Saturday, October 10, 2009

மின்னனு வாக்குபதிவு பொய்யா மெய்யா?

கடந்த இந்திய பாராளுமன்ற தேர்தலில் மின்னனு வாக்குபதிவு வழக்கம்போல " வரலாறு காணாத ஓட்டுபதிவு" நிகழ்ந்து இருக்கிறது. ஆனால் மின்னனு வாக்குபதிவு மீது எதிர்கட்சியினரும் மக்களும் நம்பிக்கை இழந்துள்ளனர்.

காரணம் பல அவற்றில் ஒரு சில இங்கே...

விருதுநகர்

எலெக்ட்ரானிக் வாக்குப் பதிவு இயந்திரத்தில், கள்ள ஓட்டுப் பதிவு
நடந்திருக்கிறது என்ற புகார் இருக்கிறது; இது ஒதுக்கி விடக் கூடியது அல்ல என்கிற எண்ணத்தை, விருதுநகர் விவகாரம் ஏற்படுத்துகிறது.

விருதுநகரில் (வைகோ தொகுதி) பதிவான வாக்குகளை விட, வாக்கு எண்ணிக்கையின்போது 23,000 வாக்குகள் கூடுதலாகக் கிடைத்திருக்கின்றன. இது எப்படி நடக்கும்? பல பூத்களில் இயந்திரங்களில், கை சின்ன பட்டன், யாராலோ, பலமுறை அழுத்தப்பட்டிருக்கிறது. அதனால்தான், பதிவான வாக்குகளை விட, எண்ணப்பட்ட வாக்குகள் அதிகமாகி, வைகோவின் தோல்வி அறிவிக்கப்பட்டிருக்கிறது. யாருமே இவ்வாறு இயந்திரத்தில் புகுந்து விளையாடவில்லை என்றால், பதிவான வாக்குகள், எண்ணிக்கையின் போது கூடிய மாயம் எவ்வாறு நடந்தது?

மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் என்பது இரு பகுதிகளை கொண்டது.

1. கட்டுப்பாட்டு பகுதி 2. வாக்கு பதிவு பகுதி

இவை இரண்டும் ஒரு 5 மீட்டர் கேபிளால் இணைக்கப்பட்டிருக்கும்.
கட்டுப்பாட்டு பகுதி என்பது ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்தின் தேர்தல் அதிகாரி முன்பு வைக்கப்படிருக்கும்.
வாக்குப்பதிவு பகுதி என்பது வாக்களிக்கும் அறையில் வைக்கப்பட்டிருக்கும். வாக்கு மைய தேர்தல் அதிகாரி வாக்கு சீட்டுக்கு பதிலாக கட்டுப்பாட்டு பகுதியில் இருக்கும் ஒரு பட்டனை அழுத்திய பிறகுதான் வாக்களிக்க வாக்கு பதிவு பகுதி தயாராகும். வாக்குப்பதிவு அறைக்குள் செல்லும் வாக்காளர் தான் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்தின் முன்பாக உள்ள நீல நிற பட்டனை அழுத்துவதால் வாக்குபதிவு செய்யப்படுகிறது.

மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு 1998 ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடந்த சட்ட பேரவை தேர்தலின் போது மத்திய பிரதேசம்,(5) ராஜஸ்தான்(5) மற்றும் டெல்லி மாநிலத்தில் 6 தொகுதிகளிலும் மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது.

மின்னணு வாக்கு பதிவு இயந்திரமானது 6 வோல்ட் அல்கலைன் பேட்டரியால் தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே
மின்சாரம் இல்லாத பகுதிகளிலும் இதனை பயன்படுத்தலாம்.

ஒரு மின்னணு வாக்குபதிவு இயந்திரத்தில் பதிவு செய்யப்படும் அதிகபட்ச வாக்குகள் 3840.

ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்திலும் 1500க்கு அதிகமாக வாக்குகள் பதிவாகாது என்பதால் இதுவே
போதுமானது.

இந்த மின்னணு வாக்குபதிவு இயந்திரத்தில் உள்ள வாக்கு பதிவு பகுதியில் அதிகபட்சமாக 64 வேட்பாளர்களின் பட்டியல் இருக்கும். 64க்கும் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிட்டால் வாக்கு சீட்டு முறையைதான் பயன்படுத்த வேண்டியிருக்கும்.

ஒரு குறிப்பிட்ட வாக்கு பதிவு மையத்தில் உள்ள ஒரே ஒரு வாக்கு பதிவு இயந்திரம் செயல்படாமல் போனால் அந்த வாக்கு பதிவு மையத்தின் தேர்தல் அதிகாரி தன்னிடம் உள்ள கூடுதலான வாக்கு பதிவு இயந்திரத்தை
பயன்படுத்துவார். ஒரு வேளை வாக்கு பதிவு நடைபெற்றுக்கொண்டிருக்கும் சமயம் அந்த இயந்திரம் பழுதுப் பட்டாலும் கவலைப்பட்ட தேவையில்லை. ஏனெனில் அதுவரை பதிவான வாக்குகள் இயந்திரத்தின் கட்டுப்பாட்டு பகுதியில் சேமிக்கப்பட்டிருக்கும் அந்த எண்ணிக்கையிலிருந்தே புது இயந்திரம் செயல்படும்.

இந்த மின்னணு வாக்குபதிவு இயந்திரத்தை வடிவமைத்தவர்கள் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் பெங்களூர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் ஹைதராபாத்.

இந்த மின்னணு வாக்குபதிவு இயந்திரத்தின் விலை 1989ல் 5,500 ரூபாயாக இருந்து. இப்பொழுது அதைவிட குறைவு. ஆனால் வாக்கு சீட்டிற்காக பல கோடி ரூபாய் மதிப்புள்ள காகிதங்கள் அச்சடிக்கப்படுவதும் அதை குறிப்பிட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்ல ஆகும் செலவுகளுடன் ஒப்பிட்டால் இந்த மின்னணு வாக்குபதிவு
இயந்திரத்தினால் ஆகும் செலவு மிகமிக குறைவு.

நமது நாட்டில் எழுத்தறிவற்ற மக்கள் அதிகமாக உள்ளனர். அவர்களுக்கு மிகவும் எளிமையான முறை இந்த மின்னணு வாக்குபதிவு இயந்திர முறையே. வாக்களர்கள் தங்களுக்கு பிடித்த வேட்பாளரின் சின்னத்தின் அருகில் உள்ள நீல நிற பட்டனை மட்டும் அழுத்தினால் போதும். வாக்குப் பதிவாகிவிடும்.

தேர்தலின் போது வாக்குச்சாவடியை கைப்பற்றுதல் போன்ற ஒழுங்கீன நடவடிக்கைகளை கூட வாக்கு பதிவு இயந்திரத்தின் மூலம் தடுக்க இயலும். வாக்கு சீட்டு முறையில் குறிப்பிட்ட சிலர் பாதுகாப்பை மீறி வாக்குச்சாவடிக்குள் நுழைந்து வாக்குச்சீட்டுகளை கைப்பற்றி ஆயிரம் வாக்குகளை ஒரே நேரத்தில் தங்கள் வேட்பாளரின் சின்னத்தில் வாக்களித்து விட்டு சென்று விடலாம். ஆனால் மின்னணு வாக்குபதிவு இயந்திரத்தில் ஓரு நிமிடத்தில் 5 வாக்குக்ளுக்கு அதிகமாக வாகளிக்க முடியாது. அது மட்டுமின்றி வாக்குசாவடியின் தலைமை அதிகாரி தன்னிடம் உள்ள கட்டுப்பாடு கருவியை அணைத்து விட்டால் மேற்கொண்டு ஒரு வாக்கும் பதிவாகாது.
எனவே தேர்தலின் போது வாக்குச்சாவடியை கைப்பற்றுதல் போன்ற ஒழுங்கீன நடவடிக்கைகளை கூட வாக்கு பதிவு இயந்திரத்தின் மூலம் தடுக்க இயலும்.

ஒரே நேரத்தில் மக்களவை தேர்தலுக்கும் மாநில சட்ட பேரவை தேர்தலுக்கும் மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தை பயன் படுத்தலாம். ஆனால் வாக்குச்சீட்டு முறையில் தனித்தனியாகத்தான் வாக்குச் சீட்டு அச்சடிக்க வேண்டும்.

முன்பே கூறியது போன்று மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தின் மூலம் காகிதம் மற்றும் போக்குவரத்து செலவு குறைகிறது. வாக்கு எண்ணிக்கையின் போது மிக சீக்கிரத்தில் வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவித்து
விடலாம். முன்பு ஒரு தொகுதியின் முடிவை அறிவிக்க 30லிருந்து 40 மணி நேரமாகும். ஆனால் தற்போது இந்த மின்னனு வாக்கு பதிவு இயந்திரத்தின் மூலம் வாக்கு எண்ணிக்கை அதிகபட்சம் 6 மணி நேரத்திற்குள்ளாக முடிந்து விடுகிறது. அதுமட்டுமின்றி இந்த இயந்திரம் செல்லாத வாக்குகளை தடுத்து விடுகிறது. வாக்குச்சீட்டு முறையில் ஒரு வாக்காளர் ஒரே நேரத்தில் இரு வேட்பாளர்களுக்கு வாக்களித்துவிடுவார். ஆனால் இந்த இயந்திரத்தில் ஒரு முறை ஒரு குறிப்பிட்ட நீல நிற பட்டனை அழுத்திவிட்டால் அதுவே வாக்காக பதிவாகிவிடும். அடுத்த நீல நிற பட்டனை அழுத்தினாலும் வாக்கு பதிவாகாது.

இந்த வாக்கு பதிவு இயந்திரத்தை பயன்படுத்துவதனால் வாக்களிக்கும் நேரமும் குறையும். முன்பு ஒரு வாக்காளர் வாக்கு சீட்டையும் மை நிரப்பிய முத்திரையையும் தேர்தல் அதிகாரியிடம் இருந்து பெற்று கொண்டு வாக்களிக்கும் அறைக்குள் செல்ல வேண்டும். ஆனால் தற்போது நேராக வாக்களிக்கும் அறைக்குள் சென்று இயந்திரத்தின் பட்டனை அழுத்த வேண்டியதுதான்.

இந்த இயந்திரத்தின் மெமரியில் 10வருடங்கள் வரை பதிவான வாக்குகளை பாதுகாத்து வைத்திருக்கலாம்.

ஒரு தொகுதியில் வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு தோல்வியடைந்த வேட்பாளர் நீதி மன்றத்தில் தேர்தல் முடிவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தால் மீண்டும் வாக்குகளை எண்ணி அறிவிக்க இயலும்.
மேலும் வாக்கு பதிவு முடிந்ததும், வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பும் இந்த வாக்கு இயந்திரத்தின் பேட்டரியை அணைத்து கழற்றிவிட்டாலும் பதிவான வாக்குகள் இயந்திரத்தின் மெமரியில் இருக்கும்.

ஒருவர் தான் வாக்கு பதிவு சரியாக செய்தாரா இல்லையா என்பதை அவரே தெரிந்து கொள்ள முடியும். அவர் தன் வேட்பாளருக்கு நேராக உள்ள நீல நிற பட்டனை அழுத்திய உடன் அதற்கருகிலேயே ஒரு சிவப்பு விளக்கு எரியும். அதுமட்டுமின்றி ஒரு பீப் ஒலி கேட்கும். இதன் மூலம் தான் வாக்கு பதிவு செய்ததை அவர் தெரிந்து கொள்ள
முடியும்.

ஒரு வாக்காளர் தான் வாக்களிக்கும் போது அந்த இயந்திரத்தில் மின் கசிவு ஏற்பட்டு மின்சார பாதிப்பு ஏற்படும் என்று பயப்பட தேவையில்லை. அது வெறும் 6வோல்ட் மட்டும் கொண்ட பேட்டரியால் இயங்குகிறது. அதில் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் அளவுக்கு மின்சாரம் பாய்வதில்லை.

நூறு வாக்குகள் வரை அது சரியாக இயங்குவதாகவும், நூறு வாக்குகளுக்கு பிறகு ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு மட்டுமே வாக்குகள் விழுமாறு இந்த இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது என்ற ஒரு வதந்தி மக்களிடையே நிலவுகிறது. அது தவறு. இந்த இயந்திரத்தில் பயன்படுத்தப்படும் மைக்ரோ சிப் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அந்த மைக்ரோ சிப்பை சிதைக்காமல் அதை திறந்து அது நூறு வாக்குகளுக்கு மேல் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வாக்குகள் சேரும்படி அதன் ப்ரோக்ராமை மாற்றி எழுத முடியாது.

மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் மிக லேசான எடை கொண்டிருப்பதாலும், அதை மூடகூடிய பெட்டி பாலிப்ரோபைலின் பொருளால் செய்யப்பட்டிருப்பதாலும் அதனை தூக்கிசெல்வது எளிது. ஒரு லாரிக்குள் வைக்கமுடிகிற வாக்கு சீட்டு பெட்டிகளின் எண்ணிக்கையை காட்டிலும் இரு மடங்கு எண்ணிக்கையில் இந்த இயந்திரங்களை வைக்கலாம்.

இந்த இயந்திரத்தை மிகவும் குளிர்ச்சியான பகுதியில் வைக்க வேண்டிய அவசியமில்லை. அது வைக்கப்படுகின்ற அறையில் தூசுகளோ, தும்புகளோ இல்லாமல் தூய்மையாக வைத்திருக்க வேண்டியது மட்டும் அவசியம்.

