Friday, August 6, 2010

ஜூலை 27 - வரலாற்றில் இன்று

நிகழ்வுகள்

1214 - பிரான்சில் இடம்பெற்ற போரில் இரண்டாம் பிலிப் இங்கிலாந்தின் ஜோனை வென்றான்.

1549 - பிரான்சிஸ் சேவியர் அடிகள் ஜப்பானை அடைந்தார்.

1627 - தெற்கு இத்தாலி நகரான சான் செவேரோவை நிலநடுக்கம் தாக்கியது.

1794 - பிரெஞ்சுப் புரட்சி: புரட்சியின் எதிரிகளாகக் கருதப்பட்ட 17,000 பேரத் தூக்கிலிட ஆதரித்தமைக்காக மாக்சிமிலியன் ரோப்ஸ்பியர் கைது செய்யப்பட்டார்.

1862 - சான் பிரான்சிஸ்கோ வில் இருந்து பனாமா நோக்கிச் சென்று கொண்டிருந்த "கோல்டன் கேட்" என்ற கப்பல் மெக்சிக்கோவில் தீப்பிடித்து மூழ்கியதில் 231 பேர் கொல்லப்பட்டனர்.

1865 - வெல்சிய குடியேறிகள் ஆர்ஜெண்டீனாவின் arrive in Argentina at சூபூட் பள்ளத்தாக்கை அடைந்தனர்.

1880 - இரண்டாவது ஆங்கில-ஆப்கானியப் போர்: மாய்வாண்ட் என்ற இடத்தில் ஆப்கானியப் படைகள் பிரித்தானியரை வென்றனர்.

1921 - பிரெட்றிக் பாண்டிங் தலைமையில் டொறொண்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களினால் இன்சுலின் கண்டறியப்பட்டது.

1929 - மூன்றாவது ஜெனீவா உடன்படிக்கை

1941 - ஜப்பானியர்கள் பிரெஞ்சு இந்தோ-சீனாவைக் கைப்பற்றினர்.

1953 - கொரியப் போர் முடிவு: ஐக்கிய அமெரிக்கா, சீனா, மற்றும் வட கொரியா ஆகியவற்றுக்கிடையில் போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. தென் கொரியா இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டாலும், உடன்பாட்டை மதிப்பதாக வாக்குறுதி தந்தது.

1955 - ஆஸ்திரியாவில் மே 9, 1945 முதல் நிலை கொண்டிருந்த இரண்டாம் உலகப் போரின் நட்பு நாடுகளின் படைகள் அங்கிருந்து விலகின.

1975 - விடுதலைப்புலிகளின் முதலாவது ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம் மாநகரத் தலைவர் அல்பிரட் துரையப்பா சுட்டுக் கொல்லப்பட்டார்.

1983 - வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள்: கொழும்பு வெலிக்கடை சிறையில் இடம்பெற்ற இரண்டாம் கட்ட படுகொலை நிகழ்வில் 18 தமிழ்க் கைதிகள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.

1990 - பெலாரஸ் சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலையை அறிவித்தது.

1990 - திரினிடாட் டொபாகோவில் இஸ்லாமியத் தீவிரவாதிகள் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் பிரதமர் மற்றும் அமைச்சர்களை பணயக் கைதிகளாக ஆறு
நாட்கள் வைத்திருந்தனர்.

1997 - அல்ஜீரியாவில் "சி செரூக்" என்ற இடத்தில் 50 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

2002 - உக்ரைனின் லுவிவ் நகரில் வான் களியாட்ட நிகழ்ச்சியின் போது போர் விமானம் ஒன்று மக்களின் மீதூ வீழ்ந்ததில் 85 பேர் கொல்லப்பட்டனர். 100 பேர் காயமடைந்தனர்.

2007 - பீனிக்ஸ், அரிசோனாவில் இரண்டு ஹெலிகப்டர்கள் வானில் மோதின.

பிறப்புகள்

1824 - அலெக்சாண்டர் டுமாஸ், பிரெஞ்சு எழுத்தாளர் (இ. 1895)

1853 - விளாடிமிர் கொரலென்கோ, சோவியத் எழுத்தாளர் (இ. 1921)

1876 - தேசிக விநாயகம்பிள்ளை, கவிமணி (இ. 1959)

1879 - நாவலர் சோமசுந்தர பாரதியார், தமிழறிஞர் (இ. 1959)

1955 - அலன் போடர், ஆஸ்திரேலிய துடுப்பாளர்
[
இறப்புகள்

1953 - சோமசுந்தரப் புலவர், ஈழத்துக் கவிஞர் (பி. 1878)

1987 - சலீம் அலி, இந்தியப் பறவையியல் வல்லுநர் (பி. 1896)


மேலர் (மேயர்) ஆல்பிரட் துரையப்பா சாவு

மக்களால் தமிழர்களின் துரோகி எனக் கருதப்பட்ட யாழ்ப்பான மேலர் (மேயர்) ஆல்பிரட் துரையப்பா கொலை செய்யப்பட நாள் இதுவாகும். இவர் யாழ்ப்பாணத்தில் சிங்கள பேரினவாத அரசின் முகவராக செயல்பட்டவர். தமிழர்களின் அரசியல் உரிமையைப் பறிக்கும் புதிய அரசியலமைப்புச் சட்டம் 1972 -இல் சிங்கள அரசால் கொண்டு வந்த போதும், தரப்படுத்துதல் மூலம் தமிழ் மாணவர்களின் முன்னேற்றம் தடை செய்யப்பட போதும் அரசின் கொடூர சமூகத்தின் வெளிப்பாடாக ஆல்பிரட் துரையப்பா வடக்கு பகுதியில் செயல்பட்டார்.

தனது அரசியல் ஊதியத்திற்காக , சமூக அக்கறையுடன் செயல்பட்ட தமிழ் இளைஞர்களின் எதிர்ப்புகளை குழி தோண்டி புதைத்தார். காவலர்களுக்குச் செய்தி சொல்லி பல இளைஞர்களை காட்டிக் கொடுத்தார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் இறுதிநாளில் குழப்பத்தை உண்டாக்கி, சிங்கள காவலர்களின் வன்முறைத் தாக்குதலுக்கு துணைபோனார். அத்தாக்குதலுக்கு அஞ்சி மக்கள் கூடம் சிதறுண்டு ஓடிய குழப்பத்தில் ஒன்பது தமிழர்கள் கொல்லப்பட்டனர்.




எல்லாவகையிலும் இரண்டகராகச் செயல்பட்ட ஆல்பிரட் துரையப்பாவை தமிழ்ப்புலிகள் 27 .07 .1975 அன்று வரதராச பெருமாள் கோயில் அருகே சுட்டு கொன்றனர். இதுவே தமிழீழப் போராட்டத்தில் முதல் கொலை எனக் கருதப்படுகிறது. இக்கொலையை ஒரு பழைய கைத்துப்பாக்கியையும், தீக்குச்சிகளின் நுனியிலிருந்த வேதி பொருளைச் சேர்த்து செய்யப்பட துப்பாக்கி குண்டையும் பயன்படுத்தியே இன்றைய ஈழத் தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் செய்தார்.

விடுதலை வரலாற்றில், அதுவும் போர்க்கருவிப் போராட்ட முறையில் எதிரிகளைவிட, துரோகிகளே முதலில் களையப்பட வேண்டியவர்கள்

No comments: