியை வரவேற்று அதற்கு வெகுமதியாக எமது அமைப்பின் மீது உள்ள தடையை நீக்கி எமது அரசியல் செயற்பாட்டுக்கான வாசற் கதவுகளைத் திறந்து விடுவர் என நாம் நம்புகிறோம்.

நாடு கடந்த தமிழ் ஈழ அரசு பற்றி எமக்குக் கூற முடியுமா? ஏனைய வெளியக அரசுகள் பெருமளவு பயனளிக்காத நிலையில் இது எப்படி அவற்றில் இருந்தும் வேறுபடுகிறது?
எமது சட்ட ஆலோசகர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தலைமையில் நாடு கடந்த தமிழ் ஈழ அரசை உருவாக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. நாடு கடந்த அரசுக்கும் வெளியக அரசுக்கும் இடையில் சில கருத்தியல் வேறுபாடுகள் உள்ளன. இதற்கான குழுவின் ஒருங்கிணைப்பாளர் உருத்திரகுமாரன் இக்கேள்விக்கான மேலதிக பதிலை வழங்கக்கூடிய சரியான நபர் என நான் கருதுகிறேன்.

தேர்தலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு நேரடியாகப் பங்குபற்றுவது பற்றிச் சிந்திக்குமா? நீங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்பை தேடியிருக்கிறீர்கள். இந்த உறவு எப்படிச் செயற்படும்?
தேர்தலில் கலந்துகொள்வதில் எந்த நியாயமோ தேவையோ இருப்பது எமக்குத் தெரியவில்லை. அரசியல் வழியில் போரிடுவது என்பது கட்டாயமாகத் தேர்தலில் கலந்துகொள்ள வேண்டும் என்பதல்ல. தமிழர் தேசியம், தமிழர் தாயகம், சுயநிர்ணய உரிமை என்ற கொள்கைகளின் அடிப்படையில் ஒரு அரசியல் தீர்வு கிடைக்கும் வரை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தேர்தல்களில் கலந்துகொள்ளாது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே நாம் தேடவில்லை. ஆனால் நாம் புலத்திலும் தாயகத்திலும் அரசியல் நடவடிக்களின் இணக்கப்பாட்டின் முக்கியத்துவம் பற்றி உணருகிறோம். எப்படி ஒரு பொதுவான புரிந்துணர்வு உருவாகிச் செயற்படும் என்பது பற்றி கருத்து தெரிவிப்பதற்கு இது ஏற்ற தருணம் அல்ல.

அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு நீங்கள் விடுக்கும் செய்தி என்ன?
சிறிலங்கா அரசு தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடித்து இருக்கலாம். ஆனால், அரசியலில் அல்ல. தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான காரணிகள் கவனத்தில் எடுக்கப்படாமலே உள்ளன. சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு இலங்கை மக்களாட்சி பலமான சிங்கள பேரினவாத சர்வாதிகார ஆட்சியாக மாறிவிட்டுள்ளது.
தமிழ் - சிங்கள மக்களை அடக்கும் சாதனங்களாக சிறிலங்காவின் நாடாளுமன்றம் அரசு நீதி பரிபாலனம் செயற்பட்டு வருகின்றன. அண்மையில் இலங்கையில் ஒரு தேசம், ஒரு மக்கள் என்ற அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் கூற்றானது. அந்தத் தீவில் உள்ள தமிழ் - முஸ்லிம் மக்களின் தனித்துவத்தை அங்கீகரிக்காது உள்ளதோடு அங்கே எதிர்வரும் காலத்தில் இன இணக்கப்பாட்டுக்கு எதிர்வரும் காலத்தில் பாரிய பின் விளைவுகளுக்கு வழிசெய்து விடும்.
சிங்கள மேலாதிக்க செயற்பாட்டில் நாட்டை ஆண்டு வரும் நிலையில் அந்தத் தீவில் பெரும்பான்மை சிறுபான்மை இல்லை. ஆனால், தேசப்பற்றாளரும் தேசத் துரோகிகளும் மட்டுமே உள்ளனர் என்பது அபத்தமாக இருக்கிறது. இலங்கை தனது தேசியக் கட்டுமானத்தில் பரிதாபமான தோல்வியைச் சந்தித்து உள்ளதை அரச தலைவர் மகிந்த ராஜபக்ச விளங்கிக்கொள்ள வேண்டும்.
இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வாழும் தமிழர்கள் தம்மை இலங்கையர் என அடையாளப்படுத்த விரும்பாது ஈழத் தமிழர்களாகவே அடையாளப்படுத்த விரும்புகின்றனர். சிறிலங்கா அரசை அந்நிய அரசாகவே தமிழர்கள் கருதுகின்றனர்.
இத்தகைய பின்னணியில் தமிழர்களின் அரசியல் வேட்கைகளான தமிழ்த் தேசியம், வடக்கு - கிழக்கு தமிழர் தாயகம், சுயநிர்ணய உரிமைகளை அங்கீகரித்து ஒரு உண்மையான இணக்கப்பாடு காண்பதே எஞ்சியிருக்கும் தனி ஒரு தெரிவாக உள்ளது.
இப்போது மகிந்த ராஜபக்ச மிகப்பலமான மக்கள் ஆதரவைக் கொண்டுள்ளார். அவர் தமிழ் மக்களின் அரசியல் வேட்கைகளை ஏற்க முன்வரின் சிங்கள மக்களின் எதிர்ப்பு குறைவாக எதிர்நோக்கும் வாய்ப்புகள் உள்ளன. அவர் தம்மை எல்லா இன மக்களையும் சமமாக கருதும் ஒரு உண்மையான தலைவராகக் கருதினால் அவர் தமிழ் மக்களின் அரசியல் வேட்கைகளை அங்கீகரித்து தம்மை நிரூபிக்க வேண்டிய நேரம் இது.
ஈழப் போர் - 4 என இன்று அழைக்கப்படும் போரில் இந்தியாவின் வகிபாகத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்? தமிழ்ப் பொதுமக்களைக் காப்பாற்ற இந்தியாவால் அதிக அளவு செய்திருக்க முடியும் என நினைக்கிறீர்களா?
அண்மைப் போரில் இந்தியா உறுதியாக இலங்கையின் பக்கம் நின்று முழுமையான ஆதரவை வழங்கியது. இது இரகசியமானது அல்ல. சிறிலங்கா தலைவர்களும் இராணுவ அதிகாரிகளும் இந்திய அதிகாரிகளும் பகிரங்கமாக ஏற்றிருந்தனர். எனினும் நாம் இந்தியாவை வெறுக்கவில்லை.
இந்தியாவின் ஏனைய நாடுகளுடனான குறிப்பாக சீனாவுடனான பூகோள அரசியல் போரில் அதற்குத் தமிழ் மக்களின் உண்மையான நம்பகரமான நட்பு இருக்கும் என நாம் கருதுகிறோம். இதனை எதிர்வரும் காலத்தில் இந்தியா உணர்ந்து தமிழ் ஈழ மக்களின் சுயநிர்ணய உரிமைப் போரை ஆதரிக்கும் என நாம் உறுதியாக நம்புகிறோம்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.கருணாநிதியும் ஏனைய அரசியல் தலைவர்களும் நவம்பர் 2008 ஆம் ஆண்டில் விடுத்த வேண்டுதலை ஏற்று இந்தியா போரை நிறுத்தத் தீர்மானித்திருந்தால் பொதுமக்களைப் பாரியளவில் காப்பாற்றியிருக்க முடியும்.

நீங்கள் இந்தியாவுடன் நேரடித் தொடர்பை மேற்கொள்வீர்களா? நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதில் இந்தியாவுக்கு ஏதும் வகிபாகம் இருக்கிறதா?
ஆம். தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி இந்தியாவுடன் நேரடித் தொடர்பு மேற்கொள்ள இருக்கிறேன். தமிழீழ மக்களின் அரசியல் வேட்கைகளை ஆதரிக்கவும் கோருவேன். நாடு கடந்த அரசு அமைப்பு கருத்தியல் நிலையில் உள்ளதால் ஏனைய அரசுகளின் ஆதரவைக் கேட்பது ஒரு முன் நிபந்தனையாக இருக்காது. தேசம் கடந்த அளவில் இது ஒரு புலம்பெயர் தமிழ் மக்கள் மயமான செயற்பாடாகும்.
நிச்சயமாக நட்பு அரசுகளின் ஆதரவு நாடு கடந்த அரசுக்கும் அதன் செயற்பாட்டு நோக்கங்களுக்கும் பலம் சேர்க்கும் என்பதில் சந்தேகம் கிடையாது. தற்காலிக நாடு கடந்த அரசமைப்புக் குழு எல்லா நாடுகளுடனும் முக்கியமாக இந்தியாவுடனும் நாடு கடந்த அரசுக்கான ஆதரவைத் தேடும்.

இலங்கையில் இன்னமும் சில விடுதலைப் புலிகப் போராளிகள் செயற்பாட்டில் இருக்கிறார்கள். அவர்கள் கிழக்கில் காடுகளில் செயற்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. கேணல் ராம் பிரபல தலைவர் எனச் சொல்லப்படுகிறது. இக்குழுவைப் பற்றிய தகவல் ஏதும் உங்களிடம் இருக்கிறதா? இக்குழுக்களிடம் இனிமேல் உங்கள் தொடர்பு என்னவாக இருக்கும்?
எமக்கு அவர்களுடன் தொடர்பு இருக்கிறது. அவர்கள் தமது துப்பாக்கிகளின் பாவனையை நிறுத்தி எமது தலைமையிலான புதிய வழிக்குத் திரும்பி எனது வழிகாட்டலில் உள்ளனர். எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய எதுவித வழிமுறையும் ஏற்படுத்திக்கொள்ள முடியாத காரணத்தால் அவர்களின் பாதுகாப்பு பற்றிய கவலை எனக்கு இருக்கிறது. இது விடயத்தில் அனைத்துலக சமூகம் இந்த விடயத்தில் அதிக பொறுப்பை ஏற்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.

உங்களுக்கு எதிராக சிறிலங்கா அரசு அனைத்துலக பிரச்சாரம் செய்து உங்களைக் கைது செய்யக் கோருகிறது. இந்த நடவடிக்கைகளை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? உங்களுக்கு எதிரான சிறிலங்கா அரசின் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் என்ன?
செய்தித் தாள்களில் இச்செய்தியைப் படித்துள்ளேன். தமிழ்த் தேசியம் தனது சட்ட ரீதியான உரிமைகளை வென்றெடுக்கும் விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தில் நானும் பங்காளியாக உள்ளேன். அனைத்துலக சட்டங்களின்படி இப்போராட்டம் நியாயபூர்வமானது. இராணுவத் தோல்வி போராட்டத்தின் நியாயப்பாட்டை அழித்துவிட முடியாது. நான் எந்தக் குற்றமோ மனிதத்துக்கு கெடுதல் செய்யவோ இல்லை.
மேலும் நான் இப்போது எமது அமைப்பை ஒரு அரசியல் அமைப்பாக மாற்றம் செய்து வருகிறேன். இம் மாற்றத்துக்கான முடிவானது எமது தமிழர்களின் தேசிய நலன் கருதி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேநேரத்தில் அந்தத் தீவில் உள்ள சிங்கள, இஸ்லாமிய மக்களுக்கும் நன்மையளிக்கக் கூடியது.
அந்தத் தீவினதும் பிராந்தினதும் உறுதிப்பாட்டிற்கும் அமைதிக்கும் முக்கியமானது. இந்த விடயத்தில் பாத்திரம் வகிப்போர் இந்த விடயத்தை யதார்த்த நிலையில் அணுகுவார்கள் என நான் நம்புகிறேன். எது எப்படி இருப்பினும் தமிழ் மக்களுக்காக நான் எவ்வித ஆபத்தையும் உயிரையும் கூடத் தியாகம் செய்யச் சித்தமாக இருக்கிறேன்.

பொட்டு அம்மானின் உண்மை நிலை என்ன, சிறிலங்கா அரசு சொல்கிறது அவர் இறந்து விட்டார் எனவும் ஆனால் அதற்கான சான்றுகளைத் தர முடியாது உள்ளனர்?
எமக்கு கிடைத்த தகவல்களின் படி மே 17 ஆம் நாளில் 2009 இல் இடம்பெற்ற சிறிலங்கா படைகளுக்கு எதிரான போரில் அவரும் மாவீரர் ஆனார் என்றே தெரிகிறது.