வழக்கமான வாக்குச்சீட்டு முறையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எவ்வளவு வாக்குகள் பதிவாகின என சொல்ல முடிவதுபோல இந்த இயந்திரத்திலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எவ்வளவு வாக்குகள் பதிவாகியுள்ளன என சொல்ல முடியும். இந்த இயந்திரத்தின் டோட்டல் என்கிற பட்டனை அழுத்துவதன் மூலம் அதுவரை பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை தெரியவரும். அதே போன்று ரிசல்ட் என்ற பட்டனை அழுத்துவதன் மூலம் ஒவ்வொரு வேட்பாளருக்கும் கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கை தெரியவரும்.

ஒரு தொகுதியில் மொத்தம் 10 வேட்பாளர்கள் மட்டும் போட்டியிடுகின்றனர். ஒரு இயந்திரத்தில் 16 பேருக்கான பட்டியல் இருக்கும் இந்த 11 முதல் 16 வரையிலான பட்டன்களை வாக்களர்கள் தவறுதலாக அழுத்தினாலும் வாக்குக்கள் பதிவாகாது. எனெனில் வாக்கு பதிவு துவங்குவதற்கு முன்பு தேர்தல் அதிகாரி அந்த 6
பட்டன்களையும் செயலிழக்கச் செய்துவிடுவார்.

முன்பு வாக்கு பெட்டிகளின் மீது எண் எழுதும் வழக்கம் இருந்தது போல் தற்போதும் ஒவ்வொரு கட்டுப்பாட்டு பகுதிக்கும் ஒரு சிறப்பு எண் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த எண்ணை ஒவ்வொரு வேட்பாளரின் தேர்தல் ஏஜெண்ட் பார்த்து எழுதிக்கொள்ள அனுமதிக்கப்படுவார். அதற்கு பிறகுதான் வாக்குபதிவு துவங்கும். அதனால் இயந்திரம் மாறிவிட்டது என்ற குற்றச்சாட்டு எழுவதற்கான சாத்தியமில்லை

க‌ட்சிக‌ளின் விள‌க்க‌ம்
பா.ம.க

ஓட்டுப்பதிவு எந்திரத்தில் மோசடி செய்யலாம்!''-ராமதாஸ் செய்முறை விளக்கம்!!
எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரத்தில் எப்படி மோசடி செய்யலாம் என்பது பற்றி 'செயல்முறை விளக்கம்' அளித்தார். இதற்காக பாமகவே தயாரித்த எலக்ட்ரானிக் இயந்திரம் ஒன்றில் திமுகவின் உதயசூரியன், பாமகவின் மாம்பழம் உள்ளிட்ட சின்னங்கள் இருந்தன.

அந்த இயந்திரத்தில் நிருபர் ஒருவரை அழைத்து மாம்பழம் சின்னத்தில் 20 ஓட்டுகளை போடும்படி கூறினர். அதன்படி 20 ஓட்டுகள் போடப்பட்டன. யார் யாருக்கு எவ்வளவு ஓட்டுகள் விழுந்தன என்று எண்ணும்போது, உதயசூரியன் சின்னத்துக்கு 8 ஓட்டுகளும், மாம்பழம் சின்னத்துக்கு 12 ஓட்டுகளும் விழுந்ததாக இயந்திரம் காட்டியது.

இதைக் காட்டி ஒரு ஓட்டுகூட போடப்படாத உதயசூரியன் சின்னத்துக்கு எப்படி 8 ஓட்டுகள் வந்தன என்று ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரத்தில் உள்ள புரோகிராமை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். மாலை 4 மணிக்கு மேல்விழும் ஓட்டுகள் எல்லாம் உதயசூரியன் சின்னத்துக்கு விழும்படி இயந்திரத்தில் புரோகிராமை அமைத்துக் கொள்ளலாம். குறிப்பிட்ட சின்னத்துக்கு போடும் ஓட்டுகள் அனைத்தும் உதயசூரியன் சின்னத்துக்கு வரும்படியும் மாற்றலாம்.

ஓட்டு பதிவு செய்வதற்காக பட்டனை அழுத்தும் போது அங்கிருக்கும் அதிகாரிகள், குறிப்பிட்ட வயரை பிடுங்கிவிட்டு விடவும் வசதியுள்ளது. இதனால் சத்தம் மட்டுமே கேட்கும். ஆனால் ஓட்டு பதிவு ஆகாது என்று தானே உருவாக்கிய எந்திரத்தைக் காட்டி மனம்போன போக்கில் பேசினார் ராமதாஸ்.

அதிமுக
மின்னணு வாக்குப்பதிவிற்கு பதிலாக, வாக்கு சீட்டு முறையை பயன்படுத்தவேண்டும்
ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

திமுக
இன்றைக்கு இயந்திரத்திலே கோளாறு என்று சொல்கிறவர்களைக் கேட்கிறேன் சென்ற முறை நடைபெற்ற தேர்தலிலே இதே இயந்திரத்தை வைத்துத் தானே தேர்தல் நடைபெற்று, இவர்கள் போட்டியிட்டார்கள். அப்போது வெற்றி பெற்றார்களே, அப்போது கோளாறு இல்லை, இப்போது மட்டும் கோளாறா? அவர்கள் வெற்றி பெற்றால் நல்ல இயந்திரம், தோற்றால் இயந்திரத்திலே கோளாறா?

"எங்கள் சின்னத்திற்கு வாக்கினைப் பதிவு செய்தால், அது உதய சூரியன் சின்னத்திலே விழுகிறது'' - என்ன அற்புதமான கற்பனை இது? அப்படியென்றால், விழுந்ததில், 9 இடத்தில் உங்களுக்கு சார்பாக விழுந்ததே, மொத்தம் 28 இடங்களில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க. கூட்டணி 12 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறதே, அந்த 12 இடங்களில் மாத்திரம் வாக்குப்பதிவு இயந்திரத்தில் உங்கள் சின்னத்தில் பதிவு செய்தால், உங்கள் சின்னத்திற்கே விழுந்திருக்கிறதா? மற்ற 28 இடங்களில் உங்கள் சின்னத்திற்கு வாக்கு பதிவு செய்தால், எங்கள் சின்னத்திற்கு விழுந்து விட்டதா? இதையெல்லாம் சிந்தித்து பார்க்கவேண்டும்.

தேமுதிக
தமிழக சட்டசபைக்கு நடைபெறப் போகும் இடைத் தேர்தலில் மின்ணனு வாக்குப் பதிவு இயந்திரங்களை பயன்படுத்த தடை விதிக்கக் கோரி தேமுதிக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா பேட்டி ( குமுதம் 3-6-09)
தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவைச் சந்தித்தோம். "தேர்தல் ஆரம்பிக்குறதுக்குப் கொஞ்சம் நேரம் முன்னாடி வோட்டிங் மெஷினின் சரியான செயல்பாட்டை எல்லா கட்சிகாரர்களுக்கும் காட்டுறதுக்காக ஒரு சின்ன சாம்பிள் தேர்தல் ( Mock Poll ) நடத்துவோம். மெஷினின் ஆபரேஷனில் எல்லோரும் திருப்தி ஆன பிறகுதான் தேர்தலைத் தோடங்குவோம். ஒரு சின்னத்துக்கு பட்டனை அழுத்துனா இன்னொரு சின்னத்தில் லைட் எரிஞ்ச சம்பவம் எல்லாம் அந்த சாம்பிள் தேர்தலில் நடந்ததுதான் அதை உடனே சரி செஞ்சாச்சு ஒரு வேட்பாளர் சர்ச்சைக்குரிய முறையில் ஜெயிச்சதாகச் சொல்லப் படுற புகாரைப் பொறுத்தவரை. அந்தத் தொகுதிக்குப் பொறுப்பு வகிச்ச "ரிட்டர்னிங் அஃபீசர்" எனக்கு தர்ற தகவலைத்தான் நான் சொல்ல முடியும்" என்ற நரேஷ் குப்தாவின் பேச்சில் எக்கச்சக்க கோபம்

ஏமாற்று வேலை

பெரும்பாலான‌ நாடுக‌ளில் ப‌ய‌ன்ப‌டுத்தாத மின்னனு இயந்திர முறை (இந்தியாவுக்காகவே தயாரிக்கப்பட்டது) இந்தியாவில் அமுல்ப‌டுத்திய‌து ஏன்?

கடந்த இந்திய பாராளுமன்ற தேர்தலில் விரைவாக முடிவு அறிவிக்க முடியும் என்றாலும் தாமதமாக மாலை 6 மணிவரை இழுத்தடித்தது ஏன்?

பதிவான வாக்குகளை விட எண்ணும்பொழுது அதிக வாக்குகள் இருந்தது எப்படி?

வேக‌மான‌ வாக்குப‌திவு ம‌ட்டும‌ல்ல‌ வேக‌மாக‌ க‌ள்ள‌ ஓட்டும் போட‌முடியும் என்ப‌தெ உன்மை.

கழிவும் கலிசடையும்

தீவிரவாதத்தை ஒழிப்பதாக கூறிக்கொண்டு இலட்சக்கணக்கான தமிழர்களை படுகொலை செய்யவும் எஞ்சியுள்ள மக்களையும் பட்டினியாலும் நோயாலும் தினமும் சாகடித்து கொண்டிருக்கிற இலங்கை அரசுக்கு "முழு ஆதரவு" அளித்து ஏராளமான‌ ஆயுதங்களையும் பணத்தையும் கொடுத்து ஒரு பெரிய "இனப்படுகொலையை" நடத்தி கொண்டிருக்கிறது "இந்திய தேசிய காங்கிரஸ்" தலைமையிலான இந்திய அரசு.

ஒட்டுமொத்த தமிழர்களும் இந்த இனப்படுகொலையை கண்டு வேதனையில் இருக்க தன் கட்சியை பலப்படுத்த கட்டுகட்டாக பணத்தை இறைத்து கொண்டிருக்கிறது காங்கிரஸ்

விளைவு?

தன்னை வாழவைத்து கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு "கோக்" குடித்து வயிற்றை புண்ணாக்க கற்றுகொடுத்த இளைய தளபதி காங்கிரசுடன் கைகோர்க்க‌ தலையை ஆட்டிவிட்டாரம்.

கழிவும் கலிசடையும் ஒன்னுசேர்ந்து கலக்கபோவுது
இனி இந்திய சாக்கடை அரசியல் உலகம் முழுக்க நாறப்போவுது

தமிழர்களே மறக்காமல் நன்றி சொல்லுவோம்

தமிழர்களே மறக்காமல் நன்றி சொல்லுவோம்

ஒரு சில மாதங்களுக்கு முன்பு

ஈழத்தமிழர்களை பாதுகாக்க‌ கடிதம் எழுதிக்கொண்டே இருந்தார் தமிழின தலைவர்.

ஈழத்தில் இலட்சம் தமிழர்கள் இறந்தபோது, பல அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்திகொண்டிருக்க, முத்துகுமார் தொடங்கி பல இளைஞர்கள் தீக்குளிக்க, தமிழர்கள் வேதனையில் இருக்க "தமிழின"தலைவர், ஈழத்தமிழர்களை பாதுகாக்க "அரை நாள் உண்ணாவிரதம்" இருந்து தமிழர்களின் மீது தனக்குள்ள "நன்றியை" காட்டி அனைவரையும் "அசத்தினார்"

(அது மட்டுமா "ஒன்றிரன்டு மக்கள்தான் இறந்திருக்கிறார்கள், பெரியபாதிப்பு எதுவுமில்லை" என்று தொலைகாட்சிகளுக்கு செய்தி கொடுத்தார் காங்கிரசு கருங்காலி இலங்கோவன்)

இப்பொழுது தமிழின‌ப்படுகொலைக்கு காரணமான காங்கிரசு கட்சியின் ஒ.எஸ்.ஆர் இறந்ததற்காக அரசு விடுமுறையே அறிவித்திருக்கிறார். அதோடு நிருத்தாமல், "தமிழகமே துக்கத்தில் மூழ்கியுள்ளது" என்று வழக்கம்போல தனது பொன்மொழியை உதிர்த்திருக்கிறார் "மைனாரிட்டி" முதல்வர். அவர‌து வீடுதான் அவருக்கு தமிழகமோ?

தமிழர்களின் உயிருக்காக குரல் கொடுக்காமல் சீக்கியர்களின் மயிருக்காக குரல் கொடுக்கும் பிரதமர் !!

தமிழர்களின் உயிருக்காக கடிதம் எழுதிக்கொண்டே இருந்துவிட்டு ஒரு தெலுங்கன் இறந்ததற்காக அரசுவிடுமுறை
அறிவிக்கும் முதல்வர் !!

நாமும் மறக்காமல் "நன்றி" காட்டவேண்டும் நன்பர்களே !!

கடவுளும் - பண்பும்

உலகமும் உலகத்தில் காணப்படுவனவும் தெய்வீகத் தன்மையால் ஏற்பட்டவை என்றால், இக்கணக்கற்ற தெய்வீகத் தன்மைகள் ஒவ்வொன்றாக சிறிது சிறிதுகாலமே இருந்து பின்னர் மறைந்து போவானேன்? தெய்வீகத்தன்மை என்பதுவே அநித்தியமா? சும்மா இருந்த கடவுள் திடீரென்று இவ்வுலகத்தை தோற்றுவிக்கும்படியான அவசியமோ, காரணமோ என்ன அவர் மூளையில் பாய்ந்தது? ஒவ்வொன்றையும் நினைத்து நினைத்து ஒவ்வொன்றாகச் செய்தாரா? இந்த நினைப்புகள் அவர் மண்டையில் ஏன் புகுந்தன? திடீரென்று ஒருநாட் காலையில் தூங்கி எழுந்தவுடன் எனக்கு ஒரு உலகம் வேண்டும் என்று காரணமின்றி எண்ணியவுடன் இவ்வுலகம் தோன்றிவிட்டதா? கடவுள் தான் உலகத்தைப் படைத்தார் என்னும் ஆஸ்திகர்கள் இதற்கு விடையளிக்கட்டும்!

