Saturday, August 14, 2010

ஆகஸ்டு 15 - வரலாற்றில் இன்று

நிகழ்வுகள்

1040 - ஸ்கொட்லாந்தின் மன்னன் முதலாம் டங்கன் மக்பெத்துடனான போரில் கொல்லப்பட்டான்.

1057 - ஸ்கொட்லாந்தின் மன்னன் மக்பெத் மூன்றாம் மால்க்கமுடனான போரில் கொல்லப்பட்டான்.

1915 - பனாமா கால்வாய் திறக்கப்பட்டது.

1920 - வார்சாவில் இடம்பெற்ற போரில் போலந்து இராணுவத்தினர் சோவியத் படைகளை வென்றனர்.

1945 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பான் சரணடைந்தது.

1945 - இரண்டாம் உலகப் போர்: கொரியா விடுதலை பெற்றது.

1947 - முகமது அலி ஜின்னா பாகிஸ்தானின் முதலாவது ஆளுநராகப் பதவியேற்றார்.

1947 - இந்தியா பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்று பொதுநலவாய அமைப்பின் கீழ் தனி நாடாகியது. ஜவகர்லால் நேரு முதலாவது தலைமை அமைச்சர் ஆனார்.

1948 - தென் கொரியா உருவாக்கப்பட்டது.

1950 - அஸ்ஸாமில் நிலநடுக்கம் மற்றும் வெள்ளம் காரணமாக 574 பேர் பலி, 5,000,000 பேர் வீடிழந்தனர்.

1960 - கொங்கோ குடியரசு பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1973 - வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்கா கம்போடியா மீதான குண்டுவீச்சை நிறுத்தியது.

1975 - வங்காள தேசத்தில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் ஷேக் முஜிபுர் ரகுமான் மற்றும் அவரது குடும்பத்தினர் (ஷேக் ஹசீனா தவிர) அனைவரும் கொல்லப்பட்டனர்.

1977 - இலங்கையில் தமிழருக்கெதிரான இனப்படுகொலை நடவடிக்கையான ஆவணிப் படுகொலை ஆரம்பித்தது. 400ற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டு 10,000 பேர் வரை காயமடைந்தனர்.

1984 - துருக்கியில் குர்து மக்கள், குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி, இராணுவத்திற்கெதிராக கெரில்லா போரை ஆரம்பித்தன்னர்.

2005 - இந்தோனேசிய அரசாங்கத்துக்கும் ஆச்சே விடுதலை இயக்கத்திற்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஹெல்சிங்கியில் கைச்சாத்தானது.

2007 - பெருவில் இடம்பெற்ற 8.0 அளவு நிலநடுக்கத்தில் 514 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புக்கள்

1769 - நெப்போலியன் பொனபார்ட், பிரெஞ்சு மன்னன் (இ. 1821)

1872 - ஸ்ரீ அரவிந்தர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர், ஆன்மிகவாதி (இ.1950)

1958 - அர்ஜூன், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்

1961 - சுஹாசினி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

இறப்புகள்

1975 - ஷேக் முஜிபுர் ரகுமான், வங்காள தேச அதிபர் (பி. 1920)

சிறப்பு நாள்

இந்தியா - விடுதலை நாள் (1947)

தென் கொரியா - விடுதலை நாள் (1948)

கொங்கோ - விடுதலை நாள் (1960)

Monday, August 9, 2010

ஆகஸ்டு 9- வரலாற்றில் இன்று

நிகழ்வுகள்

கிமு 48 - ஜூலியஸ் சீசர் பம்பீயை சமரில் தோற்கடித்தான். பம்பீ எகிப்துக்கு தப்பி ஓடினான்.

378 - ரோமப் பேரரசன் வேலென்ஸ் தலைமையிலான பெரும் படை எகிப்தில் தோல்வியடைந்தது. மன்னனும் அவனது பாதிப்பங்குப் படையினரும் கொல்லப்பட்டனர்.

1048 - 23 நாட்களே பதவியில் இருந்த பின்னர் பாப்பரசர் இரண்டாம் டமாசஸ் இறந்தார்.

1173 - பீசா சாயும் கோபுரத்தின் கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. இது இரு நூற்றாண்டுகளுக்குப் பின்னரே முடிவுற்றது.

1655 - ஒலிவர் குரொம்வெல் பிரபு இங்கிலாந்தை ஒன்பது மாகாணங்களாகப் பிரித்தார்.

1842 - ஐக்கிய அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையில் ரொக்கி மலைகளின் கிழக்குப் பகுதியில் எல்லைகளுக்கான உடன்பாடு எட்டப்பட்டது.

1892 - தோமஸ் அல்வா எடிசன் தனது இருவழி தந்திக்கான காப்புரிமம் பெற்றார்.

1902 - ஏழாம் எட்வேர்ட் ஐக்கிய இராச்சியத்தின் மன்னனாக முடிசூடினான்.

1902 - யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் ரோமன் கத்தோலிக்க ஆலயம் ஒன்றும் பாடசாலை ஒன்றும் இந்துக்களால் தாக்கி அழிக்கப்பட்டன.

1907 - இங்கிலாந்தில் பிறௌன்சி தீவில் ஆகஸ்ட் 1 இல் ஆரம்பிக்கப்பட்ட சாரணிய இயக்கத்தின் முதல் பாசறை முடிவடைந்தது.

1942 - வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் துவக்கியதற்காக மகாத்மா காந்தி உட்படப் பல இந்திய காங்கிரஸ் தலைவர்கள் பம்பாயில் கைது செய்யப்பட்டார்.

1945 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானிய நகரான நாகசாக்கியின் மீது ஐக்கிய அமெரிக்கா வீசிய கொழுத்த மனிதன் எனப் பெயரிடப்பட்ட அணுகுண்டு 70,000
முதல் 90,000 வரையான பொதுமக்களை அதே இடத்தில் கொன்றது.

1965 - சிங்கப்பூர் மலேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து தனி நாடாகியது.

1965 - ஆர்கன்சசில் டைட்டான் ஏவுகணைத் தளத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் 53 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

1974 - வாட்டர்கேட் ஊழல்: அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் பதவி விலகினார்.

1991 - யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் ஜூலை 10இல் ஆரம்பித்த ஆனையிறவு இராணுவ முகாமின் மீதான தாக்குதல் முடிவுக்கு வந்தது. இச்சமரில் 604 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். எனினும் 2000ம் ஆண்டில் மீளத் தாக்குதல் மேற்கொண்டு தளத்தைக் கைப்பற்றினர்.

2006 - திருகோணமலைப் பகுதியில் தமிழ் மக்கள் வெருகல் ஊடாக இடம் பெயர்ந்தபோது விமானத் தாக்குதலுக்குள்ளாகியும் எறிகணைத் தாக்குதலாலும் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

பிறப்புக்கள்

1776 - அமேடியோ அவகாதரோ, இத்தாலிய வேதியியலாளர் (பி. 1856)

1974 - மகேஷ் பாபு, தெலுங்கு திரைப்பட நடிகர்

இறப்புகள்

1962 - ஹேர்மன் ஹெசே, நோபல் பரிசு பெற்ற ஜேர்மனிய எழுத்தாளர் (பி. 1877)

1969 - செசில் பிராங்க் பவெல், நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய இயற்பியலாளர் (பி.
1903)

1975 - திமீத்ரி சொஸ்தகோவிச், ரஷ்ய இசையமைப்பாளர் (பி. 1906)

2000 - ஜோன் ஹர்சானி, நோபல் பரிசு பெற்ற ஹங்கேரிய பொருளியலாளர் (பி. 1920)

சிறப்பு நாள்

சிங்கப்பூர் - விடுதலை நாள் (1965)

தென்னாபிரிக்கா - தேசிய பெண்கள் நாள்

Sunday, August 8, 2010

ஆகஸ்டு 7- வரலாற்றில் இன்று

நிகழ்வுகள்

கிமு 322 - மகா அலெக்சாண்டர் இறந்ததைத் தொடர்ந்து ஏதென்சுக்கும் மக்கெடோனியர்களுக்கும் இடையில் "கிரான்னன்" என்ற இடத்தில் போர் இடம்பெற்றது.

1461 - மிங் வம்ச சீன தளபதி காவோ சின் செங்டொங் பேரரசருக்கு எதிராக இராணுவப் புரட்சியை நடத்தி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டான்.

1819 - கொலம்பியாவின் "பொயாக்கா" என்ற இடத்தில் ஸ்பானியர்களுக்கு எதிரான போரில் சிமோன் பொலிவார் பெரு வெற்றி பெற்றான்.

1832 - இலங்கையில் சேமிப்பு வங்கி ஆரம்பிக்கப்பட்டது.

1898 - யாழ்ப்பாணம் மானிப்பாயில் டாக்டர் ஸ்கொட் தலைமையில் மானிப்பாய் மருத்துவமனை புதிய கட்டிடத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

1906 - கல்கத்தாவில் வங்காளப் பிரிவினை எதிர்ப்புப் போராட்டத்தின் போது முதல் இந்திய தேசியக் கொடி உருவாக்கப்பட்டு பார்சி பகான் சதுக்கத்தில் ஏற்றப்பட்டது.

1927 - ஒன்டாரியோவுக்கும் நியூயோர்க்கிற்கும் இடையில் அமைதிப் பாலம் அமைக்கப்பட்டது.

1933 - ஈராக்கில் சுமைல் கிராமத்தில் 3,000 அசிரியர்கள் ஈராக்கிய அரசால் படுகொலை செய்யப்பட்டனர்.

1942 - இரண்டாம் உலகப் போர்: குவாடல்கனால் போர் ஆரம்பம். அமெரிக்க கடற்படையினர் சொலமன் தீவுகளின் குவாடல்கனால் தீவில் தரையிறங்கினர்.

1944 - திட்டப்படுத்தப்பட்ட முதலாவது கணிப்பானை (ஹார்வார்ட் மார்க் I) ஐபிஎம் நிறுவனம் வெளியிட்டது.

1945 - இரண்டாம் உலகப் போர்: ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசப்பட்டதை அமெரிக்க அதிபர் ஹரி ட்ரூமன் அறிவித்தார்.

1955 - சொனி நிறுவனம் தனது முதலாவது திரிதடைய வானொலியை ஜப்பானில் விற்க ஆரம்பித்தது.

1960 - கோட் டி ஐவரி பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.

1976 - வைக்கிங் 2 விண்கலம் செவ்வாயின் சுற்று வட்டத்துள் சென்றது.

1998 - தான்சானியாவிலும் கென்யாவிலும் அமெரிக்க தூதரகங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 224 பேர் கொல்லப்பட்டு 4,500க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.

2006 - இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர் சிவப்பிரகாசம் மரியதாஸ் என்பவர் திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்டார்.

பிறப்புக்கள்

1925 - எம். எஸ். சுவாமிநாதன், இந்திய அறிவியலாளர்

1933 - வைஜயந்திமாலா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை.

1948 - கிறெக் சப்பல், ஆஸ்திரேலியத் துடுப்பாளர்

1966 - ஜிம்மி வேல்ஸ், விக்கிப்பீடியாவை ஆரம்பித்தவர்

இறப்புகள்

1941 - இரவீந்திரநாத் தாகூர், மகாகவி, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1861)

சிறப்பு நாள்

கோட் டி ஐவரி - விடுதலை நாள் (1960)

இரவீந்திரநாத் தாகூர் இறப்பு

Friday, August 6, 2010

ஆகஸ்டு 6- வரலாற்றில் இன்று

நிகழ்வுகள்

1661 - போர்த்துக்கல்லுக்கும் டச்சுக் குடியரசுக்கும் இடையில் டச்சு பிரேசில் தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டது.

1806 - கடைசி புனித ரோமப் பேரரசன் இரண்டாம் பிரான்சிஸ் நெப்போலியனுடனான போரில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அப்பேரரசு முடிவுக்கு வந்தது.

1825 - பொலிவியா ஸ்பெயினிடமிருந்து விடுதலை அடைந்தது.

1914 - முதலாம் உலகப் போர்: ஜெர்மனியின் 10 கடற்படை படகுகள் பிரித்தானியப் படகுகளைத் தாக்கவென வட கடலை நோக்கிப் புறப்பட்டன.

1914 - முதலாம் உலகப் போர்: சேர்பியா ஜேர்மனி மீதும் ஆஸ்திரியா ரஷ்யா மீதும் போரை அறிவித்தன.

1945 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அமெரிக்கா சின்னப் பையன் என்ற பெயரைக் கொண்ட அணுகுண்ட்டை வீசியது. கிட்டத்தட்ட
70,000 பொதுமக்கள் ஒரே நாளில் கொல்லப்பட்டனர். இதன் தாக்கத்தினால் மேலும் பல்லாயிரக்கணக்கானோர் அடுத்த சில ஆண்டுகளில் இறந்தனர்.