நன்றி http://thamilislam.blogspot.com/

பிரபாகரன் திராவிட கழகமாக உருவெடுக்கும் - கொளத்தூர் மணி


விடுதலைப் புலிகளின் முப்பத்து மூன்று வருடகால ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டதாக கடந்த மே 18-ம் தேதி இலங்கை அரசு அறிவித்தது.ஆனால் அதற்கு முன்பே அதே மே மாதம் 2-ம் தேதி இலங்கையில் போர் உச்சகட்ட நிலையில் இருந்த-போது, இலங்கைக்கு உதவுவதற்காக 92 வாகனங்களில் ராணுவத் தளவாடங்களையும், பீரங்கி டாங்கி-களை-யும்இந்திய அரசு கொச்சின் வழியாக இலங்கைக்கு அனுப்புவதாகத் தகவல் பரவ, கோவையில் பெரியார் தி.க.வினரும், ம.தி.மு.க.-வினரும் அந்த வாகனங்-களை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சத்திற்குச் சென்ற ஈழ ஆதரவாளர்கள், அந்த வாகனங்களைத் தாக்கி சேதப்படுத்தினர். இந்தச் சம்பவத்திற்காக பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் உள்பட 250 பேர் மீது வழக்கு பதிவு செய்த காவல்-துறை, இதுவரை 75 பேரை கைது செய்துள்ளது. மற்றவர்களையும் தேடி வருகிறது. அது-மட்டுமல்லாமல் கையில் சிக்குபவர்-களையெல்லாம் கைது செய்து, இந்த வழக்கில் சேர்த்து வருவதாகவும் காவல்துறை மீது குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர் ஈழ ஆதரவாளர்கள்.இந்நிலையில் சில தினங்களுக்கு முன் கோவை மத்திய சிறையில் ராமகிருஷ்ணனைச் சந்தித்த மத்திய உளவுத்துறை அதிகாரிகள், இன்னும் போலீஸிடம் சிக்காமல் இருப்பவர்களை அடையாளம் காட்டும்படி மிரட்டியதாகவும் தகவல்கள் உள்ளன. ஈழத்திற்காகப் போராடி வந்தவர்கள், தற்போது ஈழ ஆதரவாளர்களுக்காகப் போராட வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளதாகவும், அதுவும் தமிழக அரசிடம் இருந்து பாதுகாப்பு வேண்டும் என்று வலியுறுத்தியும் கடந்த ஞாயிற்றுக்கிழமை ‘ஈழ ஆதரவாளர் விடுதலை கோரிக்கை மாநாடு’ கோவையில் நடந்தது. மாநாட்டில் கொளத்தூர் மணி, சீமான், ‘கற்றது தமிழ்’ ராம், பாவாணன், வழக்கறிஞர் ரஜினிகாந்த் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.கொளத்தூர் மணி பேசுகையில், “ஈழத்தில் சிங்கள அரசு இனவெறித் தாக்குதலைத் தொடங்கியதிலிருந்தே நாம் இங்கே பொங்கியெழ ஆரம்பித்துவிட்டோம். ஈழ மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு இந்திய அரசே துணை நிற்பதைக் கண்டு தாங்கிக்கொள்ள முடியாமல் முத்துக்குமார் தொடங்கி பதினைந்திற்கும் மேற்பட்ட ஈழ ஆதரவாளர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர். ஈழம் அழிந்து வருவதைப் பொறுக்க முடியாமல் நாம் எல்லோரும் கொதித்துக் கொண்டிருந்த வேளையில், போர் உச்சகட்ட நிலையில் இருந்த-போது, எதற்கும் அஞ்சாமல் மத்திய அரசு தமிழகம் வழியாகவே இலங்கைக்கு ராணுவத் தளவாடங்களை அனுப்பியது. கோவை வழியாக ராணுவ வாகனங்கள் சென்றபோது, மானமுள்ள தமிழர்கள் ஒன்றுகூடி அந்த வாகனங்களை வழிமறித்தனர். ‘எங்கள் வரிப்பணத்தில் எங்கள் இனத்தையே அழிப்பதா!’ என்று மத்திய, மாநில அரசுகளை எச்சரித்தனர்.மத்திய, மாநில அரசுகள் ஆற்ற வேண்டிய கடமையை அவர்கள் செய்யாததால், மக்களே செய்தனர். கடமையைச் சரியாகச் செய்த எங்களுக்குக் கிடைத்த பரிசு தேசிய பாதுகாப்புச் சட்டமா? இந்த அநீதியை இனியும் அனுமதிக்கக் கூடாது. மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு, பெரியார் திராவிட கழகத்தை தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கலாமா என்று ஆலோசித்து வருகிறது. அறிவிக்கட்டுமே! பெயரை மட்டும்தானே அவர்களால் தடை செய்யமுடியும்? அப்படி மத்திய அரசு தடை விதித்தால் பெரியார் திராவிட கழகம், பிரபாகரன் திராவிட கழகமாக உருவெடுக்கும்” என்றார் அதிரடியாக.