பார்ப்பனர் மனிதனுக்கு ஒழுக்கத்தனமே என்பது இல்லை. ஆதலால், ஒழுக்கத்தை நிலை நிறுத்த கடவுள் என்ற எண்ணமும் - நம்பிக்கையும் வேண்டும் என்கிறார்கள். முதலாவது ஒழுக்கம் என்பது என்னவென்று

இவர்கள் சொல்லட்டும். ஒரு மனிதன் ஒழுக்கம் என்று நினைப்பதை மற்றவனும் நினைக்கின்றானா? ஒரு தேசத்தார் கொண்டுள்ள ஒழுக்கத்தை பிறதேசத்தார் ஆதரிக்கிறார்களா? பார்ப்பான் குடியிருக்கும் வீட்டில் தமிழன் குடியிருக்கலாகாது என்ற ஒழுக்கமும், பார்ப்பனன் அக்கிரகாரத்தில் பறையன் நடக்கக் கூடாது என்ற ஒழுக்கமும், சைவன் கும்பிடும் கோயிலில் வள்ளுவன் கும்பிடலாகாதென்ற ஒழுக்கமும், வடகலைக்காரன் கோயிலில் தென்கலைக்காரன் போகக் கூடாதென்ற ஒழுக்கமும், பார்ப்பனச் சிறுவனும் பார்ப்பனரல்லாச் சிறுவனும் சமாக உட்கார்ந்து உண்பதைக் கண்டால் ஒரு மாதம் பட்டினிக் கிடப்பேன் என்ற ஒழுக்கமும், ஒரு ஜாதிப் பெண்களுக்கு மட்டும் பொட்டுக்கட்டி விபசாரிகள் ஆகலாமென்ற ஒழுக்கமும், பத்து வயது பெண்ணை விதவையாக்கி அவளை ஆயுட்

பரியந்தம் விதவையாக வைத்திருந்து அவள் கள்ளத்தனமாய் புணர்ந்து ஈன்ற மகவை சாக்கடையிலெறிந்து பன்றிக்கு இரையாக்கி வரும் ஒழுக்கமும், எல்லா தேசத்து மக்களுக்கும் அவசியந்தானா? இவ்வாத்திக ஒழுக்கங்களைக் காப்பாற்ற ஒரு கடவுள் அவசியந்தானா என்றும் கேட்கிறேன்.

இதே மாதிரி ஒரு நாட்டை அடிமைப்படுத்த பிற நாட்டார் கத்திகளும், துப்பாக்கிகளும், பீரங்கிகளும், வெடிகுண்டுகளும் செய்து ஆயிரமாயிரமான மக்களை வெட்டி வீழ்த்தி அரசு புரியும் ஒழுக்கமும், அதைக் காப்பாற்ற ஒரு கடவுளும் அவசியந்தானா என்று கேட்கிறேன்.

அப்படியானால் திருடனுடைய “திருட்டு” ஒழுக்கத்திற்கும், பேராசைக்காரனுடைய “செல்வ” ஒழுக்கத்திற்கும், அமெரிக்கருடைய “நீக்ரோ” ஒழுக்கத்திற்கும், பிரிட்டிஷாருடைய “ஏகாதிபத்திய” ஒழுக்கத்திற்கும், பார்ப்பானனுடைய “யாக” ஒழுக்கத்திற்கும், பச்சாக்காரக்கோனுடைய “கொள்ளை” ஒழுக்கத்திற்கும், நம்பூதிரியுடைய “வைப்புச் சம்பந்த” ஒழுக்கத்திற்கும் ஒவ்வொரு கடவுள் வேண்டாமா என்று கேட்கிறேன்.

உண்மையில் ஒரு கடவுள் இருப்பதானால், அக்கடவுள் மெய்யாகவே சர்வ வியாயுமானால் அவர் இருக்கிறதைக் குறித்து உலகத்தில் பலர் ஏன் அவநம்பிக்கைக் கொள்ள வேண்டும்? மனிதனுடைய உள்ளத்திலோ, கண்களின் முன்னிலையிலோ, பிரத்தியட்சத்தில் நிலைக்கட்டிக் கொள்ள முடியாத கடவுளும் ஒரு கடவுள்தானா? அக்கடவுக்கு சர்வ சக்தன் என்றொரு பெயரும் கூடவா?

கடவுள் இருப்பது உண்மையானால் அவரைப்பற்றி பலர் பலவிதமாக நம்புவானேன்? “மக்களே என்னைத் தவறுதலாக நம்பி, நீங்கள் வீணாக

மனக் கசப்பும், மதவெறியும், மதப்போரும் ஏற்படுத்தி அதனால் ஒருவரையொருவர் மாய்த்து வீழ்த்த வேண்டாம்! இதோ எனது உண்மை நிலை இது எனது நோக்கங்கள் இவை என்னை நீங்கள் கலக்கமின்றி அறிந்து கொள்ளுங்கள்” என்று அக்கடவுள் சொல்லக்கூடாதா? அவ்விதம் சொல்லி நாட்டில் சமாதானத்தை நிலை நிறுத்தாத கடவுளும் புத்திசாலிதானா?

சில பேர் கடவுள் எங்கே - எப்படி என்று கேட்டு சந்தேகிக்கவும் சில பேர் கடவுள் ஒருவர்தானென்று சொல்லவும், சில பேர் கடவுள் பலவுள என்று பேசவும், மற்றும் சில பேர் 'நானே கடவுள்' என்று வேதாந்தம் பேசவும், வேறு சிலர் கடவுள் இல்லை என்று கூறவும், இவ்விதமாக மக்களுக்குள் சதா மனக் குழப்பத்தை விளைவித்துக் கொண்டிருக்கும் ஒரு நல்ல கடவுளும் இருக்க முடியுமா?

சில பேர் “கடவுள் குணத்தைப் பற்றியும், அவர் இருப்பது பற்றியும் எவ்விதமான சந்தேக விளக்கங்களும் எமக்குத் தேவையில்லை! எம்முடைய உணர்வினிலே அவரை நாங்கள் உணர்கிறோம் எம்முடைய அகக்கண்ணாலும் - புறக்கண்ணாலும் அவரை நாங்கள் நேரில்

தரிசிக்கிறோம். அவர் எந்த நேரமும் எம் கண்முன் தோன்றி நிற்கிறார்!” என்று ஒரே அடியாய் அடித்துவிடுகிறார்கள்.

“கடவுளை நம்பினால் தான் கடவுள்” என்று சொல்லி வயிறு வளர்க்கும் முட்டாள்களைவிட இவன் படுமோசக்காரன். இவன் கண்முன் தோன்றும் அவருடைய விருத்தாந்தங்கள் எப்படி? உருவம் இருப்பிடம் எல்லாம் எப்படி? அவரது உத்தேசங்கள் என்ன? என்று கேட்டால் அவரை நீ இப்போது எனக்குக் காட்டி என்னையும் நம்பச் செய் என்றால், அவன் அதுவெல்லாம் நான் செய் முடியாது! கடவுளைக் கண்டால் அதைப்பற்றி பிறரிடம் பேசமாட்டார்கள். ஏனெனில் கடவுளைக் கண்டவுடன் உள்ளமெல்லாம் கடவுள் எண்ணமாகவே நிறைந்து போய்விடும். வேறு எண்ணங்கள் அவனிடம் கிடையாது என்று சொல்லிவிடுகிறான்.

தான் புகுந்த இடத்தில் பிறிதொன்றையும் இல்லாமலும் புகவொட்டாமலும் செய்யும் சக்தி கடவுளுக்கு இருப்பது நிச்சயம் என்றால், அவர் சர்வ சக்தி வியாபி என்பது பொருத்தமானால், மனிதனுடைய உள்ளத்தின் மீது கடவுளுக்கு மெய்யாகவே ஆதிக்கமிருக்குமானால் எல்லா மனிதர்களும், கடவுள் எண்ணத்தில் மூழ்கிக் கிடக்க காண்கிறோமே! இவன் சொல்வது வெறும் பிடிவாதமல்லவா? அடவாதமும், மோசடியும் அல்லவா? கடவுளை 'நேரடியாக' நம்ப வேண்டுமாம்! எதன் மூலமாகவும் எதைக் கொண்டும் அதாவது காரண காரிய மூலமாகக் கடவுளை நம்பக் கூடவில்லையே என்றால், அறிந்து கொள்ள முடியாத, தெரியாத ஒன்றை எப்படி 'நேராக' நம்பிவிடுவது?

ஒரு குழந்தை பிறந்தவுடன் எந்தக் கடவுளை நம்புகிறது? அதற்கு ஏதாவது கடவுள் எண்ணமுண்டா? கிருஸ்தவன் வீட்டில் பிறந்த குழந்தை வளர்ந்து பெரியதாகப் பெரியதாக தனது பெற்றோர் நம்பும் கிருஸ்தவக் கடவுளையும், அதேபோல முகம்மதியக் கடவுளையும், சைவக் குழந்தை சைவக் கடவுளையும், வைணவக் குழந்தை வைணவக் கடவுளையும், சென்னை மாநகரில் சந்து பொந்துகளில் பிறந்த குழந்தை வேப்பிலை மாரியையும்

சேரிகளில் பிறந்த குழந்தைகள் காடன், மாடன், கறுப்பனாகிய பயங்கரமான கடவுள்களையும் நம்புகின்றன. சர்வ சக்தனான ஒரு கடவுள் இருக்கும் உலகத்திலே இப்படியும் கடவுள்கள் மாறுபடலாமா?

கடவுள் இருப்பது ஒன்று மெய்யாக இருக்க வேண்டும். அல்லது பொய்யாக இருக்க வேண்டும். மெய்யானதாயிருந்தால் காரண காரியங்களாலே அறியப்படத்தக்கதாயிருக்க வேண்டும். நமது பகுத்தறிவினாலே தாராளமாக ஆராய்ந்து பார்த்து கண்டுபிடிக்கப்பட வேண்டும். அன்பான கடவுள் இருக்கும் போது, அன்பான கடவுளால் உலகம் படைக்கப்பட்டிருக்கும்போது, உலகத் தில் நாம் நாள்தோறும் அனுபவித்து வரும் ஏற்றத் தாழ்வுகளும், பூத பெளதிக விசாரத் துன்பங்களும், இன்னல்களும், வறுமையும், பிணியும் போகும். வலியோர் ஆதிக்கமும், எளியோர் அடிமை வாழ்வும், நசுக்கப்படுதலும் எப்படி என்று ஆராய வேண்டும்!

இவற்றையெல்லாம் போக்கி, உலகத்தில் இன்ப நிலையும், அன்பு மயமும் ஏற்படச் செய்ய வேண்டும். கள்ளனைப் போல் ஒளிந்து நிற்கும் கடவுளை வெளியில் இழுத்து என்ன சங்கதி என்று கேட்கவேண்டும். இதற்கு

ஆத்திகர்கள் முன்வர வேண்டும்.

இதற்கெல்லாம் அக்கடவுள் அடங்காதவர் என்றால், அறியப்படாதவர் என்றால், காணப்படாதவர் - தனது குணங்களையும், உத்தேசங்களையும் வெளிப்படுத்த முடியாதவர் என்றால், துன்பங்களைப் போக்க முடியாதவர் என்றால், எரிமலைகளை மூடிவிட முடியாதவர், புயல் காற்றை நிறுத்த முடியாதவர் என்றால், யுத்தங்களை நிறுத்தாதவர் என்றால், விஷக்காற்றுகளை அழிக்க முடியாதவர் என்றால், விஷபேதிகளைக் குழி தோண்டிப் புதைக்க முடியாதவர் என்றால் நல்ல மழையையும், நல்ல பருவத்தையும் தந்து நல்ல தானிய விளைவைச் சதா காலமும் தவறாமல் கொடுத்து மக்களை ஒருவேளை கஞ்சிக்கு தவித்திடாமல் காத்து ரட்சிக்க முடியாதவர் என்றால், காவித் துணியையும், கடுக்காய் கொட்டைகளையும், பருத்தி நூலையும் போட்டுக் கொண்டும், பழைய பஞ்சாங்கத்தையும், காய்ந்த புல்லையும் வைத்துக் கொண்டும், பிறர் உழைப்பால் வயிறு வளர்த்து பிறரை ஏய்த்திடும் மனிதரையும் ஆப்கன் அமீரை நாட்டைவிட்டு துரத்திய கொடிய முல்லாக்களின் குருட்டு மதவெறியையும் அடக்க முடியாதவர் என்றால், மாதம் ஆயிரமாயிரமாய் பணம் பெற்றுக் கொண்டு கடவுள் பெயரைச் சொல்லி அரசர்களையும் ஏய்த்திடும் பெரிய பெரிய மகந்துக்களையும், போப்புகளின் ஏமாற்றும் குணத்தையும், கண்டிக்க முடியாதவர் என்றால், கண்டிப்பாய் அக்கடவுளுடைய எண்ணத்தை மனித வர்க்கம் என்று கைவிடுகிறதோ அன்றே அது மேன்மையுறும் நாளாகும். அன்றே மனிதனது அறிவு தனது உச்சத்தில் பிரகாசிக்கும்.