1952 - இலங்கைப் பல்கலைக்கழகம் பேராதனைக்கு இடம் மாறியது.

1960 - கியூபா புரட்சி: அமெரிக்கா கியூபா மீது பொருளாதாரத் தடை விதித்ததை அடுத்து கியூபா தனது நாட்டில் இருந்த அமெரிக்க மற்றும் வெளிநாட்டு மூலதனங்களை நாட்டுடமை ஆக்கியது.

1961 - வஸ்தோக் 2: முதன்முதலாக ஒரு முழு நாள் மனிதன் விண்வெளியில் இருந்த பெருமையை சோவியத் விண்வெளிவீரர் கேர்மொன் டீட்டொவ் பெற்றார்.

1962 - ஜமெய்க்கா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

1964 - அமெரிக்காவில் நெவாடா மாநிலத்தில் உலகின் மிகப் பழமையான மரமாகக் கருதப்பட்ட 4900 ஆண்டு பழமையான புரொமேத்தியஸ் என்ற மரம் வெட்டப்பட்டது.

1991 - உலகளாவிய வலை (WWW) தொடர்பான தனது ஆவணங்களை டிம் பேர்னேர்ஸ்-லீ வெளியிட்டார்.

1996 - செவ்வாயில் இருந்து தோன்றியதாகக் கருதப்படும் ஏ.எல்.எச் 84001 என்ற விண்கல் ஆரம்பகால உயிரினங்கள் பற்றிய தகவலைக் கொண்டிருப்பதாக நாசா அறிவித்தது.

1997 - வட கொரிய போயிங் விமானம் ஒன்று குவாமில் வீழ்ந்ததில் 228 பேர் கொல்லப்பட்டனர்.

2002 - தமிழ்நாடு ஏர்வாடியில் சங்கிலியால் கட்டப்பட்டிருந்த 11 பேர் பெண்கள் உட்பட 28 மன நோயாளிகள் தீ விபத்தில் கொல்லப்பட்டனர்.

2006 - திருகோணமலையில் நோயாளரை ஏற்றி வந்த ஆம்பியூலன்ஸ் வண்டி எறிகணைத் தாக்குதலுக்குள்ளானதில் ஒரு நோயாளி கொல்லப்பட்டார்.

[தொகு] பிறப்புக்கள்

1881 - அலெக்சாண்டர் பிளெமிங், நோபல் பரிசு பெற்ற அறிவியலாளர் (இ. 1955)

1970 - எம். நைட் ஷியாமளன், ஹாலிவுட் இயக்குனர்

இறப்புகள்

1978 - பாப்பரசர் ஆறாம் சின்னப்பர் (பி. 1897)

2009 - முரளி, மலையாள நடிகர் (பி. 1954)

சிறப்பு நாள்

பொலீவியா - விடுதலை நாள் (1825)

ஜமெய்க்கா - விடுதலை நாள் (1962)

ஜப்பான் - டோரோ நாகாஷி - ஹிரோஷிமா அணுகுண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் நினைவு நாள்.

ஹிரோஷிமா நினைவு நாள்



பேரிடர்களையும், அறிவியல் கண்டுபிடிப்புகளில் அதிக அழிவையும் உருவாக்கியவை அணு உலைகளும், அணு குண்டுக்களுமே. இரண்டாம் உலகப்போரில் எல்லாராலும் மறக்க முடியாத பேரழிவை அணுகுண்டு ஏற்படுத்தியது.

1945 - ஆம் ஆண்டு ஆகஸ்டு 6 -ஆம் நாள் அணுகுண்டு என்றால் என்னவென்று அறியாத உலகத்திற்குப் போர் வெறி கொண்ட அமேரிக்கா, சப்பான் நாட்டில் உள்ள கிரோசிமா நகரில் அணுகுண்டு ஒன்றினை வீசி அறிமுகப்படுத்தி, இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட சப்பானியர்களை கொன்றது. அணுகுண்டால் பாதிக்கப்பட்டு, கண் பார்வையற்றவர்கள், உடல் உறுப்புக்களை இழந்தவர்கள் என்று பல நூறு ஆயிரக்கணக்கான் மக்கள் அன்று காணப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானவர்களின் உடல்கள் சிதைந்து காணப்பட்டன.

அணுகுண்டிலிருந்து வெளியான கதிர்வீசுகள் 50 ஆண்டுகள் கழிந்த பிறகும் மனித சமூகத்திற்கு தீங்குகளை விளைவித்துக் கொண்டிருக்கிறது. 2000 போர் வானூர்திகள், 2000 டன் எடை வெடி மருந்துகளை ஒரே நேரத்தில் வீசினால் எத்தகைய பேரழிவுகளை உண்டாக்குமோ அந்த அளவிற்கு ஏற்பட்டதாக அறிவியல் அறிஞர்கள் அளவிடுகின்றனர்.

இன்றும் நரம்புத்தளர்ச்சி, உளவியல் சிக்கல்கள், புற்றுநோய், தோல்நோய் என ஏராளமான நோய்கள் மக்களை தாக்கிவருகின்றன. கதிரியக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் கருவுற்ற பெண்களே. அங்கு பிறக்கின்ற 75 % குழந்தைகள் குறைகளோடு பிறக்கின்றனர்.

இன்று அணுகுண்டு எதிர்ப்பு இயக்கம் உலக அளவிலான ஒரு பேரியக்கமாக வளர்ந்து வருகிறது. 06 .08 .1998 அன்று சப்பானிய மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் கிரோசிமாவில் உள்ள அணுகுண்டு நினைவுத் தூண் முன்பு 53 ஆவது அணுகுண்டு வெடிப்பு நாளை, அணுகுண்டு எதிர்ப்பு உண்ணா நோன்பாக கடைபிடித்தனர்.

02 .08 .1999 முதல் 09 .08 .1999 வரை சப்பானில் ஒரு வார காலம் அணு எதிர்ப்பு மாநாடு கிரோசிமாவில் உள்ள ஆச்டர்பிளாவில் நடைபெற்றது. இதில் 21 நாடுகள், 38 இயக்கங்கள் பங்கெடுத்தன. இவ்வாறாக ஒவ்வொரு ஆண்டும் சப்பானியர்களும் அணு எதிர்ப்பாளர்களும் இந்த நாளில் அடையாள எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இயங்கி வரும் அணு உலைகளையும், அணுகுண்டுகளை உற்பத்தி செய்வோரையும் தடுத்து நிறுத்த உறுதி ஏற்பது நமது கடமை.

ஆகஸ்டு 5- வரலாற்றில் இன்று

நிகழ்வுகள்

1100 - இங்கிலாந்து மன்னனாக முதலாம் ஹென்றி முடி சூடினான்.

1305 - இங்கிலாந்துக்கு எதிராகக் கிளர்ச்சிக்குத்தலைமை வகித்த வில்லியம் வொலஸ் கிளாஸ்கோ அருகில் கைது செய்யப்பட்டு லண்டனுக்குக் கொண்டு செல்லப்பட்டான்.

1583 - சேர் ஹம்பிறி கில்பேர்ட் வட அமெரிக்காவில் இங்கிலாந்துக்கான முதலாவது குடியேற்ற நாட்டை (தற்போதைய) சென் ஜோன்ஸ், நியூபவுண்லாந்தில் அமைத்தார்.

1689 - 1,500 இரக்கேசுக்கள் கியூபெக்கின் லாச்சின் நகரைத் தாக்கினர்.

1806 - இலங்கையில் முகமதியர்களுக்கான திருமணச் சட்ட விதிகள் அரசியல் நிர்ணய சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

1862 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்பினர் லூசியானாவில் மிசிசிப்பி ஆறு வழியே அமெரிக்கப் படைகளை விரட்டினர்.

1870 - புருசியர்களுக்கும் பிரெஞ்சுப் படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற போரில் புருசியா வெற்றி பெற்றது.

1884 - விடுதலைச் சிலைக்கான அடிக்கல் நியூயோர்க் துறைமுகத்தில் பெட்லோ தீவில் நாட்டப்பட்டது.

1914 - ஐக்கிய அமெரிக்காவும் பனாமாவும் கூட்டாக பனாமாக் கால்வாய் ஒப்பந்தத்தைல் கைச்சாத்திட்டன.

1940 - இரண்டாம் உலகப் போர்: லாத்வியா சோவியத் ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது.

1943 - இரண்டாம் உலகப் போர்: ட்ரொய்னா என்ற இடத்தில் போர் இடம்பெற்ற போது காலை 11:00 மணிக்கு எட்னா மலை வெடித்தது. இதன் புகை மண்டலம் பல மைல் உயாரத்துக்குக் கிளம்பியது.

1944 - இரண்டாம் உலகப் போர்: ஆஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கௌரா நகரில் 545 ஜப்பானிய போர்க் கைதிகள் சிறையை உடைத்துத் தப்பிச் செல்ல எத்தனித்தனர்.

1944 - போலந்து தீவிரவாதிகள் அங்கு செயற்பட்டுக் கொண்டிருந்த ஜேர்மனிய தொழிற் பண்ணையொன்றில் இருந்து 348 யூதர்களை விடுவித்தனர்.

1949 - எக்குவாடோரில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 6000 பேர் கொல்லப்பட்டனர். 50 நகரங்கள் அழிந்தன.

1960 - புர்கினா பாசோ (அப்பர் வோல்ட்டா) பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.

1962 - 17 மாதத் தேடுதலின் பின்னர் நெல்சன் மண்டேலா கைது செய்யப்பட்டார். இவர் 1990 வரை விடுவிக்கப்படவில்லை.

1962 – அமெரிக்க நடிகை மரிலின் மன்றோ லாஸ் ஏஞ்ஜெலீசில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.

1963 - ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ஒன்றியம், ஐக்கிய இராச்சியம் ஆகியன காற்று மண்டலம், விண்வெளி, மற்றும் நீருக்கடியில் அணுச் சோதனைகளை நிறுத்த உடன்பட்டன.

1969 - மரைனர் 7 செவ்வார்க் கோளிக்கு மிகக் கிட்டவாக (3,524 கிமீ) சென்றது.

1979 - ஆப்கானித்தானில் மாவோயிஸ்டுகள் இராணுவப் புரட்சி ஒன்றை முன்னெடுத்தனர்.

1989 - நிக்கராகுவாவில் இடம்பெற்ற பொடுத்தேர்தல்களில் சண்டினீஸ்டா வெற்றி
பெற்றது.

2003 - இந்தோனீசியாவின் ஜகார்த்தாவில் மரியட் உணவு விடுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டு 150 பேர் காயமடைந்தனர்.

2006 - வறுமைக்கு எதிரான அமைப்பின் (Action Fiam) என்ற அரச சார்பற்ற அமைப்பின் 15 பணியாளர்கள் மூதூரில் (ஆகஸ்ட் 4 நள்ளிரவில்) இலங்கை இராணுவம் எனச் சந்தேகிக்கப்படுபவர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.

பிறப்புக்கள்

1850 - மாப்பசான், பிரெஞ்சு எழுத்தாளர் (இ. 1893)

1908 - ஹரல்ட் ஹோல்ட், ஆஸ்திரேலியாவின் 17வது பிரதமர் (இ. 1967)

1923 - தேவன் நாயர், சிங்கப்பூர் அதிபர்

1930 - நீல் ஆம்ஸ்ட்றோங், சந்திரனில் காலடிவைத்த முதல் மனிதர்

1968 - நளாயினி தாமரைச்செல்வன், ஈழத்து எழுத்தாளர்

1975 - கஜோல், இந்தித் திரைப்பட நடிகை

1987 - ஜெனிலியா, இந்தியத் திரைப்பட நடிகை

இறப்புகள்

1895 - பிரெட்ரிக் ஏங்கல்ஸ், மாக்சியத் தத்துவவியலாளர் (பி. 1820)

1962 - மாரிலின் மன்றோ, அமெரிக்க நடிகை (பி. 1926)

1984 - றிச்சார்ட் பேர்ட்டன், ஆங்கிலேய நடிகர் (பி. 1925)

1991 - சொயிச்சீரோ ஹொண்டா, ஹொண்டா நிறுவனத்தின் தாபகர் (பி. 1906)

சிறப்பு நாள்

புர்கினா பாசோ - விடுதலை நாள் (1960)

Friedrich Engels


பிரெட்ரிக் ஏங்கல்ஸ்இறப்பு

ஆகஸ்டு 4 - வரலாற்றில் இன்று

நிகழ்வுகள்

70 - ரோமர்களால் ஜெருசலேம் நகரில் இரண்டாவது கோயில் அழிக்கப்பட்டது.

1578 - மொரோக்கர்கள் போர்த்துக்கீசரை போரில் வென்றனர். போர்த்துக்கல் மன்னன் செபஸ்டியான் போரில் கொல்லப்பட்டான்.