மேலும் தகவலுக்கு நன்றி http://puduvaisiva.blogspot.com/

வன்னியில் கடந்த மூன்று மாதத்தில் மட்டும் 53,215 தமிழர்கள் படுகொலை: பிரித்தானிய தமிழர் பேரவை

எழுதியவர்கதிர் on June 9, 2009 பிரிவு: பிரதான செய்திகள்
வன்னியில் சிறிலங்கா அரசாங்கம் நடத்திய இனச்சுத்திகரிப்பில் 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் மே மாதம் வரையான காலப்பகுதியில் 53 ஆயிரத்து 215 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 13 ஆயிரத்து 130 தமிழர்கள் காணாமல் போய் உள்ளனர் என பிரித்தானிய தமிழர் பேரவை அதிகாரபூர்வமாக தெரிவித்திருக்கின்றது.
இது தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை பிரித்தானிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சிறிலங்கா படையினரால் இறுதி மூன்று மாதங்களில் நடத்தப்பட்ட பாரிய இனப்படுகொலையின் போது 53 ஆயிரத்து 215 தமிழ் மக்கள் கொல்லப்பட்டு விட்டனர்.
பிரித்தானிய தமிழர் பேரவை நடாத்திய ஆய்வுகளின் அடிப்படையிலும் திரட்டப்பட்ட நம்பகரமான தகவல்களின் அடிப்படையிலும் அரச மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரபூர்வ வெளியீடுகளின் அடிப்படையிலும் இந்த செய்தியை பேரவை வெளியிடுகின்றது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் வன்னி மண்ணில் 3 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் வாழ்ந்ததை அரச அதிபரின் அறிக்கைகளும் அந்தப் பிரதேசத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அறிக்கைகளும் உறுதி செய்கின்றன.
ஆனால், தற்போது அகதி முகாம்களில் 2 லட்சத்து 76 ஆயிரத்து 785 மக்கள்தான் எஞ்சியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கூறுகின்றது. இந்த அடிப்படையில் தான் நாம் எமது மக்கள் பாரிய தொகையில் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர் என அஞ்சுகின்றோம்.
மேலும் அனைத்துலகத்தின் வேண்டுகோளுக்கு அமைய அரச கட்டுப்பாட்டுப்பகுதிகளுக்குள் வந்து வதை முகாம்களுக்குள் வாடிய 13 ஆயிரத்து 130 அப்பாவித் தமிழர்கள் காணாமல் போய் விட்டனர் என ஐக்கிய நாடுகள் சபை உறுதி செய்துள்ளது.
இந்த தகவல்களின் அடிப்படையில் நாம் எமது உறவுகளில் 53 ஆயிரத்து 215 பேரை மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையிலான ஒரு குறுகிய காலப்பகுதியில் இழந்து நிற்கின்றோம்.
காணாமல் போயுள்ள 13 ஆயிரத்து 130 தமிழர்களை மீட்டுத் தருக!
அரச கட்டுப்பகுதிக்கு சென்றடைந்த மக்களில் 13 ஆயிரத்து 130 பேர் காணாமல் போய் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கூறுகின்றது. இந்த நிலையில் இந்த மக்களை மீட்டுத்தருமாறு பேரவை அனைத்துத் தரப்பையும் கேட்டுக் கொள்கின்றது.
தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக அரசியல் அதிகார ஆசனங்களில் உள்ளவர்கள் காணாமல் போய் உள்ள மக்களை மீட்டுத்தருவதில் காத்திரமான பங்கை செய்யமுடியும் என பேரவை நம்புகின்றது.
இந்தப் பணியில் நாம் ஒவ்வொருவருக்கும் பாரிய பொறுப்பு உள்ளது. முள்வேலியின் பின்னால் நிற்கும் மக்களுக்கு தேவையான சகலவற்றையும் பொறுப்பேற்பது தமிழர் அனைவரினதும் தலையாய கடமையாகும்.
ஐக்கிய நாடுகள் சபை
ருவாண்டாப் படுகொலைகள் நீதியின் முன் நிறுத்தப்பட்ட போது மிகவும் நேர்மையாகவும், நேர்த்தியாகவும் நீதி வழங்கி அதன் மூலம் உலகில் பிரசித்தி பெற்றவரான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையார், தற்போது இலங்கையின் இனப் படுகொலைகளை நீதியின் முன்நிறுத்தப் பாடுபட்டு வருகின்றார்.
அப்படி ஒரு நீதி விசாரனை நடைபெற்றால் இந்த பாரிய படுகொலைகளின் சகல பங்காளர்களும் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். ஆகவேதான் அம்மையாரின் முயற்சியை இந்த நாடுகள் தடுத்து நிறுத்துவதில் முன்நின்று பாடுபடுகின்றன.
இந்த நிலையில் இந்தியா போன்ற நாடுகளின் ஆசீர்வாதத்தினால் சிறிலங்கா மீதான போர்க்குற்ற விசாரணை இயலாததொன்றாகி விட்டது. ஆனாலும் உலகின் நீதியை நிலைநாட்டுவாதில் அம்மையாரின் நேர்மை பாராட்டத்தக்கதாகும்.
அதேவேளையில் ஐக்கிய நாடுகள் சபையின் செயளாளர் திரு. பான் கி மூன், அவருடன் உள்ள அதிகாரிகள் திரு. நம்பியார் மற்றும் திரு. ஹோம்ஸ் ஆகியோரும் மக்களுக்கு ஏற்பட்ட அவலத்தை குறைத்து வெளியிடுவதாக வரும் செய்திகளை பேரவை கவலையோடு நோக்குகின்றது.
பிரித்தானிய மக்களுக்கான வேண்டுகோள்!
இவ்வாறான சூழ்நிலையில் நாம் அனைவரும் ஒன்றாக எமது சக்தியினைத் திரட்டி எமது மக்களுக்கு நடந்த பாரிய படுகொலையை உலகறியச் செய்யவேண்டும்.
காணாமல் போதலை உடனடியாக தடுக்க வேண்டும்; வெளியேறிவந்த மக்களை ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையில் அனைத்துலக சமூகம் பொறுப்பேற்று அவர்களின் இயல்பு நிலை வாழ்க்கைக்கு உத்தரவாதம் தரவேண்டும் என வலியுறுத்தவேண்டும்.
இந்த பாரிய படுகொலையை உலகறியச் செய்வதோடு, காணாமல் போய் உள்ளதாகக் கூறப்படும் மக்களை மீட்க அனைத்துலகத்தை வலியுறுத்தவும், முள்வேலியின் பின்னால் நிற்கும் மக்களின் அவலத்தைப் போக்க ஆவண செய்யவேண்டும் எனவும் வலியுறுத்தி மாபெரும் பேரணியை பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடு செய்துள்ளது.
இந்தப் பேரணி எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் நாள் சனிக்கிழமை லண்டனில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போராட்டத்தில் மரணித்த உறவுகளுக்கு வணக்கம் செலுத்தவும் அவர்களின் மரணத்திற்கு நீதி கேட்கவும் பிரித்தானியா வாழ் தமிழ் உறவுகள் அனைவரையும் பேரவை அன்போடு அழைக்கின்றது.
முள்வேலியின் பின்னால் நின்று எமது மக்கள் புலத்தினைப் பார்த்த வண்ணம் உள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