அறிவு என்ற பொன்னை கடவுள் என்ற களிம்பு மூடி நிற்கிறது. அக்களிம்பைப் போக்கி பொன்னறிவு கொண்ட மனித வர்க்கம் அறிவுச் சுடர் வீசி ஆனந்தத்தில் மூழ்கும் நாள் எந்நாளோ?

* 07/07/1929- “குடிஅரசு” இதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதியது

காட்டுமிராண்டித் தன்மை

ஒரு மனிதனை, அல்லது ஒரு சமுதாயத்தை, ஒரு நாட்டாரை, ஒரு மதத்தாரைக் காட்டுமிராண்டித் தன்மையுள்ளவர்கள் என்று சொல்லுவதற்குக் காரணங்களான குறிப்புகள் என்னவென்றால்:-

1.கைரேகை பார்த்தல்.

2.சோசியம் பார்த்தல்.

3.பிறந்த நேரம் கொண்டு சாதகப் பொருத்தம் பார்த்தல்.

4.சகுனம் பார்த்தல், அதற்குப் பலன் கணித்தல்.

5.நல்ல நேரம், நல்ல நாள், நல்ல கிழமை, நல்ல மாதம் என்பவைகளைப் பார்த்தல்.

6.ஆருடம் பார்த்தல், அதை நம்புதல்.

7.பட்சி சாத்திரம் பார்த்தல்.

8.ராகு காலம், குளிகை காலம், எம கண்டம் முதலியன பார்த்தல்.

9.நல்ல நட்சத்திரம், கெட்ட நட்சத்திரம், நல்ல லக்னம், கெட்ட லக்னம், கெட்ட லக்னம் பார்த்தல்.

10.கழுதை கத்துதல் பலன் பார்த்தல், ஆந்தை அலறுதல் பலன் பார்த்தல்.

11.பல்லி கத்துவது குறித்துப் பலன் பார்த்தல்

12.பாம்பு குறுக்கே போவது பற்றிப் பலன் பார்த்தல்.

13.காக்காய் கத்துதலுக்குப் பலன் கூறுதல்.

14.பூனை குறுக்கே போவதற்குப் பலன் கூறுதல்.

15.ஒத்தைப் பார்ப்பான் தென்படுதல்.

16.முண்டை பார்ப்பாத்தி (விதவை) வருதல்.

17.நெருப்பு எதிரில் வருதல்.

18.மனிதன் தும்முவதன் (தும்மல்) பலன்.

19.விளக்கு அணைதல், அதற்குக் கெட்ட பலன் கூறுதல்.

20.கண் திருட்டி படுதல், திருட்டி கழித்தல்.

21.சாந்தி கழித்தல்.

22.பாடம் போடுதல் (நோய் தீருவதற்காக).

23.மந்திரம் செபித்தல்.

24.தழைகளைக் கொண்டு (வேப்பிலை) பாடம் போடுதல்.

25.சாமி ஆடுதல்.

26.வாக்குக் கேட்டல் (பூசாரியிடம்).

27.பேய் ஆடுதல் (இதில் நம்பிக்கை வைத்தல்)

28.பேய் ஓட்டுதல்.

29.வலம் சுற்றுதல், இடம் சுற்றுதல் (பிரதட்சணம்-அப்பிரதட்சணம்).

30.வலது கால், இடது கால், வலது கை, இடது கை, உயர்வு தாழ்வு கற்பித்தல்.

31.எண்களில் நல்ல எண்கள், கெட்ட எண்கள் எனக் கருதுதல் ( 3, 13, 8, 18 இவை கெட்ட எண்கள் என்பது ).

32.அதிசயங்கள் செய்வது, அற்புதங்கள் செய்து காட்டுவது பற்றிய நம்பிக்கைகள்.

33.ஆசீர்வாதம் செய்தல், வாழ்த்துக் கூறுதல் நம்பிக்கை கொள்ளுதல், வசவு (வைதலில்) சாபம் கொடுத்தல் ஆகியவைகளில் நம்பிக்கை வைத்தல்.

34.பிராத்தனை செய்துவிட்டு, தொழுதுவிட்டு வந்தவர்களைக் குழந்தைகளின் தலையில் வாயினால் ஊதச் சொல்லுவதில் குழந்தைக்கு நோய் சவுகரியமாகும் என்ற நம்பிக்கை.

35.அகால் – இயற்கைக்கு மாறான வகையில் செத்துப்போனவர்கள், பிசாசாகப் பிறந்து வந்து தொல்லை கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை.

36.தூங்கி எழுந்தவுடன் பார்க்கத் தகுந்த வஸ்துக்கள், சிலர் முகத்தில் விழிப்பதால் கெடுதி ஏற்படுதல் என்ற நம்பிக்கை.

37.அமாவாசை, சனிக்கிழமை முதலிய நாட்களில் கறிதின்னுவதில்லை என்ற நம்பிக்கை.

—தந்தை பெரியார்

நன்றி பகுத்தறிவு

நமது பணி

“மனித சமூகத்தில் பிறவியில் உயர்வு, தாழ்வு, ஆண்டான் – அடிமைத்தன்மை ஒழிந்து ஆணும் பெண்ணும் சகல துறைகளிலும் சமசுதந்திரத்துடன் வாழ வேண்டுமென்று நாங்கள் சொன்னால், தீண்டாமையும் சாதிபேதமும் ஒழிந்தால் தமது உயர்வும், தம் பிழைப்பும் கெடுமென்று எண்ணிப் பாடுபடாது வாழும் பார்ப்பனர்கள் மதம், சாஸ்திரம், புராணம் ஆகியவைகளைக் கொண்டு வந்து குறுக்கே போட்டு எங்களைத் தடைப்படுத்தும் பொழுது, அவை எவை யாயினும் மனித சமூக ஒற்றுமைக்கும், சமத்துவத்திற்கும், சுதந்திர வாழ்வுக்கும் கேடு செய்வதாக இருந்தால் அவற்றைக் கொளுத்தி ஒழிக்க வேண்டுமெனக் கூறுகிறேன்”.
—–தந்தை பெரியார்.

பகுத்தறிவின் அவசியம்

ஒரு சேலை வாங்கினால் கூட சாயம் நிற்குமா? அதன் விலை சரியா? இதற்கு முன் இவர் கடையில் வாங்கிய சேலை சரியாக உழைத்திருக்கிறதா? இக்கடைக்காரர் ஒழுங்கானவர்தானா எனறெல்லாம் சிந்தித்துப் பார்த்துத் தான் வாங்குகிறோம். இப்படிப்பட்ட சில்லறைக் காரியங்களுக்கெல்லாம் பகுத்தறிவை உபயோகிக்கும் நாம் சில முக்கியமான விசயங்களில் மட்டும் பகுத்தறிவை உபயோகிக்கத் தவறி விடுகிறோம். இதனால் ரொம்பவும் ஏமாந்து போகிறோம். இதை உணர்த்துவதுதான் – பகுத்தறிவின் அவசியத்தை வற்புறுத்துவதுதான் எனது முதலாவது கடமை.
—தந்தை பெரியார்

நன்றி பகுத்தறிவு

பகுத்தறிவாளன் யார்?

பகுத்தறிவாளன் யார்?

1. மன உறுதியும் தெளிவான சித்தனையும் பெற்றவன்.

2. அஞ்சா நெஞ்சுடன் அறிவுக்கு முதலிடம் தந்து ஆக்கப் பணிகளைச் செய்வோன்.

3. எங்கும், எதிலும், யாரிடத்தும் உண்மையை ஆராய்ந்து அறிவோன்.

4. சிந்தனையே எல்லா ஆற்றல்களையும் அளிக்க வழி வகுக்கும் மாமருந்து என உணர்வோன்.

5. பெண்ணினத்துக்குச் சம உரிமை வழங்குபவன்.

6. எண்ணம், செயல் ஆகியவற்றின் அடிப்படையாகப் பகுத்தறிவையே முன்னிறுத்தி இயங்குபவன்.

7. அடக்கமும் அமைதியும் உடையவனாய்த் தற்பெருமையும் தாழ்வு மனப்பான்மையும் இன்றி வாழ்வோன்.

8. துன்பம், தடை, சிக்கல், ஏக்கம், அச்சம், பிணி முதலியவற்றை அறிவியல் முறையில் அகற்றக் கற்றவன்.

9. மனித உடல் பல சிக்கல்கள் பொருந்திய பொறி (இயந்திரம்) என்னும் உண்மையைக் கருத்திற்கொண்டு, உடலை ஓம்பி, காலம் வரும்போது மாள அஞ்சாதவன்.

10. பெயர், புகழ், வீண் பெருமை ஆகியவற்றுக்காக ஆடம்பரமான வாழ்வு நடத்தாமல், தற்புகழ்ச்சியைத் துறந்து, பிறர் நலம் பேணுவோன்.

11. கடவுள், மதம், சாதி, முதலிய பொய்மைகளினின்றும், விடுபடுவதுடன், இனம், மொழி, மரபு, இலக்கியம் முதலிய எல்லைக்கு அப்பாற்பட்டு இயங்குபவன்.

12. மனிதனைச் சமநோக்குடன் அணுகி மதிக்கும் இயல்பும், உண்மை அன்பும், தன்னலமின்மையும், வினைத் தூய்மையும், மிக்கவனாய், ஊக்கமுடன் உழைப்போன்.

13. தனக்காக மட்டும் வாழாது, தான் எற்றுக்கொண்ட பொறுப்பு ஒவ்வொன்றிலும் பிறருக்காக, சமுதாய முன்னேற்றத்துக்காக தொண்டாற்றுபவன்.

நன்றி பகுத்தறிவு

வணக்கம் நன்பர்களே,

வணக்கம் நன்பர்களே,
நம்மை சுற்றி நடக்கும் ஒவ்வொரு நிகழ்விலும் நாம் பலவற்றை கற்றுகொள்ள முடியும். சமகாலத்தில் நடக்கும் நிகழ்வு நம் மனதை பாதித்ததோடு மட்டுமல்லாமல் படிப்பினையும் கற்று தந்திருக்கிறது.

இதுவரை நாம் கொண்ட கொள்கைக்கும், படித்த படிப்புக்கும், நம் கண்டும் காணாமல் நமக்கென்ன என்று இருக்கும் மெத்தனத்திற்கும் செருப்பால் அடித்து பல‌ சேதிகளை சொல்லி இருக்கிறது தற்பொழுது ஈழ‌த்தில் நடந்து கொண்டிருக்கும் இணப்படுகொலையும் அதன்காரணமாக நடக்கும் நாடகங்களும்.

நாம் கற்ற பாடங்கள் பல அவற்றில் சில‌

எவ்வளவு பெரிய படைகள், அரசியலமைப்பு, அறிவை நாம் கொண்டிருந்தாலும் நாம் ஒரே கொள்கையை பின்பற்றாதவரை வெற்றி என்பது அரிது.

இதுவரை நாம் நம்பிகொண்டிருந்த அரசாங்கங்களும், அரசியல்வாதிகளும், ஆன்மீகவாதிகளும் முற்றிலும் போலிகள் என்று ஆணித்தரமாக உனர்த்தியிருக்கிறது.

புரட்சி என்பது நெருப்பு மாதிரி. அது மேல்மட்டத்திலிருந்து அல்ல‌ அடிமட்டத்திலிருந்து மட்டுமே வரமுடியும் என்பது .

இந்தியாவை பொருத்தவரையில் வெளியுறவு கொள்கை மட்டுமல்ல எதைவேண்டுமானாலும் மாற்றுவோம்,இந்த‌ அரசாங்கம் ஒரு நிருவனம்( Company ), இந்த அரசாங்கம் மக்களுக்கான அரசாங்கமல்ல முதலாளிகளுக்கானது அதனை எதிர்ப்பவர்களை அழிக்க‌ அரசாங்கங்கள் ஒன்று சேரும் என்பதை உனர்த்தியிருக்கிறது.

இலங்கை இனப்படுகொலை நடத்த பணத்தை இரைத்த முதலாளிகளை வெளிச்சம்போட்டு காட்டி முதலாளித்துவம் பணத்துக்காக தன்னை நிர்வாணப்படுத்திக்கவும் தயங்காது என்பதை நிருபித்திருக்கிறது.

வாய்மையே வெல்லும் மத்ததெல்லாம் சும்மா என்ற பொய்மையை உடைத்து, வாய்மையே வெல்லும் என்பது மக்களை சும்மா இருக்க சொல்லி வைத்தது, வலிமை இருந்தால் மட்டுமே வெல்லமுடியும் என்பதை உறுதிபடுத்தி இருக்கிறது.

காலம்காலமாக நாம் வழிபட்ட கடவுள்களும் அவற்றை வைத்து கொள்ளை அடிக்கும் சாமியார்களின் முகமூடி கிழிக்கப்பட்டிருக்கிறது. நம் உறவுகள் கொதுகொத்தாக கொல்லப்படும்போதும், அனுஅனுவாக சித்ரவதைக்கு ஆளாகும்போதும் பார்த்தால் கல்லும் கரையும். அப்படியிருக்க ஒரு உயிரைகூட காப்பாற்ற வராத கடவுள் இனிமேலும் இருப்பதாக நம்பாலாமா?. அப்படி கடவுள் இருந்தால் இதை அனைத்தையும் கண்டும் காணாமல் இருப்பவன் கொள்ளைகாரனைவிட கொலைகாரனைவிட மிக கெவலமானவன் ஆவான்.