1693 - சம்பைன் வைன் கண்டுபிடிக்கப்பட்டது.

1704 - ஆங்கில, டச்சுக் கூட்டுப்படைகளினால் கிப்ரால்ட்டர் கைப்பற்றப்பட்டது.

1789 - பிரான்சில் நிலமானிய முறையை ஒழிக்க அந்நாட்டு சட்டசபை உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்தனர்.

1824 - ஒட்டோமான் பேரரசுக்கும் கிரேக்கர்களுக்கும் இடையில் கொஸ் என்ற இடத்தில் போர் இடம்பெற்றது.

1860 - இலங்கையின் கவர்னராக சேர் சார்ல்ஸ் மக்கார்த்தி நியமிக்கப்பட்டார்.

1902 - தேம்ஸ் ஆற்றின் கீழாக கிரீனிச் நடை சுரங்கம் அமைக்கப்பட்டது.

1906 - சிட்னியில் மத்திய தொடருந்து நிலையம் திறக்கப்பட்டது.

1914 - முதலாம் உலகப் போர்: ஜெர்மன் பெல்ஜியத்தின் மீது படையெடுத்தது. இதன் காரணமாக ஐக்கிய இராச்சியம் ஜெர்மனியின் மீது போரை அறிவித்து உலகப் போரில் முதன் முறையாகக் குதித்தது.

1916 - முதலாம் உலகப் போர்: ஜெர்மனியுடன் லைபீரியா போர் தொடுத்தது.

1936 - கிரேக்கத் தளபதி இயோனிஸ் மெட்டாக்சஸ் நாட்டின் நாடாளுமன்றத்தைக் கலைத்து தன்னை நாட்டின் தலைவனாக அறிவித்தான்.

1946 - வடக்கு டொமினிக்கன் குடியரசில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 100 பேர் கொல்லப்பட்டு 2,000 பேர் வீடுகளை இழந்தனர்.

1964 - ஐக்கிய அமெரிக்காவின் மனித உரிமை ஆர்வலர்களான மைக்கல் ஷ்வேர்னர், ஆண்ட்ரூ குட்மன், ஜேம்ஸ் சானி ஆகியோர் மிசிசிப்பியில் இறந்து கிடக்கக் காணப்பட்டனர். இவர்கள் ஜூன் 21 இல் காணாமல் போயிருந்தனர்.

1975 - மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் ஜப்பானிய செம்படையினர் AIA கட்டிடத்தைத் தாக்கி அமெரிக்கத் தூதுவர் உட்பட 50 பேரைப் பணயக் கைதிகளாகப் பிடித்தனர். பின்னர் இப்பயணக்கைதிகளை விடுவித்து சிறைக்கைதிகளாயிருந்த தமது 5 தோழர்களுடன் லிபியா பயணமாயினர்.

1984 - அப்பர் வோல்ட்டா ஆபிரிக்கக் குடியரசு புர்கினா பாசோ எனப் பெயர் மாற்றம் பெற்றது.

1987 - விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் யாழ்ப்பாணம் சுதுமலையில் முதன் முதலில் மக்கள் முன் தோன்றி உரையாற்றினார்.

1991 - "ஓசியானோஸ்" என்ற கிரேக்க கப்பல் தென்னாபிரிக்காவில் மூழ்கியது. அனைத்து 571 பயணிகளும் காப்பாற்றப்பட்டனர்.

2006 - நியூசிலாந்தின் ஆளுநராக ஆனந்த் சத்தியானந்த் அறிவிக்கப்பட்டார். இவர் ஆகஸ்ட் 23 இல் பதவியேற்ரார்.

2006 - ஈழத்துக் கலைஞர் பொன். கணேசமூர்த்தி யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

2006 - வறுமைக்கு எதிரான அமைப்பு (Action Fiam) என்ற அரச சார்பற்ற அமைப்பின் 15 பணியாளர்கள் மூதூரில் இலங்கை இராணுவம் எனச் சந்தேகிக்கப்படுபவர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.

2007 - நாசாவின் பீனிக்ஸ் விண்கலம் செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது.

பிறப்புக்கள்

1908 - ரீ. உருத்திரா, முன்னாள் கொழும்பு நகரத் தந்தை (இ. 1960)

1929 - கிஷோர் குமார், இந்தியாப் பாடகர், நடிகர் (இ. 1987)

1961 - பராக் ஒபாமா, அமெரிக்க அரசியல்வாதி

இறப்புகள்

2006 - பொன். கணேசமூர்த்தி, ஈழத்துக் கலைஞர்

2008 - ச. அகத்தியலிங்கம், தமிழக மொழியியல் அறிஞர் (பி. 1929)

சிறப்பு நாள்

புர்கினா பாசோ - புரட்சி நாள்

ஆகஸ்டு 3- வரலாற்றில் இன்று

நிகழ்வுகள்

435 - கொன்ஸ்டண்டீனபோலின் ஆயர் நெஸ்டோரியஸ் (நெஸ்டோரியனிசத்தை ஆரம்பித்தவர்) பைசண்டைன் பேரரசன் இரண்டாம் தியோடோசியசினால் எகிப்துக்கு நாடுகடத்தப்பட்டார்.

1492 - கொலம்பஸ் ஸ்பெயினைவிட்டுப் புறப்பட்டார்.

1492 - ஸ்பெயினில் இருந்து யூதர்கள் கத்தோலிக்கர்களினால் வெளியேற்றப்பட்டனர்.

1645 - முப்பதாண்டுப் போர்: ஜெர்மனியில் ஆலர்ஹைம் என்ற இடத்தில் பிரெஞ்சுப்
படைகள் புனித ரோமப் பேரரசுப் படைகளைத் தாக்கி வெற்றி பெற்றனர்.

1678 - அமெரிக்காவின் முதலாவது கப்பல், லெ கிரிஃபோன் ரொபேர்ட் லசால் என்பவரால் அமைக்கப்பட்டது.

1783 - ஜப்பானில் அசாமா மலை வெடித்ததில் 35,000 பேர் கொல்லப்பட்டனர்.

1858 - இலங்கை தொடருந்து சேவையை ஆளுநர் சேர் ஹென்றி வோர்ட் ஆரம்பித்து வைத்தார்.

1860 - நியூசிலாந்தில் இரண்டாவது மாவோரி போர் ஆரம்பமானது.

1914 - முதலாம் உலகப் போர்: ஜெர்மனி பிரான்சுடன் போர் தொடுத்தது.

1916 – ஐரிய தேசியவாதி சேர் ரொஜர் கேஸ்மெண்ட் ஈஸ்டர் எழுச்சியில் அவரின் பங்களிப்புகளுக்காக லண்டனில் தூக்கிலிடப்பட்டார்.

1934 - அடொல்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின் பெரும் தலைவரானார்.

1940 - இரண்டாம் உலகப் போர்: இத்தாலி பிரித்தானிய சோமாலிலாந்து மீது போர் தொடுத்தது.

1949 - தேசிய கூடைப்பந்து சங்கம் ஐக்கிய அமெரிக்காவில் அமைக்கப்பட்டது.

1960 - நைஜர் பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.

1975 - மொரோக்கோவில் விமானம் ஒன்று மலை ஒன்றுடன் மோதியதில் 188 பேர்
கொல்லப்பட்டனர்.

1976 - காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

1990 - காத்தான்குடித் தாக்குதல் 1990: கிழக்கிலங்கையில் காத்தான்குடியில் முஸ்லிம் பள்ளிவாசலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் பெண்கள், குழந்தைகள் உட்பட 103 பேர் கொல்லப்பட்டனர்.

2005 - மவுரித்தேனியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் மாவோயா ஊல்ட் தாயா பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

2006 - திருகோணமலை தோப்பூர் அல் நூராப் பாடசாலையில் தங்கியிருந்த அப்பாவிப் பொதுமக்கள் 12 பேர் எறிகணை வீச்சில் கொல்லப்பட்டனர்.

[தொகு] பிறப்புக்கள்

1924 - லியொன் யூரிஸ், அமெரிக்க நாவலாசிரியர் (இ. 2003)

1957 - மணி சங்கர், இந்திய திரைப்பட இயக்குனர்

இறப்புகள்

1977 - மக்காரியோஸ், சைப்பிரசின் முதலாவது ஜனாதிபதி (பி. 1913)

1993 - சுவாமி சின்மயானந்தா, வேதாந்த தத்துவத்தைப் பரப்பிய இந்திய ஆன்மிகவாதி (பி. 1916)

2008 - அலெக்சாண்டர் சோல்செனிட்சின், நோபல் பரிசு பெற்ற ரஷ்ய எழுத்தாளர் (பி. 1918)

சிறப்பு நாள்

நைஜர் - விடுதலை நாள் (1960)

வெனிசுவேலா - கொடி நாள்

ஆகஸ்டு 2- வரலாற்றில் இன்று

நிகழ்வுகள்

1610 - ஹென்றி ஹட்சன் தனது கடற் பயணத்தின் போது இன்றைய ஹட்சன் குடாவை அடைந்தார்.

1790 - ஐக்கிய அமெரிக்காவில் முதற் தடவையாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது.

1798 - பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: நைல் நதிப் போரில் பிரித்தானியா வெற்றி பெற்றது.

1870 - உலகின் முதலாவது சுரங்க தொடருந்து சேவை லண்டனில் தொடங்கப்பட்டது.

1903 - ஒட்டோமான் பேரரசுக்கு எதிராக மசிடோனியர்களின் கிளர்ச்சி தோல்வியில் முடிந்தது.

1914 - ஜேர்மனியப் படையினர் லக்சம்பேர்கை முற்றுகையிட்டன.

1916 - முதலாம் உலகப் போர்: லியனார்டோ டாவ்வின்சி என்ற இத்தாலியப் போர்க்கப்பல் ஆஸ்திரியாவினால் மூழ்கடிக்கப்பட்டது.

1918 - முதலாம் உலகப் போரை அடுத்து சைபீரியாவுக்கு தனது படைகளை அனுப்பப்போவதாக ஜப்பான் அறிவித்தது.

1931 - இராணுவ வேலைகளை நிராகரிக்குமாறு அறிவியலாளர்களுக்கு ஐன்ஸ்டைன் அழைப்பு விடுத்தார்.

1932 - பொசித்திரன் (இலத்திரனின் எதிர்த்துணிக்கை) கார்ல் ஆண்டர்சன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

1934 - அடொல்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின் அதிபரானார் (Führer).

1939 - அணு ஆயுதத்தை தயாரிக்க அறிவுறுத்துமாறு ஐன்ஸ்டைன், லியோ சிலார்ட் ஆகியோர் அமெரிக்க அதிபர் பிராங்கிளின் ரூஸ்வெல்ட்டிற்குக் கடிதம் எழுதினார்கள்.

1943 - போலந்தில் திரெபிலிங்கா வதை முகாமில் நாசிகளுக்கு எதிராகக் கிளர்ச்சி இடம்பெற்றது.

1945 - இரண்டாம் உலகப் போர்: தோல்வியடைந்த ஜேர்மனியின் எதிர்காலம் குறித்து விவாதித்த நட்பு அணி நாடுகளின் பொட்ஸ்டாம் மாநாடு நிறைவடைந்தது.

1968 - பிலிப்பீன்சில் கசிகுரான் என்ற இடத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் சிக்கி 270 பேர் உயிரிழந்தனர்.

1973 - மான் தீவில் கேளிக்கை நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 51 பேர் கொல்லப்பட்டனர்.

1980 - இத்தாலியில் தொடருந்து நிலையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 85 பேர் கொல்லப்பட்டனர்.

1989 - யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 63 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.

1990 - ஈராக் குவைத்தின் மீது படையெடுத்தது.

1994 - பலாலி இராணுவத்தளத்தை விடுதலைப் புலிகள் தாக்கியதில் உலங்கு வானூர்தி, கவச வண்டி தாக்கியழிக்கப்பட்டன.

2006 - திருகோணமலை மாவட்டத்தில் மகிந்தபுர, கிளிவெட்டி, பாலதோப்பு, பச்சனூர் இராணுவமுகாம்களைத் தாக்கி மூதூர் இராணுவக் கட்டுப் பாட்டுப் பகுதிக்குள் புலிகள் உள்நுளைந்தனர்.

பிறப்புகள்

1913 - தனிநாயகம் அடிகளார், உலகத் தமிழாராய்ச்சி மன்றம் அமைக்க அடிகோலியவர் (இ. 1980)

1926 - ஜோர்ஜ் ஹப்பாஷ், பாலஸ்தீனத் தலைவர் (இ. 2008)

இறப்புகள்

1860 - சேர் ஹென்றி வோர்ட், இலங்கையின் முன்னாள் பிரித்தானிய ஆளுநர் (பி. 1796)

1892 - Dr Bonjean, கொழும்பின் முதலாவது ஆயர்.