நன்றி மீனகம்.ஆர்க் http://www.meenagam.org/
இலட்சியம் நோக்கிய பயணம் தொடரட்டும், மனிதாபிமானக் குரல்கள் உரத்து ஒலிக்கட்டும்: விடுதலைப் புலிகள்
எழுதியவர்கதிர் on June 9, 2009 பிரிவு: பிரதான செய்திகள்
தமிழீழத் தேசியத்திற்கு உரமூட்டி, அதற்கான குறியீடுகளையும் விழுமியங்களையும் உருவாக்கி அதை உலகத் தமிழர்களுக்கு மாத்திரமன்றி முழு உலக சமுதாயத்திற்குமே எடுத்துக்காட்டி எம்மை நாமே ஆளுவதற்கான சகல தகைமைகளும் வாய்ந்த மக்கள் நாம் என்று முரசறைந்து நாம் மேற்கொண்ட விடுதலைப் பயணம் இன்று ஒரு வரலாற்றுச் சவாலை எதிர்கொண்டு நிற்கிறது.
இச் சவாலைத் துணிகரமாக எதிர்கொண்டு முறியடித்து ஒருமித்து நின்று விடுதலையை நோக்கிய எமது பயணத்தைத் தொடரவேண்டும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவர்கள் வெளியிட்டு அறிக்கை:
தமிழீழ மக்களாகிய நாம் இலங்கைத் தீவில் தன்னாட்சி (சுயநிர்ணய) உரிமை கொண்ட ஒரு தனித்துவமான தேசிய இனம்.
இலங்கைத்தீவின் வடக்கு-கிழக்கில் எமது பாரம்பரியத் தாயகத்தின் இறைமை பொருந்திய விடுதலையை வென்றெடுக்க வேண்டும் என்ற எமது அரசியல் இலக்கை நோக்கி ஒப்பற்ற அர்ப்பணிப்புக்களுடன் போராடி வருகின்ற மக்கள் நாம்.
எமது உரிமைப் போராட்டம் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக அமைதிமுறையில், ஜனநாயக வழிமுறைகளுக்கு உட்பட்டு முன்னெடுக்கப்பட்டதில் நாம் கண்ட பட்டறிவு சிறிலங்காவின் அரசியலமைப்புக்கு உட்பட்டு எமது அரசியல் அபிலாசைகளுக்கான தீர்வை வென்றெடுப்பதற்கு சிங்களப் பேரினவாதம் இலகுவில் முன்வரப்போவதில்லை என்பதே. இந்தப் பட்டறிவின் விளைவே தந்தை செல்வா அவர்களை இறைமையுள்ள தமிழீழமே எமது அரசியல் விடுதலைக்கான ஒரே வழி என்று தீர்மானிக்கவைத்தது. இதற்கான ஜனநாயக ரீதியிலான மக்கள் ஆணையை நிலைநாட்டியவரும் அவரே.
இதைத் தொடர்ந்து மூன்று தசாப்தங்களாக நடைபெற்றுவந்துள்ள தேசிய விடுதலைக்கான ஆயுதப் போரில் இந்த மக்கள் ஆணையை எமது விடுதலை இயக்கத்தின் தலைவரும் தேசியத்தலைவருமான மேதகு வே. பிரபாகரன் அவர்கள் முழுமூச்சாக முன்னெடுத்து தமிழீழ அரசை எமது கண்முன்னே நிறுவி, அதன் விடுதலைக்கான போராட்டத்தை ஒப்பற்ற அர்ப்பணிப்புக்கூடாக வலுப்படுத்தி, தமிழீழ மக்களின் ஆணையை சர்வதேசமயப்படுத்தியுள்ளார்.
தமிழீழத் தேசியத்திற்கு உரமூட்டி, அதற்கான குறியீடுகளையும் விழுமியங்களையும் உருவாக்கி அதை உலகத் தமிழர்களுக்கு மாத்திரமன்றி முழு உலக சமுதாயத்திற்குமே எடுத்துக்காட்டி எம்மை நாமே ஆளுவதற்கான சகல தகைமைகளும் வாய்ந்த மக்கள் நாம் என்று முரசறைந்து நாம் மேற்கொண்ட விடுதலைப் பயணம் இன்று ஒரு வரலாற்றுச் சவாலை எதிர்கொண்டு நிற்கிறது. இச் சவாலைத் துணிகரமாக எதிர்கொண்டு முறியடித்து ஒருமித்து நின்று விடுதலையை நோக்கிய எமது பயணத்தைத் தொடரவேண்டும்.