நன்பர்களே இவற்றையெல்லாம் மறுப்பவர்கள் நமது எதிரிகள் அல்லது போலிகள்.

போலி நன்பனைவிட எதிரியேமேல்.

அய்யா முதல்வரே! அஞ்சமாட்டோம்..

உங்கள் சட்டத்தினால்

எங்கள் கைகளுக்கு விலங்கிடலாம்:

எந்தச் சட்டத்தினால்

எங்கள் உணர்வுகளுக்கு

விலங்கிடப் போகிறீர்கள்?

அஞ்ச மாட்டோம்

அச்சுறுத்தாத நாங்கள்

எந்த அச்சுறுத்தலுக்கும்:

தடை விதிப்பது

உங்கள் கடமையானால்

உடைப்பது எங்கள் உரிமையாகும்...

என்ன செய்வது!

காவல் துறையோ,

உங்கள் கையில் அடக்கம்

நீங்களோ

"கை"க்குள் முடக்கம்

தமிழினத்தின்

வேராக இருப்பீர்கள்

என நம்பினோம்

நடைமுறையில்

நீங்கள் "வேறாக" இருக்கிறீர்கள்

சட்டத்தைச் சொல்லி

மிரட்டும் நீங்கள்

நீதிமன்றத் தீர்ப்பினை

மதிப்பதில்லையே!

கொள்கையின் குறுக்கே

எத்தனை தடுப்புச் சுவர்களானாலும்

தகர்ப்பது ஒன்றே

எங்கள் தலையாய பணி

அய்யா முதல்வரே!

அஞ்சமாட்டோம்...

தடியடிக்கும்

சிறைக் கொட்டடிக்கும்

புலிகளை

புலிக்கொடியை

பிரபாகரனை

எந்நாளும் ஆதரிப்போம்

எழும் ஈழம்..

நன்றி
விழுப்புரம் கா. தமிழ்வேங்கை

அன்பார்ந்த தமிழ் உறவுகளே

அன்பார்ந்த தமிழ் உறவுகளே!

இன்று நம்மினம் என்றும் இல்லாத வேதனையிலும், சோதனையிலும் தள்ளப்பட்டிருக்கின்றது. நம்மினத்துக்கு இன்று தான் அன்பும் அரவணைப்பும் தேவைப்படுகின்றது. சிங்கள இனவாத அரசு 250,000 தமிழீழ மக்களை வதைமுகாம்களிற் பணையக் கைதிகளாக்கி நாடகமாடுகின்றது. இதைச் சர்வதேசம் கண்டும் காணாமல் தெரிந்தும் தெரியாமல் வியாபார நோக்கோடு அணுகின்றது.

அன்பார்ந்த உறவுகளே, நம் விடுதலையை நாம் தான் போராடிப் பெறவேண்டும். நாம் ஒவ்வொருவரும் போராளியாக மாறுவோம், ஏந்துவோம் துப்பாக்கியல்ல பேனாவை. பேனாவின் சக்தி துப்பாக்கியை விட வல்லமை கொண்டது. நாம் களத்தில் இறங்கும் நேரமிது.......எழுங்கள்...............எழுதுங்கள் பத்திரிகைகளில், சஞ்சிகைகளில், அறிமுக இணையத்தளங்களில் (Face book), உங்கள் பாராள‌மன்ற உறுப்பினர்களுக்குத், தெரிந்தவர்க்ளுக்குத், தெரியாதவர்களுக்கு என எல்லா முனைகளிளும் போராடுவோம். எமக்கு விடிவு கிடைக்கும் வரை போராடுவோம்.

இப்போராட்டம் ஆயுதத்தை விடக் கூர்மையானது என எதிரி நன்கு அறிவான்.அதனாற் தான் பல பில்லியன் ரூபாக்களைச் செலவிடுகின்றான். எல்லாச் செய்திச் சாதன‌ங்களையும் வாங்க எத்தனிக்கின்றான். எல்லா மேற்குலக நாடுகளுக்கும் தன் உளவாளிகளை அனுப்பி எமது போராட்டத்ததை மழுங்கடிக்க முனைகின்றான்.

அன்புள்ள உறவுகளே, அவனின் இச்செயல்களை புத்திகூர்மையினாற்தான் முறிய‌டிக்க முடியும். முதல்கட்டமாக எமது ஆள்தகவல்களை இல்லாதொழிப்போம். எமது நிழற்படம், உண்மைப்பெயர், முகவரி போன்றவற்றை அகற்றி எதிரி நம்மைப்பற்றி அறியவிடாமற் தடுக்கமுடியும். இதன் மூலம் நாம் பல போராளிகளை உருவாக்கமுடியும் என நம்புகின்றேன். நம்மொருவரை எதிரி அறிந்து கொண்டாலும் நாம் பலரை இழக்க வேண்டிவரும். ஆகவே உறவுகளே சிந்தியுங்கள் செயற்படுங்கள்.

நன்றி

ம.பொன்ராஜ்

குவார்ட்டர் + பிரியாணி+ கவர் =பத்திரிகையாளர்!

என் அன்னையை முல்லையிலே(முல்லைத்தீவு) அம்மணமாக்கி அழகுபார்த்த அசிங்கமான தினமுரசே! உன்னைத்தூக்கி சிறையில் போட்டதிற்காகவாவது கருணாநிதிக்கு ஒரு நன்றி. பத்திரிகைப்பண்பென்றால் என்னவென்று தெரியாத பரதேசி! உனக்கும் பின்னால் ஒரு பட்டிணிப்பட்டாளம்.பெண்ணென்றால் பேயும் இரங்குமாம்.நீங்களெல்லாம் பத்திரிகாதர்மத்தையே விலைபேசிவிற்கின்ற பரதேசிக்கூட்டமடா.உங்களைவிடவா அவ்வவ‌லைப்பெண்கள் விபச்சாரிகள்.அந்நியன், அயல்மாநிலத்தான் எம் அன்னையரை, உன் அம்மா, அக்கா தங்கையை என்னவென்று அழைப்பான்?

2009/10/9 Packiarajan Sethuramalingam <packmymails@gmail.com>
கெடக்கறதெல்லாம் கெடக்கட்டும் கெழவியத் தூக்கி மனையில வைன்னானாம்...
இது எங்க ஊரு பழமொழி.

அவனவன் திங்கறதுக்கு சோறு இல்லாம முகாம்ல சாகறான். மலையாள நாதாரிங்க முல்லைப் பெரியாறுல ஆப்பு வைக்குதுங்க. மீன் புடிக்கப் போறவன் கருவாடா திரும்பறான். வன்னி முகாம்ல என் அக்கா தங்கச்சிக சிங்கள பன்னிக் கூட்டத்துக்கிட்ட சிக்கி சின்னா பின்னமாகுது. தமிழ்நாட்டுல ஒரு கிலோ கத்திரிக்காய் 22 ரூவா விக்குது. அரிசி 42 ரூவா ஆயிடுச்சி. ஒரு ரூவா அரிசிய வாங்கித் தின்னா வேளைக்குப் பத்து ரூவாய்ய்க்கு வயித்து வலி மாத்திரை திங்க வேண்டியிருக்கு.

தினமலர் பரதேசிக்கு இதெல்லாம் ஒரு பிரச்சினையாவே தெரியலையாம். எந்த சினிமா நடிகை ’தொழில்’ நடத்தறாங்கன்னு பட்டியல் போடுது. நடிகர் சங்கம் இதைக் கண்டிச்சு கூட்டம் போடுது. சின்னக் கலைவாணர்னு நம்மள மாதிரி நாலு இளிச்ச வாயங்க நம்பிக்கிட்டிருந்த தேவர் சாதி வெறி பிடிச்ச விவேக் அந்தக் கூட்டத்துல ’பத்திரிகைக்காரன்லாம் குவார்ட்டர் சாராயத்துக்கும் பிரியாணிக்கும் அலையறவனுக...பத்திரைகையில எழுதினவனோட அக்கா ஆத்தா போட்டோ குடுங்க...கிராபிக்ஸ் பண்ணி அவளுகளும் தே....ன்னு விளம்பரம் கொடுப்போம்’ ....இப்பிடியெல்லாம் காமெடி பண்ணியிருக்கு.

இப்ப பத்திரிக்கையாளரகள் (என கௌரவமாக தங்களை அழைத்துக்கொள்ளும் சதை புரோக்கர்கள்) ஆஹா...எங்க இனத்துக்குக் கேவலம்னு கிளம்பிட்டாய்ங்க.

நான் தெரியாமத்தான் கேக்கறேன்.
விவேக் சொன்ன, குவார்ட்டர் + பிரியாணி விசயத்துல என்ன தவறு? கருத்து சொல்ற அளவுக்கு விவேக் பெரிய பருப்பா இல்லாம இருக்கலாம். ஆனா...இந்த சதை புரோக்கர்கள் குவார்ட்டர் + பிரியாணி கொடுத்தால் ‘ஐயோ...யார்கிட்ட என்ன கொடுக்கறீங்க...? நாங்கள்லாம் சுத்த நேர்மைக்குப் பொறந்தவங்க’ன்னு மறுக்கிற ஜாதியா?

இப்பல்லாம் ப்ரஸ் மீட் வச்சாலே டாஸ்மாக்குக்கும் தலப்பாக்கட்டு கடைக்கும் மொய் வச்சே தீர வேண்டியிருக்கே. இது போதாதுன்னு நம்ம துரைங்க கிளம்பும்போது சும்மா ஜெண்டிலா ‘ம்ம்ம்...பாத்துக்கலாம்...மேட்டர் வந்துரும்...அப்பறம்...அவ்ளோதானா?’ன்னு காசு புடுங்க பேசுற பேச்சு இருக்கே...யப்பா...அந்த நிமிசத்துலதான் சரஸ்வதி தேவியும் தர்ம தேவனும் நமக்கு தரிசனம் தருவாங்க.

நடிகைங்க உடம்பக் காட்டி காசு பாக்கராங்கதான். யார் இல்லன்னது? ஆனா அதுக்குப் பேரு விபசாரம்னா...அட ங்கொய்யால...நடிகைங்க தொப்புளையும் தொடையையும் கலர் கலரா போட்டு காசு சம்பாதிக்கிறியே...உன் தொழிலுக்கு என்னா பேரு...?


மீடியா...!
ப்ரஸ்...!
நான்காம் தூண்!
-நல்லா வாயில வருது.

இதுல ஒரு பெரிய வித்தியசம் இருக்கு. நடிகைங்க தங்களோட ஒடம்பக் காட்டி...மானம் மரியாதய விட்டுக் காசு சேக்குதுங்க...! இது நியாயம் இல்லதான். ஆனாலும் அவங்க ஒடம்பு அவங்க காட்ட்றாங்கன்னு ஒரு மொக்கையாவாவது நியாம் பேசிக்கலாம்.

ஆனா...இந்த சதை புரோக்கருங்க...அடுத்த பொம்பளைங்க ஒடம்பக் காட்டற படத்த ஓசியில வாங்கிப் போட்டு...பொழைக்குதுங்க. இது எப்படி இருக்கு?
அதாவது...நடிகைங்க விபசாரம் செய்யறாங்கன்னா...
பத்திரிகைக்காரதுங்கதான் அந்த நடிகைங்களுக்கு மாமா வேலை பாக்குதுங்க. என்னைப் பொறுத்தவரைக்கும் ஒடம்ப விக்கற பொம்பளைங்களை விட...அந்த ஒடம்புக்கு புரோக்கர் வேலை பாக்கற மாமாக்கள்தான் கேவலமான பிறவிங்க.

ஆனா...இந்த புரோக்கருங்களுக்குத்தான் சமூகத்துல பெரிய மரியாத.

சரக்கடிச்சிட்டு பைக் ஓட்டும்போது போலீஸ் புடிச்சா...’சார் நான் ப்ரஸ் சார்...என்ன என்னையே புடிக்கிறீங்க...?’ன்னு கேக்கறது.

ரயில்ல டிக்கெட் பதிவு செய்யப் போனா...’சார்...நான் மீடியா பர்சன்...’ன்னு பந்தா பண்ணி சீட்டு வாங்கறது.

நாலு நடிகைங்க படங்களை போட்டு...’இவங்கெல்லாம் விபசாரம் பண்றாங்கன்னு’ செய்தி போட்டதுக்காக...தினமலர் பரதேசி மேல நடிகர் சங்கம் புகார் கொடுத்துச்சு. நியாயமா என்ன செஞ்சிருக்கணும்?

அவதூறு பரப்பினதுக்காக தினமலர் பொறுப்பாசிரியர் ரமேக்ஷ்சைத் தூக்கி உள்ளே போட்டிருக்கணும். ஆனா...லெனின்னு ஒரு உதவி ஆசிரியரைக் கைது பண்ணிச்சி நம்ம போலீசு.

போறாளாம் பொன்னாத்தா...எம்மேல வந்து ஏறாத்தாங்கற கதையா...இந்த விசயத்துல இரு உதவி ஆசிரியர் என்ன செய்ய முடியும்?
சட்டப்படியும் நியாயப்படியும் பொறுப்பாசிரியரைத்தானே கைது பண்ணணும்?
ரமேக்ஷ் மேல கை வைக்கக் கருணாநிதிக்கு அவ்ளோ அச்சமா?

சரி...லெனினைக் கைது செஞ்சாச்சு.

பத்திரிகையாளர்கள்னு சொல்லிக்கிட்டிருக்கிற பல இதுகள்...கடந்த ரெண்டு நாளா தமிழ்நாடு முழுக்க போராட்டம் நடத்திக்கிட்டிருக்குக.
லெனினைக் கைது செஞ்சது தப்பாம்.
அப்ப...? அவனுக எழுதினது மட்டும் ரைட்டா...?
கேட்டா...இதெல்லாம் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கையாம்!
அரசின் அடக்குமுறையாம்!

ஆஹா...ஆஹா...இதுகளுக்குத்தான் கருத்துச் சுதந்திரத்து மேல என்னா அக்கறை...?

மரியாத கெட்ட பத்திரிகை உலக மாமாக்களே...

திசைநாயகம்னு ஒரு பத்திரிகையாளர் பேரைக் கேள்விப்பட்டிருக்கீகளா..?
சிங்கள அரசின் போர் வெறிக் கொள்கையைக் கண்டிச்சு எழுதினதுக்காக...ராஜபக்சேவால கைது செய்யப்பட்டு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிங்கம் போல் உள்ளே இருப்பவர்!

அவர் பேசினது கருத்து!
அதுக்கு சுதந்திரம் இல்லங்கறது அடக்குமுறை!
இன்னும் சொல்லப் போனா...அவர் மனுசன்!

நீங்கள்லாம் ஒட்டுண்னிங்க...!
ஆட்சியில இருக்கறவங்க...அதிகாரத்துல இருக்கரவங்க...போலீசுக்காரங்க கூட சேர்ந்துக்கிட்டு பீறாய்ஞ்சு...காசு சேத்துக்கிட்டு ஒடம்பு வளர்க்குற ஒட்டுண்ணிங்க!

நீங்க மொதல்ல அரசாங்கத்தை எதிர்க்கத் துப்பு இல்லாதவங்க.

அட...அவ்வளவு ஏன்....?

எந்தப் பத்திரிகை ஆபீஸ்ல பத்திரிகையாளருங்க ‘ஒண்ணா’ சேர்ந்து சங்கம் வைச்சிருகீங்க?
கட்ட வண்டி இழுக்கறவ தொழிலாளி, ஆட்டோ ஓட்டுறவங்க, மூட்ட தூக்கறவங்க கூட சங்கம் வச்சிதான் போராடறாங்க.
நீங்க பேப்பர் கிழிய குமுறிக் குமுறி எழுதறீங்களே...உங்களுக்குன்னு ஒரு ஆபீசுல கூட சங்கம் வச்சுக்க வக்கில்லையே...ஏன்னு சொல்லவா?

நீங்கல்லாம் கடைஞ்செடுத்த சுயநலமிங்க...எல்லாத்துக்கும் மேல...நீங்கள்லாம் முதுகெலும்பு இல்லாத கோழைங்க! உங்களால பத்துப் பேரோட ஒத்துப் போக முடியாது. உங்களால உங்க முதலாளிங்ககிட்ட ஒரே ஒரு வார்த்தை எதிர்த்துப் பேச முடியாது!

அட...விபசாரம் பண்ற பொம்பளைங்க கூட ’பாலியல் தொழிலாளிகள்’ பேர் போட்டு சங்கம் வச்சிருக்காங்க...!

ஆனா...நீங்க...ஊர் ஒலகத்துல இருக்கிற உரிமைப் பிரச்சினைங்களையெல்லாம் எழுதுவீங்க. உங்க ஆபீசுல அடிமையா பம்முவீங்க!

இந்த லட்சணத்துல இருந்துக்கிட்டு ’பத்திரிகையாளர்கள் சங்கம்’னு ஒண்ணை ஆபீசுக்கு வெளில வச்சிருக்கீங்களே. யாரை ஏமாத்த?

ஏன்யா...ஒரு மன்னார் அன் கம்பெனியில வேலை பாக்க்குறவன் மன்னார் அன் கம்பெனி யூனியன்ல இருப்பானா...? இல்ல...தனியாப் போயி ’பல கம்பெனி பரதேசிகள் சங்கம்’னு ஒண்ணு ஆரம்பிச்சு அதுல இருப்பானா...?

பதில் சொல்லுங்க ’உரிமைக் காவலர்களே..’

இந்த நாட்டுல,,,போலீசு, பத்திரிகைக்காரதுக...இந்த ரெண்டு பேருக்கும் சங்கம் வச்சிக்கிற உரிமை இல்ல.

போலீசும் நீங்களும் சம்பாதிக்கிற விதமும் ஒண்ணுதானே!

சங்கத்தைப் பத்தி ஏன் கேக்கறேன்னா...
உங்களுக்குன்னு ஒரு சங்கம் இருந்தா...லெனின் கைது செய்யப்பட்ட அடுத்த நிமிசமே...தினமலர் ஆபீசுல வேலை நிறுத்தம் செஞ்சி...’பொறுப்பாசிரியர் செஞ்ச தப்புக்கு...உதவி ஆசிரியர் பலியாகணுமா?ன்னு கோசம் போட்டிருக்கலாமே!

அதானே முறை?

அட...எக்ஸ்போர்ட் கம்பெனியில பனியன் நூல் பிரிஞ்சிருக்குன்னு கட்டரை சஸ்பெண்ட் பண்ணினா...தொழிலாளிங்கல்லாம் வாசலுக்குப் போயி...’சூப்பர்வைசர் என்ன புடுங்க்கிட்டா இருந்தான்...அவனை சஸ்பெண்ட் பண்ணுடா’ன்னு இந்நேரம் ஸ்ட்ரைக் பண்ணியிருப்பாங்க!

ஆனா...உங்களுக்கு அந்த துப்பில்லை! ஏன்னா நீங்கள்லாம் தினமும் வீட்லேருந்து கிளம்பும்போதே மானத்தை கக்கூஸ்லயும் மரியாதைய செருப்பு ஸ்டாண்டிலயும் வச்சுட்டுத்தான் ஆபீஸ் போறீங்க!

ஆக மொத்ததுல...
சினிமா, அரசியல், கட்டப் பஞ்சாயத்து...ன்னு மாமா வேலை பார்த்துப் பொழைக்கற ஜென்மமா வாழற உங்களுக்கு...எந்த நடிகை என்ன ‘தொழில்’ செஞ்சா என்னா...?
இதுதான் கேள்வி.

இதோட சில கொசுறுக் கேள்விங்களும் இருக்கு.

1. எந்தெந்த நடிகருங்க (ஹீரோக்கள்) விபசாரம் பண்ற நடிகைங்ககிட்ட ‘போய்’ட்டு வர்றாங்கன்னு...இதே மாதிரி போட்டோவோட செய்தி போட முடியுமா?
2. எந்தெந்த தலைவருங்க விபசாரம் பண்ற நடிகைங்ககிட்ட ‘போய்’ட்டு வர்றாங்கன்னு போட்டோவோட செய்தி போட முடியுமா?
3. எந்தெந்த பத்திரிகை ‘அதிபர்கள்’ விபசாரம் பண்ற நடிகைங்ககிட்ட ‘போய்’ட்டு வர்றாங்கன்னு போட்டோவோட செய்தி போட முடியுமா?
இந்தக் கேள்விக்கெல்லாம் உங்களால பதில் சொல்ல முடியாதுன்னு எனக்குத் தெரியும்.

கடைசியா...இந்தக் கேள்வியையும் கேட்டுடறேன்.

மரியா மக்தலீனா..ங்கற பொண்ணு விபசாரம் செய்யுதுன்னு ஊரே திரண்டு அடிச்சப்ப...ஏசு சொன்ன வாசகம் இது:

‘உங்களில் எவரொருவர் கள்ளமில்லாதவரோ...அவர் இந்தப் பெண் மீது கல் எறியலாம்!’

இப்ப சொல்லுங்க...
உங்களில் எவர் கள்ளமில்லாதவர்?

http://settaikaaran.blogspot.com/2009/10/blog-post_09.html


--
-- பாக்கியராசன் சே..
நீ தமிழன்.. நான் தமிழன்.. நாம் தமிழர்...
www.naamtamilar.org

துப்பு கெட்ட நாய்களே... நீங்க குடியுரிமை வாங்கித் தர்றது இருக்கட்டும். முதலில்...எங்க மக்கள் மூணு வேளை சோறு திங்கறதுக்கு வழி பண்ணுங்க.

ஈழ உறவுகள் தமிழகத்தில் ‘அகதிகள்’ எனும் அவமானகரமான பெயரில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று தம் குடும்பக் காவலர் கருணாநிதி அண்ணா விழாவில் தி.மு.கவின் சார்பாக தீர்மானம் இயற்றியிருக்கிறார்.

தம் குடும்பக் காவலர் கருணாநிதி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழ மக்களை எவ்வளவு கௌரவமாக நடத்துகிறார் என்பதைத் தெரிந்து கொள்வோம்.
இதை மட்டும் நீங்கள் தெரிந்துகொண்டால்...’அட போய்யா வெண்ட்ரு குடியுரிமையாவது கும்மாங்காவது’ என்று கடுப்பாவது சாமி சத்தியம்.

முகாம்களில் உள்ள மக்களுக்கு அரசு போடும் பிச்சைக்கு ‘ பணக்கொடை’ என்று பெயர். இந்த பணக்கொடைப் பட்டியல் இதோ:

வ.எண்
குடும்ப உறுப்பினர்
பணக்கொடை
(மாதம் ஒன்றுக்கு)
1
குடும்பத்தலைவருக்கு
ரூ.400
2
அடுத்த பெரியவர்கள்
ரூ.288
3.
முதல் குழந்தை (12 வயதுக்குக் கீழ்)
ரூ. 180
4.
அடுத்த குழந்தைகள்
ரூ. 90
(அரசாணை எண் 755, பொது (ம.வா) நாள் 31-07-2006)
எப்படி எங்கள் தாராள மனது?
பெரியவர் என்றால் வயதானவர். வயதானவர்கள்தானே பல்வீனமாக இருப்பார்கள்.. அதுவும் போர் நடந்த மண்ணில் இருந்து வந்தவர்கள். பல்வேறு உடல் குறைபாடுகளுடன் இருப்பார்கள். அவர்களுக்கு மாதம் 288ரூபாய் ‘கொடை’. அப்படியானால் ஒரு நாளைக்கு 9 ரூபாய் 60காசு. ஒரு வேளைக்கு 3ரூபாய் 20 காசு
ஒரு குழந்தைக்கு இதே கணக்கின்படி ஒரு வேளைக்குக் கிடைக்கும் ‘கொடை’ 1 ரூபாய்! . ’அடேங்கப்பா...இவ்ளோ காசை வச்சுக்கிட்டு இந்த அகதிங்கள்லாம் என்னதான் பண்ணுறாங்களோ’ என்று பொறாமையாக இருக்குமே!
மச்சி வீடு கட்டி வேலிக் கணக்குல வெள்ளாமை விட்டு, வீடு முழுசும் சொந்த பந்தங்களை வச்சு வித விதமா சமைச்சுப் போட்டு அதுக சிரிக்கறதப் பார்த்து தானும் சந்தோசப்பட்ட இனம் இது!
மனசாட்சி மண்ணாங்கட்டியெல்லாம் வேணாம்...தயவு செய்து உங்கள் பார்வையில் படும் எந்தப் பிச்சைக்காரரையும் கேட்டுப் பாருங்கள். அவர் இதை விடப் பல மடங்கு அதிகமாகவே சம்பாதிக்கிறார்!
’சார் கவர்மெண்ட்...அதுங்களுக்கு மானிய விலையில் அரிசி தருது... ஆக்சுவலா அதுங்களுக்குப் பெரிய செலவே இல்ல சார்’
என்று சிக்கன் சூப் உறிஞ்சிக் கொண்டே ஊர் நியாயம் பேசும் மிடில் க்ளாஸ் மன்னர்களுக்கு ஒரு தகவல்!
மானிய விலையில் தரப்படும் அரிசியைப் பற்றிய பட்டியல் இதோ:
வ.எண்
குடும்ப உறுப்பினர்
வயது
அரிசியின் அளவு
1
பெரியவர்
8 வயதுக்கு மேல்
தினசரி 400 கிராம்
2
சிறியவர்
8 வயதுக்கு கீழ்
தினசரி 200 கிராம்
(மைய அரசு கடித எண்.1 (26) /83-RH/1 தொழிலாளர் மற்றும் மறுவாழ்வு அமைச்சகம் நாள் 19.12.1983)
அதாவது... எட்டு வயது முடிந்து ஒரு நாள் ஆனாலும்...20 வயது ஆனாலும்....40 வயது ஆனாலும்...80 வயது ஆனாலும் அவர்கள் ஒரு நாளைக்கு 400 கிராம் அரிசிதான் சாப்பிட வேண்டும்!
கசாப்புக் கடைக்குப் போற ஆடு கூட சரியா தீனி தின்னுச்சா...முறையா பராமரிக்கப்படுதான்னு பார்க்க அரசாங்க அதிகாரிங்க கசாப்பு வளாகங்கள்ல சோதனை நடத்தறாங்க தெரியுமா நண்பர்களே!
இதெல்லாம் கூட பரவாயில்லை என்று நினைக்க வைக்கும் அடுத்த தகவலைப் பாருங்கள்.
‘அகதிகளின் இறப்பின்போது இறுதிச் சடங்கிற்கு ரூ 100/ எரியூட்டும் அல்லது ஈமக்கிரியை செலவாக அரசால் வழங்கப்படுகிறது’ (அரசாணை எண்.49532/ம.வா.1/05-1, பொதுத்துறை நாள் 10.12.2006)
ஒரு மாலை வாங்க முடியுமா?
ஒரே ஒரு மூங்கில் கழி?
ஒரே ஒரு கோடித் துணி?
பாடை கட்ட கயிறு?
எரிக்கும் தொழிலாளி கூட 100 ரூபாய்க்கு வேலை செய்ய மாட்டாரே...!
அடத் தூ...இதெல்லாம் ஒரு அரசாங்கம்...இதுக்கு ஒரு அரசாணை...! மானங்கெட்டதுகளா...!
மூன்று வேளை சாப்பாடு போட வக்கில்லை. செத்தால் கூட பிணத்தை எரிக்கக் காசு கொடுக்கத் துப்பில்லை. இந்த லட்சணத்தில் இந்த அரசாங்கம் இவர்களுக்குக் குடியுரிமை வாங்கிக் கொடுக்குமாம். அதை நாம் வேடிக்கை பார்த்துக் கை தட்டுவோமாம்!
துப்பு கெட்ட நாய்களே...
நீங்க குடியுரிமை வாங்கித் தர்றது இருக்கட்டும். முதலில்...எங்க மக்கள் மூணு வேளை சோறு திங்கறதுக்கு வழி பண்ணுங்க.