1922 - அலெக்சாண்டர் கிரஹாம் பெல், தொலைபேசியைக் கண்டுபிடித்தவர் (பி. 1847)

1923 - வோரன் ஹார்டிங், ஐக்கிய அமெரிக்காவின் 29வது குடியரசுத் தலைவர் (பி. 1865)

ஆகஸ்டு 1- வரலாற்றில் இன்று

நிகழ்வுகள்

கிமு 33 - ஒக்டேவியன் எகிப்தின் அலெக்சாண்டிரியா ந்கரைக் கைப்பற்றி ரோமக் குடியரசின் கீழ் கொண்டு வந்தான்.

527 - முதலாம் ஜஸ்டீனியன் பைசண்டைன் பேரரசன் ஆனான்.

1291 - சுவிஸ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

1461 - நான்காம் எட்வேர்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.

1492 - ஸ்பெயினில் இருந்து யூதர்கள் கலைக்கப்பட்டனர்.

1498 - கொலம்பஸ் வெனிசுவேலாவை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆனார்.

1619 - முதலாவது ஆபிரிக்க அடிமைகள் வேர்ஜீனியாவின் ஜேம்ஸ்டவுன் நகரை அடைந்தனர்.

1774 - ஆக்சிஜன் தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.

1800 - பெரிய பிரித்தானிய இராச்சியம், அயர்லாந்து இராச்சியம் ஆகியன பெரிய பிரித்தானியா, அயர்லாந்து ஐக்கிய இராச்சியம் என்ற பெயரில் இணைந்தன.

1820 - லண்டனில் றீஜண்ட் கால்வாய் திறக்கப்பட்டது.

1831 - புதிய லண்டன் பாலம் திறந்து வைக்கப்பட்டது.

1876 - கொலராடோ ஐக்கிய அமெரிக்காவின் 38வது மாநிலமாக ஏற்கப்பட்டது.

1894 - கொரியா தொடர்பாக சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் போர் தொடங்கியது.

1902 - பனாமா கால்வாயுக்கான உரிமையை ஐக்கிய அமெரிக்கா பிரான்சிடம் இருந்து வாங்கியது.

1902 - ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வொலொங்கொங் நகரில் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 100 தொழிலாளர்கள்
கொல்லப்பட்டனர்.

1907 - சாரணிய இயக்கத்தின் முதல் பாசறையை பேடன் பவல் இங்கிலாந்தில் பிறௌன்சி தீவில் ஆரம்பித்து வைத்தார். இது ஆகஸ்ட் 9 வரை நீடித்தது.

1914 - முதலாம் உலகப் போர்: ஜெர்மனி ரஷ்யாவுடன் போர் தொடுத்தது.

1914 - இலங்கையில் மன்னாருக்கும் மதவாச்சிக்கும் இடையில் பகல் நேர தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.

1927 - சீன உள்நாட்டுப் போரின் முக்கிய சமர் கொமிந்தாங் படைகளுக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையில் ”நான்சாங்” என்ற இடத்தில் இடம்பெற்றது. இந்நாள் மக்கள் விடுதலை இராணுவத்தின் ஆரம்பிக்கப்பட்ட நாளாக நினைவு கூரப்படுகிறது.

1936 - பெர்லினில் 11வது ஒலிம்பிக் விளையாட்டுகக்ள் ஆரம்பமாயின.

1941 - முதலாவது ஜீப் வண்டி உருவாக்கப்பட்டது.

1944 - போலந்தில் வார்சா நகரில் நாசிகளுக்கெதிரான கிளர்ச்சி ஆரம்பமானது.

1952 - தந்தை பெரியார் தொடருந்து நிலையங்களில் இந்தி அழிப்புப் போராட்டத்தைத் துவக்கி வைத்தார்.

1960 - டஹோமி (பெனின்) பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.

1960 - பாகிஸ்தானின் தலைநகராக இஸ்லாமாபாத் அறிவிக்கப்பட்டது.

1964 - பெல்ஜிய கொங்கோவின் பெயர் கொங்கோ குடியரசு எனப் பெயர் மாற்றப்பட்டது.

1967 - கிழக்கு ஜெருசலேம் இஸ்ரேலுடன் இணைக்கப்பட்டது.

1980 - அயர்லாந்தில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 18 பேர் கொல்லப்பட்டனர்.

2002 - தமிழ்நாட்டில் பழ. நெடுமாறன் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

2004 - பரகுவேயில் பல்பொருள் அங்காடி ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 396 பேர் கொல்லப்பட்டு 500 பேர் காயமடைந்தனர்.

2006 - இலங்கை, திருகோணமலையில் கடற்படைத்தளம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 14 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.

2007- யாழ்பல்கலைக்கழக ஊடக மாணவன் ச.நிலக்சன் அவரது வீட்டில்வைத்து படுகொலைசெய்யப்பட்டார்

பிறப்புகள்

1929 - ஹஃபிசுல்லா அமீன், ஆப்கானிஸ்தானின் அதிபர் (இ. 1979)

1946 - குப்பிழான் ஐ. சண்முகம், ஈழத்து எழுத்தாளர்

1949 - குர்மான்பெக் பாக்கியெவ், கிர்கிஸ்தான் சனாதிபதி

இறப்புகள்

1920 - பால கங்காதர திலகர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1856)

2008 - ஹ‌ர்‌கிஷ‌ன் ‌சி‌ங் சு‌ர்‌ஜீ‌த், இந்திய மாக்சிய கம்யூனிசத் தலைவர் (பி. 1916)

2009 - கொரசோன் அக்கினோ, பிலிப்பைன்ஸ் முன்னாள் குடியரசுத் தலைவர் (பி.
1933)

சிறப்பு நாள்

உலக சாரணர் நாள்

அங்கோலா - இராணுவ நாள்

பெனின் - தேசிய நாள் (1960)

கொங்கோ - பெற்றோர் நாள்

லெபனான் - இராணுவ நாள்

சுவிட்சர்லாந்து - தேசிய நாள் (1291)

யாசர் அராபத் பிறப்பு

ஜூலை 31 - வரலாற்றில் இன்று

நிகழ்வுகள்

30 BC - மார்க் அந்தனியின் படைகள் ஆகுஸ்டசின் படைகளை வென்றனர். ஆனாலும் பெரும்பாலான அவனது படையினர் அவனை விட்டு விலகியதால் அவன் தற்கொலை செய்து கொண்டான்.

781 - பியூஜி மலையின் பதிவு செய்யப்பட்ட முதல் குமுறல் இடம்பெற்றது.

1492 - ஸ்பெயினில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டனர்.

1498 - தனது மூன்றாவது பயணத்தின் போது கொலம்பஸ் டிரினிடாட் தீவை அடைந்தார்.

1588 - ஆங்கிலேயர்களுக்கும் ஸ்பானியர்களுக்கும் இடையில் இடம்பெற்ற முதலாவது கடற்படைச் சமரில் ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர்.

1655 - ரஷ்யா லித்துவேனியாவின் தலைநகர் வில்னியூசைக் கைப்பற்றி ஆறு ஆண்டுகள் தமது ஆட்சியில் வைத்திருந்தது.

1658 - அவுரங்கசீப் இந்தியாவின் முகலாயப் பேரரசின் மன்னர் ஆனார்.

1741 - புனித ரோமப் பேரரசன் ஏழாம் சார்ல்ஸ் ஆஸ்திரியா மீது படையெடுத்தான்.

1805 - இந்திய விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிரித்தானியரால் தூக்கிலிடப்பட்டார்.

1865 - உலகின் முதலாவது குறுகிய அகல தொடருந்துப் பாதை ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் அமைக்கப்பட்டது.

1938 - கிரேக்கம், துருக்கி, ருமேனியா, யுகொஸ்லாவியா ஆகிய நாடுகளுடன் பல்கேரியா அமைதி உடன்பாட்டிற்கு வந்தது.

1954 - ஆர்டிடோ டெசியோ என்பவர் தலைமையிலான இத்தாலிய குழு ஒன்று கே-2 கொடுமுடியை எட்டியது.

1964 - சந்திரனின் முதலாவது மிகக்கிட்டவான படங்களை ரேஞ்சர் 7 விண்கலம் பூமிக்கு அனுப்பியது.

1971 - அப்போலோ 15 விண்வெளி வீரர்கள் லூனார் ரோவர் வண்டியை சந்திரனில் செலுத்தி சாதனை புரிந்தனர்.

1976 - வைக்கிங் 1 விண்கலத்தினால் செவ்வாய்க் கோளில் எடுக்கப்பட்ட புகழ்பெற்ற மனித முகம் படத்தை நாசா வெளியிட்டது.

1987 - ஆல்பர்ட்டா மாநிலத்தில் எட்மன்டன் நகரில் இடம்பெற்ற சூறாவளியில் சிக்கி 27 பேர் உயிரிழந்தனர்.

1988 - மலேசியாவில் பாலம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் 32 பேர் கொல்லப்பட்டு 1,674 பேர் படுகாயமடைந்தனர்.

1992 - நேபாளத் தலைநகர் கத்மந்துவில் தாய்லாந்து விமானம் ஒன்று வீழ்ந்ததில் 113 பேர் கொல்லப்பட்டனர்.

2006 - பிடெல் காஸ்ட்ரோ தனது அதிகாரத்தை தற்காலிகமாக தனது சகோதரர் ராவுல் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்தார்.

2006 - ஈழப்போர்: திருகோணமலையில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் 19 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

2007 - வட அயர்லாந்தில் பிரித்தானிய இராணுவம் தனது மிக நீண்ட கால இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி அங்கிருந்து வெளியேறியது.

பிறப்புகள்

1704 - கேப்ரியல் கிராமர், சுவிட்சர்லாந்து கணிதவியலாளர் (இ. 1752)

1874 - செய்குத்தம்பி பாவலர், தமிழ் எழுத்தாளர், சதாவதானி (இ. 1950)

1912 - மில்ட்டன் ஃப்ரீட்மன், பொருளியல் நிபுணர் (இ. 2006)

1966 - ஜே. கே. ரௌலிங், ஆங்கில எழுத்தாளர்

இறப்புகள்

1805 - தீரன் சின்னமலை, குறுநில மன்னன் (பி. 1756)

1980 - முகமது ரபி, புகழ் பெற்ற இந்தியப் பின்னணிப் பாடகர். (பி. 1924)


தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட நாள்.

ஜூலை 30 - வரலாற்றில் இன்று

நிகழ்வுகள்

1502 - கிறிஸ்தோபர் கொலம்பஸ் தனது நான்காவது கடற்பயணத்தின் போது கொந்துராசை அடைந்தார்.

1629 - இத்தாலியில் நேப்பிள்சில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 10,000 பேர் கொல்லப்பட்டனர்.

1733 - ஐக்கிய அமெரிக்காவில் முதலாவது விடுதலைக் கட்டுநர் லாட்ஜ் ஆரம்பிக்கப்பட்டது.

1756 – ரஷ்யாவின் அரசி எலிசபெத்தின் வேண்டுதலுக்கிணங்க கட்டிடக் கலைஞர் பார்த்தலோமியோ ராஸ்ட்ரெல்லி கத்தரீன் அரண்மனையைக் கட்டி முடித்தார்.

1825 - பசிபிக் கடலில் மால்டன் தீவு கண்டுபிடிக்கப்பட்டது.

1930 - உருகுவே முதலாவது உதைபந்தாட்ட உலகக்கிண்ணப் போட்டி இறுதி ஆட்டத்தில் ஆர்ஜெண்டீனாவை 4-2 கணக்கில் தோற்கடித்து உலகக்கிண்ணத்தை வென்றது.

1932 - கலிபோர்னியாவில் 10வது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆரம்பமாயின.

1945 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானிய நீர்மூழ்கிக் கப்பல் I-58 அமெரிக்காவின் கடற்படைக் கப்பலை மூழ்கடித்ததில் 883 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.

1954 - எல்விஸ் பிறீஸ்லி முதற்தடவையாக பொது மேடையில் பாட ஆரம்பித்தார்.

1966 - உதைபந்தாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி மேற்கு ஜெர்மனியை 4-2 என்ற கணக்கில் வென்றது.

1971 - அப்பல்லோ 15இல் சென்ற டேவிட் ஸ்கொட் மற்றும் ஜேம்ஸ் ஏர்வின் இருவரும் லூனார் ரோவர் வாகனத்துடன் சந்திரனில் இறங்கினர்.

1971 - ஜப்பானில் இரண்டு விமானங்கள் வானில் மோதிக் கொண்டதில் 162 பேர் கொல்லப்பட்டனர்.

1980 - பிரான்ஸ், மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றிடம் இருந்து வனுவாட்டு விடுதலை பெற்றது.

1997 - அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் "திரெட்போ" என்ற
இடம்பெற்ற மண்சரிவில் 18 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1818 - எமிலி புரொண்டி, ஆங்கில நாவலாசிரியர் (இ. 1848)

1863 - ஹென்றி ஃபோர்ட், அமெரிக்கத் தொழிலதிபர் (இ. 1947)

1947 - ஆர்னோல்ட் ஸ்வார்செனேகர், நடிகர், அரசியல்வாதி

இறப்புகள்

1969 - இ. சி. இரகுநாதையர், இலங்கையில் வாக்கிய பஞ்சாங்கம் கணித்து வெளியிட்டவர்

சிறப்பு நாள்

வனுவாட்டு - விடுதலை நாள் (1980)

மேலவளவு படுகொலை

ஜூலை 29 - வரலாற்றில் இன்று

நிகழ்வுகள்

1014 - பைசண்டைன் பேரரசன் இரண்டாம் பசில் பல்கேரிய இராணுவத்தினரைத் தோற்கடித்தான்.

1030 - டானியர்களிடம் இருந்து தனது முடியாட்சியைக் காப்பாற்றும் முகமாக நோர்வேயின் இரண்டாம் ஓலாப் சமரில் ஈடுபட்டு இறந்தான்.

1567 - முதலாம் ஜேம்ஸ் ஸ்கொட்லாந்தின் மன்னனாக முடிசூடினான்.

1830 - பிரான்சின் பத்தாம் சார்ல்ஸ் முடி துறந்தான்.

1848 - அயர்லாந்தில் "டிப்பெரரி" என்ற இடத்தில் பிரித்தானிய ஆட்சிக்கெதிரான கிளர்ச்சி அடக்கப்பட்டது.

1851 - 15 யுனோமியா என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது.

1899 - முதலாவது ஹேக் ஒப்பந்தம் நெதர்லாந்தில் ஹேக் என்ற இடத்தில் கைச்சாத்திடப்பட்டது.

1900 - இத்தாலியில், முதலாம் உம்பேர்ட்டோ மன்னர் கொலை செய்யப்பட்டார்.

1907 - சேர் பேடன் பவல் இங்கிலாந்தில் சாரணர் இயக்க முகாம் ஒன்றைத் திறந்து வைத்தார். இதுவே சாரணர் இயக்கத்தை ஆரம்பிக்க முதற் படியாக இருந்தது.

1921 - ஹிட்லர் ஜேர்மன் தேசிய சோசலிச தொழிலாளர் கட்சியின் தலைவரானார்.

1944 - இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.

1948 - இரண்டாம் உலகப் போர் காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒலிம்பிக் விளையாட்டுக்கள் மீண்டும் லண்டனில் ஆரம்பமாகின.

1957 - அணு சக்தியின் அமைதி வழி பயன்பாட்டினை ஊக்குவிக்கும் முகமாக பன்னாட்டு அணுசக்தி முகமையகம் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது.

1959 - ஐக்கிய அமெரிக்காவின் விண்வெளி நிறுவனம் நாசா ஆரம்பிக்கப்பட்டது.

1967 - வியட்நாம் போர்: வடக்கு வியட்நாமியக் கரையில் ஃபொரெஸ்டல்" என்ற அமெரிக்கக் கடற்படைக் கப்பல் தீப்பிடித்ததில் 134 பேர் கொல்லப்பட்டனர்.

1967 - வெனிசுவேலா நாட்டின் 400ம் ஆண்டு நிறைவு நாள் கொண்டாட்டங்களின் நான்காம் நாளில் அங்கு இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 500 பேர் கொல்லப்பட்டனர்.

1981 - வேல்ஸ் இளவரசர் சார்ள்ஸ் - டயானா திருமணம் நடைபெற்றது.

1987 - ஆங்கிலக் கால்வாயூடாக யூரோ சுரங்கம் அமைப்பதற்கான உடன்படிக்கையில் ஐக்கிய இராச்சிய பிரதமர் மார்கரட் தாட்சர், மற்றும் பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா மித்தரான் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

1987 - இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வாக இலங்கை - இந்திய ஒப்பந்தம் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கை அதிபர் ஜே. ஆர். ஜெயவர்த்தனாவுக்கும் இடையில் கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது.

1987 - இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொழும்பில் இடம்பெற்ற மரியாதை அணிவகுப்பின் போது இலங்கை இராணுவத்தினன் ஒருவனால் துப்பாக்கியால் தலையில் குத்தப்பட்டு காயம் அடைந்தார்.

1999 - இலங்கையின் தமிழ் அரசியல்வாதி நீலன் திருச்செல்வம் தற்கொலை குண்டுவெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார்.

2005 - ஏரிஸ் (குறுங்கோள்) கண்டுபிடிக்கப்பட்டது.

பிறப்புகள்

1883 - முசோலினி, இத்தாலிய சர்வாதிகாரி (இ. 1945)

1904 - ஜே. ஆர். டி. டாடா, இந்தியத் தொழிலதிபர் (இ. 1993)

1905 - டாக் ஹமாஷெல்ட், ஐக்கிய நாடுகள் அவையின் 2வது பொதுச் செயலர் (இ. 1961)

இறப்புகள்

1913 - டோபியாஸ் மைக்கல் ஆசர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1838)

1974 - கருமுத்து தியாகராஜன், இந்தியத் தொழிலதிபர் (பி. 1893)

1999 - நீலன் திருச்செல்வம், இலங்கையின் தமிழ் அரசியல்வாதி

2009 - காயத்திரி தேவி, ஜெய்ப்பூர் மகாராணி (பி. 1920

2009 - ராசன் பி.தேவ், மலையாள நடிகர் (பி. 1954)

சிறப்பு நாள்

ருமேனியா - தேசிய கீத நாள்

பரமக்குடி சாதிய மோதலும்
காவல் துறைத் துப்பாக்கி சூடும்

ஜூலை 28 - வரலாற்றில் இன்று

நிகழ்வுகள்

1493 - மாஸ்கோவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

1540 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் ஆணைப்படி தொமஸ் குரொம்வெல் நாட்டுத்துரோகக் குற்றஞ்சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டார். அதே நாளில் ஹென்றி தனது ஐந்தாவது மனைவி கத்தரீனை மணந்தான்.

1586 - முதற்தடவையாக உருளைக் கிழங்கு பிரித்தானியாவுக்கு இறக்குமதி செய்யப்படட்து.

1609 - பெர்முடாவில் ஆங்கிலேயர்கள் குடியேறினர்.

1794 - பிரெஞ்சுப் புரட்சி: மாக்சிமிலியன் ரோப்ஸ்பியர் தலை துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்கு உள்ளாக்கப்பட்டான்.

1821 - பெரு ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றது.

1914 - முதலாம் உலகப் போர் ஆரம்பமானது. சேர்பியா மீது ஆஸ்திரியா-ஹங்கேரி போர் தொடுத்தன.

1915 - ஐக்கிய அமெரிக்காவின் ஹெயிட்டி முற்றுகை ஆரம்பமானது.

1943 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் ஹாம்பூர்க் நகர் மீது பிரித்தானியா குண்டுத் தாக்குதல் மேற்கொண்டதில் 42,000 ஜேர்மனியர்கள் கொல்லப்பட்டனர்.

1945 - அமெரிக்க போர் விமானம் ஒன்று எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் 79ம் மாடியில் தவறுதலாக மோதியதில் 14 பேர் கொல்லப்பட்டனர்.

1957 - ஜப்பானின் இசகாயா என்ற இடத்தில் மழை, மற்றும் மண்சரிவு காரணமாக
992 பேர் கொல்லப்பட்டனர்.

1965 - வியட்நாம் போர்: தெற்கு வியட்நாமில் அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கையை 75,000 இலிருந்து 125,000 ஆக அதிகரிக்கப்படும் என அமெரிக்க அதிபர் லின்டன் ஜோன்சன் அறிவித்தார்.

1976 - சீனாவில் டங்ஷான் நகரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 242,769 பேர் கொல்லப்பட்டனர். 164,851 பேர் காயமடைந்தனர்.

1996 - வாஷிங்டனில் கென்னவிக் என்ற இடத்தில் வரலாற்றுக்கு முற்பட்ட கால மனிதனின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

2005 - ஐரியக் குடியரசு இராணுவம் தனது 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்தை முடிவுகுக் கொண்டு வருவதாக அறிவித்தது.

2005 - இங்கிலாந்து, பேர்மிங்காம் நகரைச் சூறாவளி தாக்கியதில் £4,000,000 பெறுமதியான சொத்துகக்ள் சேதமடைந்தன. 39 பேர் காயமடைந்தனர்.

2006 - ஈழப்போர்: வாகரையில் இலங்கைப் போர் விமானங்கள் தாக்கியதில் பலர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1936 - சோபர்ஸ், மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் துடுப்பாளர்

1951 - சந்தியாகோ கலத்ராவா, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கட்டிடக்கலைஞர்

1954 - குகொ சவெஸ், வெனிசுவேலா ஜனாதிபதி

1977 - மனு ஜினோபிலி, ஆர்ஜெண்டீனிய கூடைப்பந்து ஆட்டக்காரர்

சிறப்பு நாள்

பெரு - விடுதலை நாள் (1821)


கணேசனார் (கம்பன் அடிபோடியார்) நினைவு
.

ஜூலை 27 - வரலாற்றில் இன்று

நிகழ்வுகள்

1214 - பிரான்சில் இடம்பெற்ற போரில் இரண்டாம் பிலிப் இங்கிலாந்தின் ஜோனை வென்றான்.

1549 - பிரான்சிஸ் சேவியர் அடிகள் ஜப்பானை அடைந்தார்.

1627 - தெற்கு இத்தாலி நகரான சான் செவேரோவை நிலநடுக்கம் தாக்கியது.

1794 - பிரெஞ்சுப் புரட்சி: புரட்சியின் எதிரிகளாகக் கருதப்பட்ட 17,000 பேரத் தூக்கிலிட ஆதரித்தமைக்காக மாக்சிமிலியன் ரோப்ஸ்பியர் கைது செய்யப்பட்டார்.

1862 - சான் பிரான்சிஸ்கோ வில் இருந்து பனாமா நோக்கிச் சென்று கொண்டிருந்த "கோல்டன் கேட்" என்ற கப்பல் மெக்சிக்கோவில் தீப்பிடித்து மூழ்கியதில் 231 பேர் கொல்லப்பட்டனர்.

1865 - வெல்சிய குடியேறிகள் ஆர்ஜெண்டீனாவின் arrive in Argentina at சூபூட் பள்ளத்தாக்கை அடைந்தனர்.

1880 - இரண்டாவது ஆங்கில-ஆப்கானியப் போர்: மாய்வாண்ட் என்ற இடத்தில் ஆப்கானியப் படைகள் பிரித்தானியரை வென்றனர்.

1921 - பிரெட்றிக் பாண்டிங் தலைமையில் டொறொண்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களினால் இன்சுலின் கண்டறியப்பட்டது.

1929 - மூன்றாவது ஜெனீவா உடன்படிக்கை

1941 - ஜப்பானியர்கள் பிரெஞ்சு இந்தோ-சீனாவைக் கைப்பற்றினர்.

1953 - கொரியப் போர் முடிவு: ஐக்கிய அமெரிக்கா, சீனா, மற்றும் வட கொரியா ஆகியவற்றுக்கிடையில் போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. தென் கொரியா இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டாலும், உடன்பாட்டை மதிப்பதாக வாக்குறுதி தந்தது.

1955 - ஆஸ்திரியாவில் மே 9, 1945 முதல் நிலை கொண்டிருந்த இரண்டாம் உலகப் போரின் நட்பு நாடுகளின் படைகள் அங்கிருந்து விலகின.

1975 - விடுதலைப்புலிகளின் முதலாவது ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம் மாநகரத் தலைவர் அல்பிரட் துரையப்பா சுட்டுக் கொல்லப்பட்டார்.

1983 - வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள்: கொழும்பு வெலிக்கடை சிறையில் இடம்பெற்ற இரண்டாம் கட்ட படுகொலை நிகழ்வில் 18 தமிழ்க் கைதிகள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.

1990 - பெலாரஸ் சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலையை அறிவித்தது.

1990 - திரினிடாட் டொபாகோவில் இஸ்லாமியத் தீவிரவாதிகள் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் பிரதமர் மற்றும் அமைச்சர்களை பணயக் கைதிகளாக ஆறு
நாட்கள் வைத்திருந்தனர்.

1997 - அல்ஜீரியாவில் "சி செரூக்" என்ற இடத்தில் 50 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

2002 - உக்ரைனின் லுவிவ் நகரில் வான் களியாட்ட நிகழ்ச்சியின் போது போர் விமானம் ஒன்று மக்களின் மீதூ வீழ்ந்ததில் 85 பேர் கொல்லப்பட்டனர். 100 பேர் காயமடைந்தனர்.

2007 - பீனிக்ஸ், அரிசோனாவில் இரண்டு ஹெலிகப்டர்கள் வானில் மோதின.

பிறப்புகள்

1824 - அலெக்சாண்டர் டுமாஸ், பிரெஞ்சு எழுத்தாளர் (இ. 1895)

1853 - விளாடிமிர் கொரலென்கோ, சோவியத் எழுத்தாளர் (இ. 1921)

1876 - தேசிக விநாயகம்பிள்ளை, கவிமணி (இ. 1959)

1879 - நாவலர் சோமசுந்தர பாரதியார், தமிழறிஞர் (இ. 1959)

1955 - அலன் போடர், ஆஸ்திரேலிய துடுப்பாளர்
[
இறப்புகள்

1953 - சோமசுந்தரப் புலவர், ஈழத்துக் கவிஞர் (பி. 1878)

1987 - சலீம் அலி, இந்தியப் பறவையியல் வல்லுநர் (பி. 1896)


மேலர் (மேயர்) ஆல்பிரட் துரையப்பா சாவு

மக்களால் தமிழர்களின் துரோகி எனக் கருதப்பட்ட யாழ்ப்பான மேலர் (மேயர்) ஆல்பிரட் துரையப்பா கொலை செய்யப்பட நாள் இதுவாகும். இவர் யாழ்ப்பாணத்தில் சிங்கள பேரினவாத அரசின் முகவராக செயல்பட்டவர். தமிழர்களின் அரசியல் உரிமையைப் பறிக்கும் புதிய அரசியலமைப்புச் சட்டம் 1972 -இல் சிங்கள அரசால் கொண்டு வந்த போதும், தரப்படுத்துதல் மூலம் தமிழ் மாணவர்களின் முன்னேற்றம் தடை செய்யப்பட போதும் அரசின் கொடூர சமூகத்தின் வெளிப்பாடாக ஆல்பிரட் துரையப்பா வடக்கு பகுதியில் செயல்பட்டார்.

தனது அரசியல் ஊதியத்திற்காக , சமூக அக்கறையுடன் செயல்பட்ட தமிழ் இளைஞர்களின் எதிர்ப்புகளை குழி தோண்டி புதைத்தார். காவலர்களுக்குச் செய்தி சொல்லி பல இளைஞர்களை காட்டிக் கொடுத்தார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் இறுதிநாளில் குழப்பத்தை உண்டாக்கி, சிங்கள காவலர்களின் வன்முறைத் தாக்குதலுக்கு துணைபோனார். அத்தாக்குதலுக்கு அஞ்சி மக்கள் கூடம் சிதறுண்டு ஓடிய குழப்பத்தில் ஒன்பது தமிழர்கள் கொல்லப்பட்டனர்.




எல்லாவகையிலும் இரண்டகராகச் செயல்பட்ட ஆல்பிரட் துரையப்பாவை தமிழ்ப்புலிகள் 27 .07 .1975 அன்று வரதராச பெருமாள் கோயில் அருகே சுட்டு கொன்றனர். இதுவே தமிழீழப் போராட்டத்தில் முதல் கொலை எனக் கருதப்படுகிறது. இக்கொலையை ஒரு பழைய கைத்துப்பாக்கியையும், தீக்குச்சிகளின் நுனியிலிருந்த வேதி பொருளைச் சேர்த்து செய்யப்பட துப்பாக்கி குண்டையும் பயன்படுத்தியே இன்றைய ஈழத் தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் செய்தார்.

விடுதலை வரலாற்றில், அதுவும் போர்க்கருவிப் போராட்ட முறையில் எதிரிகளைவிட, துரோகிகளே முதலில் களையப்பட வேண்டியவர்கள்

ஜூலை 26 - வரலாற்றில் இன்று

நிகழ்வுகள்

811 - பைசண்டை பேரரசன் முதலாம் நிக்கபோரஸ் பல்கேரியாவின் பிளிஸ்கா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் கொல்லப்பட்டான்.

1139 - முதலாம் அபொன்சோ போர்த்துக்கல்லின் முதலாவது மன்னனாக முடிசூடி லெயோன் பேரரசில் இருந்து விடுதலையை அறிவித்தான்.

1788 - நியூயோர்க் ஐக்கிய அமெரிக்காவின் 11வது மாநிலமாக இணைந்தது.

1803 - உலகின் முதலாவது பயணிகள் தொடருந்து சேவை தெற்கு லண்டனில் ஆரம்பமாகியது.

1847 - லைபீரியா ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்து விடுதலை பெற்றது.

1848 - மாத்தளை கிளர்ச்சி: இலங்கையில் பிரித்தானியருக்கு எதிராக வீரபுரன் அப்பு தலைமையில் கிளர்ச்சி வெடித்தது. வீரபுரன் அப்பு கைது செய்யப்பட்டு ஆகஸ்ட் 8 இல் தூக்கிலிடப்பட்டான்.

1891 - டெஹீட்டி பிரான்சுடன் இணைந்தது.

1944 - இரண்டாம் உலகப் போர்: சோவியத் இராணுவம் உக்ரைனின் லுவிவ் நகரை நாசிகளிடம் இருந்து கைப்பற்றினர். அந்நகரில் இருந்த 160,000 யூதர்களில் 300 பேர் மட்டுமே எஞ்சியிருந்தனர்.

1944 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் முதலாவது வி-2 ஏவுகணை பிரித்தானியாவைத் தாக்கியது.

1945 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் போட்ஸ்டாம் என்ற இடத்தில் சோவியத் ஒன்றியம், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் ஆகிவற்றிற்கிடையில் போட்ஸ்டாம் உடன்பாடு எட்டப்பட்டது.

1945 - ஹிரோசிமாவில் போடப்படவிருந்த அணுகுண்டைத் தாங்கியவண்ணம் இண்டியானாபொலிஸ் என்ற அமெரிக்கக் கடற்படைக் கப்பல் டினியான் தீவை அடைந்தது.

1952 - எகிப்தில் நிகழ்ந்த இராணுவப் புரட்சியில் மன்னர் பாரூக் பதவியில் இருந்து அகற்றப்பட்டு அவரது ஆறு மாதங்கள் அகவையுடைய மகன் இரண்டாம் புவாட் மன்னன் ஆக்கப்பட்டான்.

1953 - கியூபா பூரட்சி: கியூபாவில் மொன்காடா இராணுவத் தளம் மீது பிடெல் காஸ்ட்ரோ தலைமையில் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல் முறியடிக்கப்பட்டது.


1956 - அஸ்வான் அணைக்கட்டுக்கு உலக வங்கி நிதி உதவி வழங்க மறுத்ததை அடுத்து சூயஸ் கால்வாயை எகிப்திய அதிபர் கமால் அப்துல் நாசர் அரசுடமை ஆக்கினார்.

1957 - குவாத்தமாலாவின் சர்வாதிகாரி கார்லொஸ் அர்மாஸ் கொல்லப்பட்டார்.

1957 - இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களுக்கும் இடையே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

1958 - எக்ஸ்புளோரர் 4 ஏவப்பட்டது.

1963 - மசிடோனியாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1,100 பேர் வரை கொல்லப்பட்டனர்.

1965 - மாலைதீவுகள் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து முழுமையாக விடுதலை பெற்றது.

1971 - அப்பல்லோ 15 விண்கலம் ஏவப்பட்டது.

1974 - ஏழாண்டுகள் இராணுவ ஆட்சியின் பின்னர் கிரேக்கத்தில் மக்களாட்சி ஏற்பட்டது.

1994 - எஸ்தோனியாவில் இருந்து ரஷ்யப் படைகளை வெளியேற்ற அதிபர் பொரிஸ் யெல்ட்சின் முடிவெடுத்தார்.

2005 - டிஸ்கவரி விண்ணோடம் ஏவப்பட்டது.

பிறப்புகள்

1791 - பிரான்ஸ் மொசார்ட், இசையமைப்பாளர் (இ. 1844)

1856 - ஜோர்ஜ் பெர்னாட் ஷா, எழுத்தாளர் (இ. 1950)

1933 - எட்மண்ட் ஃவெல்ப்ஸ், பொருளியல் அறிஞர்

1933 - மு. கு. ஜகந்நாதராஜா, பன்மொழிப் புலவர் (இ. 2008)

1939 - ஜோன் ஹவார்ட், ஆஸ்திரேலியாவின் 25வது பிரதமர்

1971 - மேரி ஆன் மோகன்ராஜ், எழுத்தாளர்

இறப்புகள்

1857 - ஒராசியோ பெட்டாச்சினி, யாழ்ப்பாணம் ஆயர்

சிறப்பு நாள்

மாலைதீவு - விடுதலை நாள் (1965)

லைபீரியா - விடுதலை நாள் (1847)

தோள்சீலை போராட்டம் வெற்றி

சோதி பாபுலே மகாராட்டினதிலும், ஈ.வே.ரா. தமிழகத்திலும், நாராயணகுரு கேரளத்திலும் சமூக நன்மைக்காக இயக்கம் கண்டுகொண்டிருந்த வேளையில் முக்கடல் கூடும் குமரி மாவட்டத்தில் கிறித்துவ பாதிரியார் சார்லசு பீட் பெண்ணிய உரிமையை வென்றெடுக்க ஒரு நெருப்பு துண்டை போட்டார்.

1818 -ஆம் ஆண்டு சீர்திருத்த அபை அருள் தொண்டராக சார்லசு பீட் குமரி மாவட்டத்தில் பணி செய்ய வந்தார். முதலில் குளச்சலில் பணி செய்ய வந்தவர் மைலாடிக்கு அழைக்கப்பட்டார். அவரை பார்த்ததும் மைலாடி மக்கள் குறிப்பாக அதிக எண்ணிக்கையில் பெண்கள் அவரை சந்திக்க வந்தனர். மார்பகங்களை மறைக்கத் துணி இல்லாமல் அரை நிர்வாணிகளாய் கட்சி தந்த பெண்களை பார்த்து, "உடலை மறைக்க ஒரு முலம் துணி கிடையாதா?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "எங்களுக்கு முழு ஆடை அணிய உரிமை இல்லை. உயர் சாதியினரையோ, அரசு அதிகாரிகளையோ வணங்கி வரவேற்க மார்பகங்களை மறைத்து கட்டியிருக்கும் துணியை அவிழ்த்து அவர்களுக்கு மார்பகங்களை காட்ட வேண்டும். இல்லையெனில் எங்கள் மார்பகங்கள் அறுக்கப்படும்." என்றனர்.

அன்று தொடர்ந்த முதல் கட்ட போராட்டம் 3 கட்டங்களாக 37 ஆண்டுகள் நடந்தது.. இந்த பகுதியில் சாதியத்தின் பெயரால், நிளுடமையின் திமிர்வாத ஆளுகையால், ஒடுக்கப்பட்ட சாதியினராக முத்திரை குத்தப்பட்ட காவதி, சலவை தொழிலாளர், சாம்பவர், பறையடிப்பவர்கள், செரமர், புலையர், ஈழவர், நாடார் போன்ற சாதியே பெரும்பான்மையாக இருந்தனர். நன்பூதிரி பார்ப்பனர், வேளாளர் ஆகியோருடைய ஆதிக்கம் இருந்தது. ஆளும் சாதிக்கு கூலியாக நாயர் சமூகம் இறங்கியது. மதம், சாதிகளை கடந்து ஒடுக்கப்பட்ட மக்கள் இணைக்கப்பட்டனர். எழுச்சியை கண்டு பொறுக்காத மேலாண்மை சாதியினர் பல பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கினர்.
26 .07 .1859 இல் அரசின் ஆணைக்குப் பின் தோள்சீலை
போராட்டம் உச்ச நிலை அடைந்து வெற்றி கண்டது.



ஜார்ஜ் பெர்னாட்சா பிறப்பு.

உலகின் தலை சிறந்த நாடக ஆசிரியர்களுள் ஒருவரான ஜார்ஜ் பெர்னாட்சா 26 .07 .1856 இல் அயர்லாந்தின் தலைநகரான டப்ளினில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தார். இவரது தாய் ஓர் இசை வல்லுனராக இருந்ததால் தன மகனையும் இசைத்துறையில் வளர்க்க முயன்றார். வறுமை மற்றும் குடும்ப சூழல் காரணமாக தனது ௧௫ -வது வயதில் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு தன தாயுடன் இலண்டன் சென்றார்.

இலியட் ஒடிசி போன்ற கிரேக்க பழங்கதைகளையும் சேக்ஸ்பியர், டிக்கன்சு, பேன்யன் போன்றோரின் பாடல்களையும், மொசார்ட்டின் இசைநாடகங்களையும், விவிலியம், அராபிய இரவுகள் போன்ற நூல்களையும் ஆர்வமுடம் படித்தார். எழுத்து துறையில் ஆர்வம் கொண்டு பல்வேறு செய்தி இதழ்களுக்கு சமூக சீர்திருத்தக் கட்டுரைகளை எழுதத் தொடங்கினார்.