எமது தாயக மண் எதிரியின் முழுமையான ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள இன்றைய நிலையில் தமிழீழத் தேசியத்தைப் பிரதிபலித்து அதன் இறைமைக்கும் சுதந்திரத்துக்குமான அரசியல் இலக்கை வென்றெடுப்பதற்கு அரசியல் ரீதியாகப் பெரும்பங்காற்றவேண்டிய நிலையில் உலகத் தமிழர்கள், குறிப்பாக புலம்பெயர் ஈழத்தமிழர்களாகிய நாம், எமது வரலாற்றுக் கடமையின் பொறுப்பை உணர்ந்தவர்களாகச் செயலாற்றவேண்டும்.
தாயகத்தில் சொல்லொணாத் துயருறும் எமது உடன்பிறப்புக்களின் துயர்துடைக்கும் மனிதாபிமானக் குரலை ஓங்கி ஒலிக்கச்செய்வதற்கும், உலக மனிதாபிமானத்தின் கண்களை எமது மக்களின் இன்னல்களை நோக்கித் திருப்புவதற்கும் முழுமூச்சாக காலதாமதமின்றி உழைக்கவேண்டிய உடனடிக்கடமை எம்முன்னால் உள்ளது.
மனிதாபிமானக் கட்டமைப்புக்களையும், பரப்புரை வேலைகளையும் உரிய முறையில் நெறிப்படுத்தும் வேலைத்திட்டங்களைத் துரிதப்படுத்தப்படவேண்டிய காலம் இது.
இந்த வரலாற்றுத் திருப்புமுனையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துலகத் தொடர்பகம் புலம் பெயர் ஈழத் தமிழ் மக்களின் முழுமையான பங்களிப்பினூடான ஜனநாயகக் கட்டமைப்புக்களைப் பரிணமிக்கச்செய்யும் அரசியல், மனிதாபிமான நடவடிக்கைகளை எதிர்வரும் நாட்களில் கிளைகள் இயங்கும் நாடுகளில் துரிதப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களைச் செயற்படுத்தத் தயாராகிவருகின்றது.
போராட்ட வடிவங்கள் மாறலாம், ஆனால் இலக்கு மாறாது என்ற சிந்தனைக்கமைய, தமிழீழத் தேசிய விடுதலைக்கான போராட்டம் புலம்பெயர் மக்களின் அரசியற் பங்களிப்பினூடாகக் கூர்ப்படைந்துசெல்லவேண்டிய வரலாற்றுத் தேவையை உணர்ந்தவர்களாக, இதயசுத்தியுடன் ஒருமித்த மக்கள் பங்களிப்போடு சங்கமித்து நாம் அனைவரும் ஒன்றிணைந்த ஓர் அனைத்துலகச் சக்தியாய் முன்னெழுவோம்.
இதற்கு முன்னோடியாக, அந்தந்த நாட்டிற்கேயுரிய அரசியற் சிறப்பியல்புகளுக்கு ஏற்ற வகையில் மக்கள் பங்களிப்பை உறுதிசெய்கின்ற நாடு தழுவிய ஜனநாயகக் கட்டமைப்பைப் பரிணமிக்கச் செய்யும் பணியை மேற்கொள்ளுவதற்கும் மக்கள் ஆணையை உறுதிசெய்வதற்குமான வேலைத்திட்டங்களை அந்தந்த நாட்டுக்கிளைகள் முன்னெடுக்கும்.
இந்த ஒழுங்குகளுக்கு தேசியப்பற்றுக்கொண்ட அனைவரையும் பாகுபாடின்றி இதய சுத்தியோடு பங்குகொண்டு ஊக்குவிக்குமாறு தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துலகத் தொடர்பகம் இத் தருணத்தில் வேண்டிநிற்கிறது.
இந்த வேலைத் திட்டங்களுக்கான கருத்துப் பரிமாறல்களுக்கும், ஒன்றுகூடல்களுக்கும் கிளைப் பொறுப்பாளர்களை அணுகுமாறு வேண்டுகிறோம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
இவ்வண்ணம்,
பொ.செம்மலை
தாயக ஒருங்கிணைப்பாளர்
அனைத்துலகத் தொடர்பகம்

நன்றி மீனகம்.ஆர்க் http://www.meenagam.org/