எனதருமை இந்தியாவே, உன்னை ஆளப்போவது யார்?

எனதருமை இந்தியாவே, உன்னை ஆளப்போவது யார்?
//bombing of civilian areas cannot be contemplated by any civilised society.// - N. Ram, The Hindu.

மக்கள் வாழும் பகுதிகள் மீது குண்டு வீசுவதை நாகரீகமுள்ள எந்தச் சமூகமும் எண்ணிப் பார்க்கவியலாது - இந்து என். ராம்

இந்துப் பத்திரிகை மீதும், அதன் ஆசிரியர் திரு என். ராம் அவர்கள் மீதும் பல பழிச் சொற்கள் வீசப்படுகின்றன. நேற்று வந்திருக்கும் அவரது தலையங்கத்தைப் படிப்பவர்களுக்கு அவரது மனிதாபிமானமும், சமாதானத்தின் மேலும், துயரப்படும் மக்கள் மற்றும் போராளிகள் மீது அவருக்குள்ள அன்பும் விளங்கும். இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் நக்சலைட்டுகளின் ஆதிக்கமும் வன்முறையும் வளர்ந்து வருகிறது என்பது நாமறிந்தது. சத்திஸ்கரில் வைத்து இந்திய இராணுவ உலங்குவானூர்தி மீது நக்சலைட்டுகளால் நிகழ்த்தப்பட்ட தாக்குதலையடுத்து, இதனைப் போன்ற தாக்குதல் இனி நடந்தால் "தற்காப்புக்காக" எதிர்த் தாக்குதலை நடத்தலாமா என்று கேட்டது வான்படை. இதற்குப் பதிலளிக்கும்விதத்தில் பேசிய ப.சிதம்பரம், அந்த அனுமதி இருக்கிறதா இல்லையா என்பதற்குப் பதில், வான்படை தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்று கூறிவிட்டார். (அப்போது, நக்சலைட்டுகளும் ஏழைகளுக்காகத்தான் பாடுபடுகிறீர்கள், அரசாங்கமும் ஏழைகளுக்காகத்தான் பாடுபடுகிறது, வாருங்கள் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து பாடுபடுவோம் என்று சொல்லியிருப்பது தனி நகைச்சுவை!). நிற்க. இந்த நிலையில்தான் வெளிவந்திருக்கிறது இந்து ராமின் தலையங்கம். அதில் நக்சலைட்டுகளுடன் கடினப் போக்கைக் கடைபிடிக்கக் கூடாதென்றும், அவர்களுடைய சமூகத் தேவைகளை நிவர்த்திப்பது, பேச்சுவார்த்தை நடத்துவது, அவர்களது வன்முறைக்கான காரணங்களை ஆராய்ந்து அவற்றை அரசாங்கம் களைவது போன்ற முயற்சிகளில்தான் ஈடுபடவேண்டுமே தவிர, அவர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது. அதிலும் குறிப்பாக வான் தாக்குதல் என்பது நாகரீகமுடைய சமூகத்தின் செயலன்று (bombing of civilian areas cannot be contemplated by any civilised society.) என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இவர் ஈழத்தில் நிகழ்ந்த இனப்போராட்டத்துக்கும் இதே அளவுகோலைக் கொண்டுவருவாரா? கண்ணை மூடிக்கொண்டு இலங்கையரசாங்கம் வீசிய குண்டுகளெல்லாம் எங்கே வீழ்ந்து வெடித்தன என்பதை இவர் காணவில்லையா? தமிழர்களின் மீது ஏவப்பட்ட வான் தாக்குதல்களும், அரச வன்முறைகளும் நியாயமாகத் தெரிகின்ற இவருக்கு, நக்சலைட்டுகளின் மீது இரக்கம் கொப்பளிக்கக் காரணம் என்ன என்று யோசிக்கிறீர்களா?

செஞ்சீனத்தின் 60வது பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு தியானென்மென் சதுக்கத்துக்கு அழைக்கப்பட்ட பத்திரிகையாளர்களில் இவரும் ஒருவர். மற்ற பத்திரிகைகள் சீனாவின் மனித உரிமைகளைக் கண்டித்தும், திபெத் மீதான ஆக்கிரமிப்பைக் கண்டித்தும், மாசேதுங்கின் ஆட்சியின்போது கொல்லப்பட்ட பல இலட்சக் கணக்கான மக்களைக் குறித்தும் எழுதிக் கொண்டிருக்க, இந்து ராம் அவர்கள் செஞ்சீனத்தின் அருமைபெருமைகளை எழுதிக் குவித்தார். நக்சலைட்டுகளுக்கும் மாசேதுங்-சீனாவுக்குமிருக்கும் தொடர்புகள் வெள்ளிடைமலை. அதேபோல இலங்கைக்கும், சீனாவுக்கும் இருக்கும் உறவும் நமக்குத் தெரியும். இலங்கையரசாங்கம் அய்யா இராமுக்குத் தரும் ராஜாங்க மரியாதையும், விருதுகளும் நமக்குத் தெரியும். ஆக, அய்யா அவர்கள் செஞ்சீனத்தின் ஒரு சிறப்புப் பிரதிநிதியாக இந்தப் பிராந்தியத்திலே வலம் வருகிறார் என்பதைப் புரிந்துகொள்ளக் கடினமாகவா இருக்கிறது? அப்படியென்றால், இந்தியாவுக்குச் சீனாவினால் நிகழ்ந்துவரும் நெருக்கடிகள் (string of pearls முதலானவை) ராமுக்குத் தெரியாமல் இருக்குமா? இந்தியாவில் சீனாவின் முதலீடுகள் உட்பட, இந்தியாவைச் சுற்றியிருக்கும் நாடுகளில் சீனாவின் ஆதிக்கம் பரவுதல் வரை எல்லா வகைகளிலும் இந்தியாவானது சீனாவுக்கு மண்டியிடவேண்டிய நிலை வரப்போகிறது என்பது பலரின் கவலையாக இருக்கிறது. இதெல்லாம் ராமுக்குத் தெரியாதா? அப்படித் தெரிந்திருந்தும் இந்தியாவின் நலன்களை சீனாவுக்கு முன்னர் பலியிடத் திட்டமிட்டிருக்கிறாரா? இந்தியர்கள் யோசிக்க வேண்டும். ஈழப் போரினால் பாகிஸ்தானும், சீனாவும் அதிகாரமிக்கவர்களாக ஆகியிருக்கிறார்களே தவிர, இந்தியா தனது மதிப்பை உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இழந்திருக்கிறது. இலங்கையே இந்தியாவை மதிப்பதில்லையே. இந்த வெளியுறவுக் குளறுபடிக்கு யார் யாரெல்லாம் காரணமென்று பட்டியலிட்டால் அதில் இந்து ராம் இருப்பாரா மாட்டாரா?

இன்னொருபுறமாகப் பார்த்தால், அண்மையில் அமெரிக்காவின் சில நகர்வுகள் சீனாவுடன் இணக்கப்பாட்டினைக் கடைபிடிக்க விரும்புவதாகத் தெரிகிறது. நியூயார்க்கின் Empire State Building கோபுரமானது சீனாவின் 60வது விழாவுக்கு சிவப்பும், தங்க நிறங்களாலுமான விளக்குகளால் சொலித்தது. இது அமெரிக்காவுக்குப் புதியது. வெளியே திபெத் ஆதரவாளர்கள் போராடினார்கள். நேற்று வானொலியில், மனித உரிமை என்பது அமெரிக்காவுக்கு, பொருளாதாரத்துக்கு அடுத்துதான் என்ற கருத்து உருவாகிவருகிறது என்று ஒருவர் பேசினார். அதனால்தான் சீனாவுடன் கைகோர்க்கத் துணிகிறது அமெரிக்கா. சீனாவின் வளர்ந்துவரும் பொருளாதார பலத்துக்கு முன் அமெரிக்கா மோதலில் இறங்கத் துணியவில்லை என்பது உண்மை. ஆக, சீன-அமெரிக்கக் கூட்டுறவு எந்தெந்த வகைகளிலெல்லாம் தமிழர்களை அணுகும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்தக் கூட்டணிக்கிடையில் இந்து ராம் போன்றவர்கள் என்ன செய்வார்கள், இலங்கை என்ன செய்யும் என்பதையும் யோசிக்க வேண்டும். இந்தக் குழப்பத்தில் இந்தியாவின் நலன்களை யார் யாரெல்லாம் சூறையாடுவார்கள் என்பதையும் யோசிக்க வேண்டும். சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் தன்னைத் திறந்துவிட்டுவிட்டு, நாட்டின் சிறிய விகித மக்களை உயர்த்தி, ஏனையோரை நசுக்கியழிக்குமா என்பதும் கவலைக்குரியது. அப்போது அமெரிக்காவின் மக்களாட்சித் தத்துவங்கள் இந்தியாவுக்குள் மாயமாகிப்போய், சீனாவின் போலி சோசலிசத்தின் முகமூடிகளையணிந்துகொண்டு இங்கே ஆட்சி செய்யப் போவது எது என்று நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரியவேண்டுமா?

http://sundaravadivel.blogspot.com/2009/10/blog-post_10.html

sundar

இன்று புலிகள் போராட்ட வரலாற்றில் முதல் பெண் போராளி 2 ஆம் லெப்டினன் மாலதியின் நினைவு நாள்

இன்று புலிகள் போராட்ட வரலாற்றில் முதல் பெண் போராளி 2 ஆம் லெப்டினன் மாலதியின் நினைவு நாள்:

எமது சமூகத்தில் வேரூன்றியிருந்த, பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். பெண்ணானவள் இப்படித்தான் இருப்பாள். இதற்கு மேல் அவளால் முடியாது. ஆணைவிட பெண்ணுக்கு ஆற்றல் குறைவு என்ற கருத்துக்களை – 2ஆம் லெப். மாலதி 22 ஆண்டுகளுக்கு முன் பொய்யாக்கினாள். இன்று தமிழீழ பெண்கள் எழுச்சி நாள்.
பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். பெண்ணானவள் இப்படித்தான் இருப்பாள். இதற்கு மேல் அவளால் முடியாது. ஆணைவிட பெண்ணுக்கு ஆற்றல் குறைவு என்ற கருத்தை ஆழமாக கொண்டே மனித சமூக அமைப்பு வேரூன்றிவிட்டது.

வரலாற்றில் எழுந்த இலக்கியம், இதிகாசம், புராணம் என எதுவானாலும் பெண்ணின் புற அழகிற்கே முக்கியத்துவத்தை கொடுத்து பெண்ணின் பலத்தை வெளிக்கொணராமல் போயுள்ளன. பெண் எனப்பட்டவள் இயலாமையின் வடிவம் என்ற பிம்பத்தை தோற்றுவிப்பதில் சமூகத்தின் பிற்போக்குவாதிகள் வெற்றி கண்டுள்ளனர்.

வீட்டில் ஆண் குழந்தை பிறந்துவிட்டால் மகிழ்ச்சி பெருமிதம். பெண் பிறந்துவிட்டால் கவலை. ஏக்கப் பெருமூச்சு. இதுதான் இன்றுள்ள நிலை. இந்த அவலம் ஏன் நமக்கு ஏற்பட்டது? ஏன் எங்கள் மனங்களில் மாற்றம் வரவில்லை. ஒரு ஆணுக்குரிய ஆற்றல் அவ்வளவும் பெண்ணுக்குள்ளும் இருக்கிறதுதானே. அப்படியிருந்தும் சமூகத்தில் ஏன் இந்தப் பாகுபாடு? இந்தக் கேள்விகள் எல்லோர் மனங்களிலும் எழவேண்டும். இதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைக்கும் திறன் புதிய தலைமுறைக்கு உண்டு.

மனிதகுல வரலாற்றில் கிறிஸ்துவுக்கு 6000 (ஆறாயிரம்) ஆண்டுகளுக்கு முன் தாய் வழிச் சமூகமே இவ்வுலகில் ஆட்சி புரிந்தது. காடுகளில் குழந்தைகள் குழுக்களாக வாழ்ந்த காலத்தில் தாயின் இராச்சியமே நடைபெற்றது. குழுவிற்கு தாய்தான் தலைமை தாங்கினாள். பெண்ணே பெரிதாக மதிக்கப்பட்டாள். தாய் என்ற சொல்லே மருவி தலைவி என்றாகிவிட்டது என வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். தன்னுடைய இனத்தைக் காக்கும் சக்தியாக பெண் விளங்கினாள். அவளின் சக்திக்கு கட்டுப்பட்டு பின்னால் செல்ல அவளது சமூகம் தயாராகவிருந்தது அன்று. தனது இனத்தை பாதுகாக்கவும், அவர்களுக்கு உணவு கொடுக்கவும், தேவையானவற்றை தேடிக் கொடுக்கவும், தாயானவள் தன்னைப் பலி கொடுக்கவும் தயாராகவிருந்தாள் என்பது உயர்ந்த தியாகமாகும். அது அன்றே இருந்தது.