தனது வாழ்நாளில் ஒரு முறை கூட புகை மற்றும் மது அருந்தாத சிறந்த பேச்சாளர்களாகவும் சமூக சீர்திருத்தப் பணியாளராகவும் மாறினார். இங்கிலாந்தின் தொழிலாளர் கட்சியைத் தொடங்கியவர்களுள் இவரும் ஒருவர். சிறந்த நாடகத் திரனைவாலராக விளங்கிய பெர்னாட்சா சேக்சுபியரின் நாடகங்களைக் கடுமையான திறனாய்வுக்கு உட்படுத்தினார். 'மனைவியை இழந்தவர்களின் வீடுகள்' என்ற நாடகத்தில் தொடங்கி மொத்தம் 47 நாடகங்கள் எழுதியுள்ளார். சீசர் மற்றும் கிளியோபாட்ரா என்ற நாடகத்தின் மூலம் பழைய நாடக இலக்கண வரம்புகளை முறியடித்து பல புதுமைகளை. நகைச்சுவை நிறைந்து கானப்பத்வது இவரது நாடகங்களின் சிறப்பு கூறு ஆகும்.

பெர்னாட்சா, இட்லர், முசோலினி ஆகியோரது சுறுசுறுப்பையும் செயல்வன்மையும், நாட்டுப்பற்றையும், தங்கள் நாட்டு மக்கள் மீது கொண்டிருந்த அக்கறையும் பாராட்டினர். முதல் உலகப் போரில் இங்கிலாந்து மேற்கொண்ட வெளியுறவுக் கொள்கையைக் குறைகூறினார்.
"புனித சோன்" என்ற மிகச் சிறந்த நாடத்தை படைத்து, 1925 -இல் நோபல் பரிசு பெற்றார். மெய்யியல், சமூகவியல், அரசியல், சமயம் ஆகிய துறைகளுக்கு இலக்கியத் தகுதியை தந்து, வாழ்வுடன் தொடர்புடைய பல நாடகங்களை உருவாக்கி தனது இறுதி மூச்சு வரை இலக்கிய, நாடக சமூக சீர்திருத்த பணியாற்றிய பெர்னாட்சா 2 .11 .1950 அன்று இறந்தார்.

ஜூலை 25 -வரலாற்றில் இன்று

நிகழ்வுகள்

1261 - கொன்ஸ்டன்டீனபோல் நகரை நிக்காயர்கள் கைப்பற்றி பைசண்டைன் பேரரசை அங்கு மீண்டும் அமைத்தனர்.

1547 - இரண்டாம் ஹென்றி பிரான்ஸ் மன்னனாக முடிசூடினான்.

1593 - பிரான்சின் நான்காம் ஹென்றி புரட்டஸ்தாந்து மதத்தில் இருந்து ரோமன் கத்தோலிக்கத்துக்கு பகிரங்கமாக மதம் மாறினான்.

1603 - ஸ்கொட்லாந்தின் ஆறாம் ஜேம்ஸ் பிரித்தானியாவின் முதலாவது மன்னனாக முடி சூடினான்.

1799 - எகிப்தில் பிரான்சின் முதலாம் நெப்போலியன் 10,000 ஒட்டோமான்களை சமரில் வென்றான்.

1868 - வயோமிங் ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டது.

1894 - முதலாவது சீன-ஜப்பானியப் போர் ஆரம்பமானது.

1898 - புவேர்ட்டோ ரிக்கோ மீதான ஐக்கிய அமெரிக்காவின் படையெடுப்பு
ஆரம்பமானது. முதலாவது அமெரிக்கப் படையினர் குவானிக்கா துறைமுகத்தில் தரையிறங்கினர்.

1907 - கொரியா ஜப்பானின் ஆட்சியின் கீழ் வந்தது.

1908 - அஜினமோட்டோ கண்டுபிடிக்கப்பட்டது.

1925 - சோவியத் செய்தி நிறுவனம் டாஸ் நிறுவப்பட்டது.

1934 - ஆஸ்திரிய அதிபர் எங்கல்பேர்ட் டொல்ஃபஸ் நாசிகளினால் கொலை
செய்யப்பட்டார்.

1943 - இரண்டாம் உலகப் போர்: இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

1944 - இரண்டாம் உலகப் போர்: பிரான்சில் இடம்பெற்ற நோர்மண்டி சண்டையில்
5,021 கனேடியர்கள் கொல்லப்பட்டனர்.

1973 - சோவியத்தின் மார்ஸ் 5 விண்கலம் ஏவப்பட்டது.

1983 - கறுப்பு ஜூலை: கொழும்பு வெலிக்கடைச் சிறையில் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உட்பட 37 தமிழ் அரசியல் கைதிகள் சக சிங்களக் கைதிகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.

1984 - சல்யூட் 7 விண்கலத்தில் சென்ற ரஷ்யாவின் ஸ்வெட்லானா சவீத்ஸ்கயா விண்ணில் நடந்த முதலாவது பெண் என்ற பெருமையைப் பெற்றார்.

1993 - இஸ்ரேல் லெபனான் மீது பெரும் தாக்குதலை ஆரம்பித்தது.

1993 - மண்கிண்டிமலை இராணுவ முகாம் விடுதலைப் புலிகளினால் தாக்கியழிக்கப்பட்டது.

1993 - தென்னாபிரிக்காவில் சென் ஜேம்ஸ் தேவாலயத்தில் 11 மதகுருக்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.

1994 - இஸ்ரேலுக்கும் ஜோர்தானுக்கும் இடையில் வாஷிங்டனில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டு 1948ம் ஆண்டு முதல் இருந்து வந்த முறுகல் நிலை முடிவுக்கு வந்தது.

1997 - கே. ஆர். நாராயணன் இந்தியாவின் 10-வது குடியரசுத் தலைவர் ஆனார். தலித் இனத்தைச் சேர்ந்த ஒருவர் இப்பதவியை வகித்தது இதுவே முதல் தடவையாகும்.

2000 - பிரான்சின் கொன்கோர்ட் சுப்பர்சோனிக் விமானம் பாரிசில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 109 பேரும் தரையில் 4 பேரும் கொல்லப்பட்டனர்.

2007 - பிரதிபா பாட்டீல் இந்தியாவின் முதலாவது பெண் குடியரசுத் தலைவரானார்.

பிறப்புகள்

1875 - ஜிம் கார்பெட், புலி வேட்டைக்காரர் (இ. 1955)

இறப்புகள்

1980 - விளாடிமீர் விசோத்ஸ்கி, ரஷ்யப் பாடகர், கவிஞர், நடிகர் (பி. 1938)

சிறப்பு நாள்

புவேர்ட்டோ ரிக்கோ - அரசியலமைப்பு நாள் (1952)
துனீசியா - குடியரசு நாள் (1957)

நீதித்துறையை தீண்டிய தீண்டாமை

உயர் சதி இந்துக்களால் 'பஞ்சமர்" என்று அழைக்கப்படும் 'ஆதி திராவிடர்கள்" வாழக்கூடிய ஊர்களில், பிராமண சாதியைச் சார்ந்த ஒருவர் நுழைந்து விட்டால், அவரை ஊருக்கு வெளியே துரத்தி விடுவது வழக்கில் இருந்துள்ளது. அத்தோடு நில்லாமல் அப்பிராமணர்கள் தீண்டிய இடங்களை சாணிப்பால் விட்டு கழுவி, சாணிப்பால் நிரம்பிய மண்பானையை ஊருக்கு வெளியே கொண்டுபோய், ஈமச் சடங்கின்போது போட்டு உடைப்பது ஆதிதிராவிடர்கள் வாழும் ஊர்களில் நடைபெற்று வந்துள்ளது என்று "தமிழ் பௌத்தம்" என்ற பெருங்கதையாடலில் இருந்து தெரியவருகிறது.



இந்திய அரசியல் சாசனஸ் சட்டம் வகுத்துள்ள சம உரிமை அறிவிக்கையில் சாதி, சமய, வர்க்க, மொழி பாகுபாடுகளுக்கும், ஒழுங்குமுரைகளுக்கும் இடம் இல்லை என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. நீதித்துறை அரசியல் சாசன வழியில் நீதியை நிலை நாட்ட வேண்டும்; நிலை நாட்டும் என்ற எதிர்பார்ப்பும் பாமர மக்களிடம் உண்டு. ஆனால் நீதிமன்றங்களே தீட்டுபடுத்தப்பட்டு மறுபடியும் கங்கை நீரால் தூய்மைப் படுத்தப்பட்ட நிகழ்வு 25 .07 .1998 அன்று இருண்ட இந்திய துணை கண்டத்தில் நிறைவேறியுள்ளது.

இந்தியாவின் மிகச் சிறந்த நீதிமன்றங்களில் ஒன்றான அலகாபாத் உயர் நீதிமன்றத்தில், உயர் சாதியை சேர்ந்த நடுவருக்கு தங்கும் அரை ஒன்று ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த அறையில் அவருக்கு முன்பு நடுவராக இருந்து தங்கியிருந்தவர் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், அந்த அரை முழுவதும் தீட்டுப்பட்டுவிட்டது என்று கங்கை நீரைக் கொண்டுவந்து புனிதப்படுத்தி, தனது நீதித்துறைக்கு புனிதம் சேர்த்துள்ள அவலம் ஊரறிய, உலகறிய நடந்தேறியுள்ளது.

மாட்டுக்கும் மடத்துக்கும், கோயிலுக்கும் கருவறைக்கும், மரபுக்கும் வழிபாட்டிற்கும், சடங்கு மரபு வழக்கத்திற்கும் புனிதம் உண்டு என்று பறைசாற்றும் பார்ப்பன மதவெறி பிடித்த கும்பல், இம்மண்ணின் மைந்தர்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் புனிதம் இல்லை என்று பறைசாற்றுகிறது. மனிதநேயமற்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களை கட்டவிழ்த்துவிடும் இந்த போக்கு, தானாகவே மாறும் என்று இருந்தால் மாறாது. மக்களெல்லாம் ஓரணியில் திரண்டு போராடி சம உரிமையை நிலைநாட்ட உறுதி ஏற்கவேண்டிய நாள் இந்நாள்.

அஜினமோட்டோ கண்டுபிடிக்கப்பட்ட நாள் இன்று

அதனால் வரும் ஆபத்துக்கள் குறித்தும், அவை அவசியமா எனவும் இன்று யோசிப்பது நல்லது.


அதென்ன அஜினமோட்டோ? ஆபத்து? - டாக்டர் கங்கா

சாம்பார், மீன் குழம்பு, ஃபிரைடு ரைஸ் என்று எல்லா உணவுகளின் ருசியையும் வாசனையையும் அதிகரிக்கப் பயன்படும் ஒரு டேஸ்ட் மேக்கர் அஜினமோட்டோ. இன்று ஹோட்டல் உணவு மட்டுமல்லாமல் வீடுகளுக்குள்ளும் தன் ராஜ்ஜியத்தை விரித்திருக்கிறது அஜினமோட்டோ.

தொடர்ந்து அஜினமோட்டோ எடுத்துக்கொண்டால் உடல் நலம் பாதிக்கப்படும் என்று சொல்லப்படுகின்றது. இந்த அஜினமோட்டோவால் உடம்புக்கு நமக்கு அப்படி என்னதான் பிரச்னை?

* அதென்ன அஜினமோட்டோ?

உணவில் வாசனையை அதிகப்படுத்துவதற்காக நாம் பயன்படுத்தும் ஒருவித வேதிப்பொருள் தான் இந்த அஜினமோட்டோ (Ajinomoto). உங்களுக்கொன்று தெரியுமா? அந்தக் காலத்திலெல்லாம், சீனர்களும் ஜப்பானியர்களும் உணவில் வாசனையை அதிகப்படுத்திக் கொள்ள ஒரு வகையான கடல்பாசியை உபயோகித்தார்கள். இந்தக் கடல் பாசியில் தான் வாசனையை மேம்படுத்த உதவும் மோனோஸோடியம் குளுட்டோமேட் அதாவது M.S.G. என்ற வேதிப்பொருள் இருப்பது தெரியவந்தது. சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு அஜினமோட்டோ(Ajinomoto) என்ற கம்பெனி இதை வியாபார ரீதியாக தயாரிக்க ஆரம்பித்தது. நாளடைவில் அஜினமோட்டோ என்ற பெயரே இந்த வேதிப்பொருளுக்கும் நிலைத்து விட்டது.

* மோனோ சோடியம் குளுட்டோமேட்

இந்த குளுட்டோமேட்டை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். நமது மூளை வளர்ச்சிக்குத் தேவையான குளுட்டோதயான் மற்றும் காமா அமினோ புட்ரிக் அமிலம் போன்றவற்றைத் தயாரிக்க இது உதவுகிறது. அதே போல் இது, மூளை நரம்புகள் வேலை செய்யவும் ஓரளவு உதவுகிறது.

அப்புறம் என்ன? அஜினமோட்டோவிலும் இந்த மோனோ சோடியம் குளுட்டோமேட் இருக்கிறது. அது உடலுக்கும் நல்லதுதானே என்கிறீர்களா? அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே?. அதிக அளவில் இந்த எம்.எஸ்.ஜி. நம் உடலில் சேர்ந்தால் அது மூளையின் ஹைப்போ தலாமஸ் என்ற முக்கியமான ஒரு பகுதியைப் பாதித்து விடும்!

* வியாபார ரீதியான அஜினமோட்டோவில் என்னவெல்லாம் இருக்கிறது?

இதில் 78% குளுடாமிக் அமிலமும் 22% சோடியமும் உள்ளது. இந்த குளுடோமேட் என்பது பால், பால் பொருள்கள், கறி, மீன் மற்றும் காய்கறிகளில் காணப்படுகின்ற ஒரு அமினோ அமிலம். நமது உடலில் கூட இந்த அமினோ அமிலம் இயற்கையாகவே உற்பத்தி செய்யப்படுகிறது.


* MSG அதிகமானால் நம் உடலுக்கு என்னென்ன பிரச்னைகள் வரலாம்?

நமது உணவுப் பழக்க வழக்கங்களின் கட்டுப்பாடு நமது மூளையில் உள்ள ஹைபோ தாலமஸ் என்ற பகுதியில் உள்ளது.

MSGன் வாசனையால் ஹைபோதாலமஸ் தூண்டப்படுகிறது. இன்சுலின், அட்ரினலின் போன்றவை சுரப்பதையும் அதிகப்படுத்துகிறது. இவை அதிகமாக உணவு சாப்பிடத் தூண்டுபவை. எனவே அதிக உணவால் முதலில் நம் எடைதான் கூடும்!

மூளையில் சிரோடோனின் என்ற பொருளின் அளவு குறைந்து, தலைவலி, மனச்சோர்வு, டிப்ரஷன், உடல் சோர்வு, உணவுக்கு ஏங்குதல் போன்றவை ஏற்படுகிறது.

எம்.எஸ்.ஜி. நமது உணவில் உள்ள துத்தநாகம் நம் உடலில் சேர்வதைக்குறைக்கிறது. தூக்க குறைபாடு ஏற்படுகிறது.

தூக்கக் குறைவால்-மூளையில் டோபாமின் (Dopamine) அளவு குறைந்து, அதன் விளைவாக ஞாபக சக்தி குறைந்து, கவனக்குறைவும் திட்டமிட்டு செயல்படும் திறனும் குறைகிறது. அதிகமான குளுடாமிக் அமிலம் (Glutamic acid) உயிரின் முக்கிய அணுவான DNA (Deoxyribonucleic acid) என்ற மூலப் பொருளையே பாதிக்கிறது என்கிறார்கள்.

இது உடனடியாக நடப்பதில்லை. பாதிப்பின் அறிகுறிகளும் உடனே வெளிப்படுவதில்லை. மெது மெதுவாக தொடர் பாதிப்பு ஏற்படுகிறது.

உடல் எடை அதிகரிப்பு, நடத்தை விபரீதங்கள், கவனக்குறைவு போன்றவை அதிகரிப்பதே இதன் சில அறிகுறிகள்.

சோதனைச் சாலை எலி போன்றவற்றை விட MSG ஏற்படுத்தும் தாக்கம் மனிதர்களுக்கு சுமார் 5-மடங்கு அதிகம்! அதிலும் கருவில் உள்ள சிசுக்களுக்கும் சிறு குழந்தைகளுக்கும் பாதிப்பு மிக அதிகம். தாயின் ரத்தம் மூலம் கருவில் உள்ள குழந்தையின் மூளையைத் தாக்கி மூளை வளர்ச்சியைப் பாதிக்கிறது.

தீவிரவாதச் செயல்கள், உணர்ச்சிகள் நிலையில்லாமை, கவனக் குறைவு ஆகியவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இதன் பாதிப்பு வேறுபடுகிறது.
பாதிக்கும் அளவு, நேரம் போன்றவையும் வேறுபடுகிறது. MSG கலந்த உணவைச் சாப்பிட்ட சில நிமிடங்கள் முதல் 2-3 நாட்களுக்குப் பிறகு கூட அறிகுறிகள் ஏற்படலாம்.

உடனே தெரியும் அறிகுறிகள் எனில், வயிற்று வலி, மூட்டு வலி, நாக்கு வீங்குதல் போன்றவை நரம்பு செல்களும் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றன.

அமெரிக்காவின் உணவு மருந்து கட்டுப்பாடு நிறுவனம் தினம் 3 கிராம் வரை MSG பாதுகாப்பானது என்று நிர்ணயித்துள்ளது. ஆனால் சிலருக்கு ஒரு கிராமுக்கு குறைவாக உணவில் சேர்த்தாலே நச்சு அறிகுறிகள் வெளிப்படுகின்றன.

தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரத்தைப் பார்த்து குழந்தைகள் ஆசையாக வாங்கி சாப்பிடும் ரெடிகுக் நூடுல்ஸில் மிகவும் அதிகமாக MSG உள்ளது. எனவே குழந்தைகள்தான் இதன் தாக்கத்திற்கு மறைமுகமாக ஆளாகிறார்கள்.

ஃபாஸ்ட் புட் (Fast Food) மையங்களில் விற்பனையாகும் அனைத்து உணவு வகைகளிலும் MSG உள்ளது. வாசனை மற்றும் ருசிக்காக அந்த உணவு சாப்பிடும் இன்றைய டீன் ஏஜ் பருவத்தினர் தங்களுக்கு ஏற்படப் போகும் ஆபத்தை உணராமல் ஆடிப்பாடிக் கொண்டு உண்டு களித்துக் கொண்டிருப்பதுதான் வேதனைக்குரிய விஷயம்.

* எந்தெந்த பொருட்களில் எம்.எஸ்.ஜி. அதிகமிருக்கிறது?

1. பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள்

2. சோயா புரதத்தால் தயாரிக்கப்படும் பொருள்கள். (உதாரணத்திற்கு சோயா சாஸ்)

3. கார்ன் மால்ட், ஈஸ்ட், பார்லி மால்ட்.

4. சூப் பவுடர்கள்.
நன்றி: கூடல்.காம்

ஜூலை 24 - வரலாற்றில் இன்று

நிகழ்வுகள்

1505 - போர்த்துக்கீச நடுகாண் பயணிகள் இந்தியாவுக்கு செல்லும் வழியில் கிழக்கு ஆபிரிக்காவில் கில்வா என்ற இடத்தைத் தாக்கி அதன் மன்னனை திறை செலுத்தாத காரணத்துக்காகக் கொன்றனர்.

1567 - ஸ்கொட்லாந்தின் முதலாம் மேரி பதவியில் இருந்து அகற்றப்பட்டாள். அவளது 1 வயது மகன் ஜேம்ஸ் மன்னனாக்கப்பட்டான்.

1911 – பெருவில் மச்சு பிச்சு என்ற 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டையை அமெரிக்க நாடுகாண் பயணி ஹிராம் பிங்கம் கண்டுபிடித்தார். இது பழைய இன்கா பேரரசின் தொலைந்த நகரம் எனக் கருதப்பட்டது.

1915 - சிக்காகோவில் ஈஸ்ட்லாண்ட் என்ற பயணிகள் கப்பல் மூழ்கியதில் 845 பேர் உயிரிழந்தனர்.

1923 - கிரேக்கம், பல்கேரியா மற்றும் முதலாம் உலகப் போரில் பங்குபற்றிய நாடுகள் சுவிட்சர்லாந்தில் கூடி புதிய துருக்கியின் எல்லைகளை நிர்ணயிக்கும் உடன்பாட்டில் கைச்சாத்திட்டனர்.

1924 - பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு (FIDE) பாரிசில் அமைக்கப்பட்டது.

1931 - பென்சில்வேனியாவில் முதியோர் இல்லம் ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 48 பேர் கொல்லப்பட்டனர்.

1943 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய, கனேடிய விமானங்கள் ஜெர்மனியின் ஹாம்பூர்க் நகரில் குண்டுவீச்சுத் தாக்குதலை ஆரம்பித்தன. நவம்பர் மாத இறுதி வரை இடம்பெற்ற இத்தாக்குதல்களில் 30,000 பேர் கொல்லப்பட்டனர்.

1969 - அப்பல்லோ 11 பாதுகாப்பாக பசிபிக் கடலில் இறங்கியது.

1974 - சைப்பிரசில் துருக்கியரின் படையெடுப்பின் பின்னர் சைப்பிரசின் இராணுவ அரசு கவிழ்க்கப்பட்டு, நாட்டில் மக்களாட்சி மீளமைக்கப்பட்டது.

1977 - லிபியாவுக்கும் எகிப்துக்கும் இடையே இடம்பெற்ற 4-நாள் போர் முடிவுக்கு வந்தது.

1982 - ஜப்பானில், நாகசாகியில் பெரும் வெள்ளம், மற்றும் மண்சரிவினால் 299 பேர்ர் கொல்லப்பட்டனர்.

1991 - இந்திய அரசு தனது புதிய பொருளாதாரக் கொள்கையை அறிவித்தது.

2001 - கட்டுநாயக்கா விமானப் படைத் தளத் தாக்குதல்: பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் விடுதலைப் புலிகளிளால் தாக்கப்பட்டதில் பல விமானங்கள் அழிக்கப்பட்டன.

2007 - லிபியாவில் 400 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. கிருமிகளைப் பரப்பியதாக எழுந்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 பல்கேரியத் தாதிகளையும் பாலஸ்தீன மருத்துவர் ஒருவரையும் லிபிய அரசு விடுதலை செய்தது.

பிறப்புகள்

1802 - அலெக்சாந்தர் டுமாஸ், பிரெஞ்சு எழுத்தாளர் (இ. 1870)

1932 - தாமரைத்தீவான், ஈழத்து எழுத்தாளார்

1963 - கார்ல் மலோன், அமெரிக்க கூடைப்பந்து வீரர்

1953 - ஸ்ரீவித்யா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 2006)

இறப்புகள்

1848 - மார்ட்டின் வான் பியூரன், ஐக்கிய அமெரிக்காவின் 8வது குடியரசுத் தலைவர்
(பி. 1782)

1974 - ஜேம்ஸ் சாட்விக், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1891).

சிறப்பு நாள்

வனுவாட்டு - சிறுவர் நாள்

Denmark Writer Pontoppidan Birth



டென்மார்க் எழுத்தாளர் பான்டாபிடான் பிறப்பு

1917 -இல் நோபல் பரிசு பெற்ற டென்மார்க் நாட்டு முற்போக்கு எழுத்தாளர் பான்டாபிடான் 1857 -ஆம் ஆண்டு சூலை 24 -ஆம் நாள் பிறந்தார். தனது 18 -ஆவது வயதில் செர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கு கால்நடையாகவே சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஏழைகளுக்கு இழைக்கப்படும் நீதியற்ற கொடும் செயல்களைக் கண்டு வெகுண்டெழுந்தார். ஏழைகள் சார்பான தன் எண்ணங்களை, ஏக்கங்களை எழுத்து வடிவத்தில் படம் பிடித்தார். அரசியல், சமயம், ஒழுக்கக் கோட்பாடுகள் ஆகியன தொடர்பான சிக்கல்களைத் தமது நூல்களில் ஆய்வு செய்தார்.

நிலம் (The Land ), வாக்களிக்கப்பட்ட உலகம் (The Promised World ), டோமனின் நாய் (doman 's Dog ) ஆகிய புதினங்களும், சுடோக்கிட்டு விங்கர், மிண்டர், நாவலர் சிட்சர் ஆகிய சிறுகதை தொகுப்புகளும், டிறேங்க்கீர், கம்சுகிப்டே, பார்தொளிங்க்கர் ஆகிய வாழ்க்கை நினைவுக் குறிப்புகளும் இவருக்கு இலக்கிய உலகில் புகழ் தேடித்தந்தன.

1943 - ஆகஸ்டு 21 -இல் இவர் இறந்தாலும் இறவாத தன் எழுத்துக் கலையில் உயிர் வாழ்கிறார். புத்துலகு படைக்க விரும்புகிறவர் எந்தச் சூழ்நிலையிலும், எந்த காலத்திலும், எந்த துறையிலும் சிந்தித்து செயல்படுவர். விடுதலையை விரும்பும் படைப்பாளர் தன் சம காலத்து வரலாற்றுச் சூழ்நிலைகளை, ஒடுக்கப்பட்டோர் பார்வையில் பதிவு செய்ய வேண்டும் என்பதற்கு டென்மார்க் எழுத்தாளர் பான்டாபிடான் ஓர் எடுத்துகாட்டு