எதிரிகளிடமிருந்தும் காட்டு விலங்குகளிடமிருந்தும் தனது இனத்தை காக்க தானே தலைமை தாங்கி வழி நடத்தினாள். பஞ்சாயத்து சபையை நிறுவி நிர்வாகம் செய்தாள்.

அன்றைய பெண்ணும் போர் முனைகளைச் சந்தித்தவள்தான். எதிரிக் குழுக்களை தாக்க, வேட்டையாட தானே ஆயுதங்களைக் கொண்டு முன்னே சென்று தாக்குவாள். அந்த தாய்க்குப் பின்னால் தான் அவளது குழுவைச் சேர்ந்த பெண்களும், ஆண்களும் வருவார்கள். சண்டை செய்வார்கள். சாவைச் சந்திப்பார்கள். வெற்றி பெறுவார்கள்.

மலைகளின் மீது மான்களைப் போன்று ஏறி எதிரியை விரட்டவும், தேனை எடுக்கவும் அந்தப் பெண்களால் முடிந்தது. தேன் குடிக்க கரடி ஏற முடியாத இடத்தில் கூட ஏறி நின்று தேன் குடிப்பாள் வீரமங்கை. கல்லினால் கூரிய ஆயுதம் செய்யவும், தோலினால் கருவி செய்யவும், பாத்திரம் செய்யவும், அழகிய குடிசை கட்டவும், நடனமாடவும் அந்தப் பெண்களால் முடியும்.

எலும்பாலும், கல்லாலும், மரத்தாலும், கொம்பாலும் செய்யப்பட்ட விதம் விதமான கூரிய ஆயுதங்களால் பெண்கள் சண்டை போட்டார்கள். தமக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய எதிரிகளை தேடி, தேடி தாக்கி அழித்தார்கள். கி.மு. 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் பெண்கள் சாம்ராஜ்யமாகவே இருந்தது. அக்காலத்தில்தான் சமூகம் முழுவதும் ஒரே குடும்பமாகவிருந்தது என ஆய்வாளர்கள் எடுத்துக் கூறுகின்றனர். இதனை மெய்ப்பிப்பது போல அகழ்வாராய்வின்போது மிகப் பழமையான காலத்து வரலாற்று ஆவணங்களில் சக்தி வழிபாட்டு முறை இருந்து வந்துள்ளதை சுட்டுகின்றனர்.

உலகில் சரிபாதியினர் பெண்கள், எமது சமூகத்திலே சரிபாதியினர் பெண்கள். இந்தச் சரிபாதித் தொகையினரான பெண்கள் போராட்டத்தில் பங்கு பெறாது எமது தேசத்தின் விடுதலை சாத்தியப்படாது. சரிபாதியினரான பெண்களுக்கு விடுதலையின்றி எமது தேசவிடுதலையும் முழுமை பெறாது என்பது தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் கருத்தாகும். அடக்கு முறையின் வடிவமாக பெண்ணை ஆளாக்கியுள்ள நமது சமூகம் அந்தத் தளையை அறுக்க முன்வரவில்லை. பெண் ஒடுக்குமுறைக் கருத்துகள் இன்னமும் பலமான நிலையில் பேசப்படுகின்றன. அவ்வாறான சமூக கட்டமைப்பு எழுதப்படாத வாக்கியமாக நிலைத்து நிற்கிறது.

சாதி வேறுபாடுகள், மூட நம்பிக்கைகள் புரையோடிப் போயிருந்த சூழ்நிலையில் பெண்கள் அதிலே புதையுண்டு போனதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

தமிழரது வாழ்வில் அடிமைத்தனம் என்பது பல ஆண்டுகளாக நீடித்துள்ளது. அந்நியப் படையெடுப்புகளால் தமிழரது கலாசாரம் பண்பாடு என்பன சிதையுண்டு போயுள்ளன.

தமிழர் வாழ்வில் பெண் மதிக்கப்பட்டு அவளுக்குரிய கௌரவம் வழங்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் ஆரியப்படைகளுக்கு தமிழன் அஞ்சியோடவில்லை. ஆனால் வஞ்சகமாக ஆன்மீக தத்துவங்களை புகுத்தி ஆரிய சக்கரவர்த்திகள் தமிழ் நாடுகளை அடிபணிய வைத்தார்கள். அதுதான் தமிழ்மக்களின் தமிழ்ப் பெண்களின் வாழ்வுக்கு அஸ்தமனமாகவிருந்தது. அவர்கள் போட்ட விதைதான் பெண்ணடிமை, சீதனம், சாதிமுறை, குலதொழில் என்பன. இன்றுகூட இந்தியாவில் பெண்கள்படும் இழிவுநிலை ஏராளம். இந்திய ஆதிக்கம் ஈழத்திலும் நிலை கொண்டதனால் ஈழப்பெண்களும் இதுபோன்ற அடக்கு முறைக்கு ஆளாகினர்.

அன்று எமது சமூகத்தில் பெண்களுக்கெதிரான சமூக அநீதிகள் அதிகரித்திருந்தன. பெண் அடக்குமுறைக் கருத்துகள் பலமாக நிலவின. எமது சமூகமே சாதி சமய வேறுபாடுகளால் ஆழமாகப் பிளவுபட்டு நின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக நிலச்சுவாந்தர் முறைமையையும், சாதியக் கட்டமைப்புக்களையும் இறுக்கமாகப் பின்னிப்பிணைத்து அமைந்த பொருளாதார உற்பத்தி முறையில் எமது சமூகக் கட்டமைப்பு எழுதப்பட்டிருந்தது. அது சுய சிந்தனைக்கு வரம்புகளை விதித்தது. பெண்கள் தாம் அடக்கு முறைக்குள் வாழ்கிறோம் என்பதை உணரவிடாது தடுத்தது. அத்தோடு எதிரியின் இன அழிப்புப் போர் என்றுமில்லாதவாறு எம்மண்ணில் தீவிரமடைந்திருந்தது. அந்நிலையில் அடிப்படையான சமூக மாற்றத்தை ஏற்படுத்தி பெண் விடுதலைக்கு வழிசமைப்பது பற்றி நாம் சிந்திக்க முடியாதிருந்தது.

எனவே விடுதலைப் போராட்டத்தில் பெண்களையும் அணி சேர்ப்பதினூடாகப் படிப்படியாக சமூகமாற்றத்தை ஏற்படுத்தி பெண் விடுதலையையும், தேசவிடுதலையையும் சாத்தியமாக்கலாம்.

இவ்வாறுதான் எமது போராட்டத்தில் பெண் புலிகள் தோற்றம் பெற்று இன்று எதிரியின் படைப்பலத்தைச் சிதைத்து யுத்தத்தின் போக்கையே நிர்ணயிக்கின்ற பெரும் படையணிகளாக எழுந்து நிற்கிறார்கள்.

ஒரு நூற்றாண்டுக்கு மேலாக மேற்குலகப் பெண்கள் பெரும் போராட்டங்களை நிகழ்த்தி, புரட்சிகளை நடத்தி விவாதங்களை புரிந்து கருத்தமர்வுகளை மேற்கொண்டு பெற்றெடுத்தவற்றைவிட எமது பெண் புலிகள் மிக்க குறுகிய காலத்துக்குள் எமது பெண்களுக்குப் பெற்றுக் கொடுத்த உரிமைகளும், சுதந்திரங்களும் அளப்பரியவை. அத்தோடு சமூகத்திலே பெரும் புரட்சியை நிகழ்த்தியிருக்கிறார்கள். சமூகக் கருத்துலகில் புதிய பார்வையை வளர்த்து வருகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக ஆணும், பெண்ணும் சமமான ஆற்றல்களுடனேயே படைக்கப் பட்டிருக்கிறார்கள் என்ற உடற் கூற்றியல் நிபுணர்களது, கூற்றுக்கு பெண் புலிகளே உலகுக்கு உதாரணமாக வாழ்கிறார்கள் என பெண் போராளிகள் பற்றி தலைவர் பிரபாகரன் பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார்.

உலகில் பெண்கள் மோசமான அடக்கு முறைக்கு ஆளாகி வந்துள்ளனர். இற்றைக்கு சுமார் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன் தாய்வழிச் சமூக அமைப்பு சிறப்புற்று விளங்கியது. அதன்பின், கால வெள்ளத்தில் தாய் வழி சமூக அமைப்பு முறைகள் பல்வேறு காரணிகளால் சிதைந்துபோய் ஆணாதிக்க முறைமைகள் தோற்றம் பெற்றன. இன்றும் உலகில் பெண்கள் மோசமாக நடத்தப்படுகிறார்கள். மேற்காசியா, ஆபிரிக்கா மற்றும் இஸ்லாமிய மதக் கோட்பாடுகளை தீவிரமாக பின்பற்றும் நாடுகளில் பெண்களின் உரிமைகள் அடியோடு மறுக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் ஆரியர்களின் மனுதர்ம சாஸ்திரம் பெண்களுக்கு எதிராக சமூக நீதிகளை அதிகரிக்க செய்திருக்கின்றன. சாதியம், அடிமைத்தனம் போன்றவற்றை ஆழப்பதித்திருக்கின்றன. வரதட்சனை, இரத்த உறவு திருமணம், கொடுமை, சித்திரவதை, உயிர் நீப்பு என பெண்களுக்கிழைக்கப்படும் கொடுமைகள் ஏராளம்.

எகிப்து நாட்டை தாலமி அயோலேட்டஸ் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுடைய மகள் கிளியோபாட்ரா! தாலமி இறப்பதற்கு முன் அவள் தம்பி ஏழாவது தாலமி, சகோதரி கிளியோபாட்ராவை திருமணம் செய்து கொண்டு நாட்டை ஆளவேண்டுமென அறிவித்தார். அதன்படி இருவருக்கும் திருமணம் நடந்தது. அப்போது கிளியோபாட்ராவுக்கு வயது 16. தாலமிக்கு வயது 10. இது ஒரு செய்தியல்ல. 20 நூற்றாண்டுகளுக்கு முன்னரும் இப்படி பெண்ணியல் பற்றி பெண்ணுரிமை பற்றி, யாரும் வாய் திறக்கவில்லை. அப்போதும் பெண் அடிமைதான். இப்போதும் பெண் அடிமைதான் எகிப்து நாட்டில்.

அக்டோபர் 10 தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும் 2 ஆம் லெப்டினன் மாலதியின் நினைவு நாளும் ஆகும். அடக்கி ஒடுக்கப்பட்டிருந்த தமிழீழப் பெண்கள் இன்று தலை நிமிர்ந்து நிற்கிறனர். தீரத்தினாலும், தியாகத்தினாலும், விவேகத்தினாலும் உலகப் பெண்களுக்கு வழிகாட்டியாக உயர்ந்து நிற்கின்றனர் என்பதை அனைவரும் ஏற்றுள்ளனர்.

ஐம்பது வருட கால ஆக்கிரமிப்புக்கும் முப்பது வருடகால கொடிய போருக்கும் தமிழீழப் பெண்கள் முகம் கொடுத்து தமது நுண்ணிய ஆற்றலினால் அனைத்து தடைகளையும் அறுத்தெறிந்து வருகிறார்கள்.

தலைவர் பிரபாகரனின் காலத்தில் பெண்கள் அனைத்துத் துறைகளிலும் தம்மை வளர்த்தது மட்டுமன்றி தமிழ்த்தேசத்தின் விடுதலைக்காக தமது இன்னுயிர்களை அர்ப்பணித்தும் வருகிறார்கள்.
தமிழ்த்தேசிய உணர்வுகளை கட்டியெழுப்பி புதிய பெண்ணெழுச்சிக்கு வித்திட்டுள்ளார்கள்.

அதிகாரப் போக்கினாலும், ஆக்கிரமிப்பாளர்களின் ஆயுத வெறியினாலும், தமிழர்களின் ஜனநாயக உரிமை நசுங்கியது. ஆனால் இளைய பெண் தலைமுறை சுதந்திர வேட்கை கொண்டு விடுதலைக்காக ஆயுதக் கருவிகளை கையிலேந்தி தீர்த்த தீரமான வேட்டுக்களாலே இன்று ஜனநாயகம் மலர்ந்தது மட்டுமல்ல, பெண்ணினத்தின் விடுதலையும் முழுமை பெற்றது. ஆண் பெண் சமநிலை புத்துயிர் பெற்றுள்ளது.

2ஆம் லெப். மாலதி 22 ஆண்டுகளுக்கு முன் அந்த இலட்சியக் கனவோடுதான் வீரச்சாவை தழுவிக் கொண்டாள். அந்த நடுராத்திரியில் வல்லாதிக்க இந்திய இராணுவத்தை எதிர்கொள்ள கோப்பாய் கிறேசர் வீதியில் காத்திருந்தாள். இந்திய இராணுவம் தமிழ் பெண்களுக்கு இழைத்த அநீதி இன்னமும் தமிழர் மனங்களில் ஆறாத காயமாகவுள்ளது. 1987 அக்டோபர் 10 ஆம் திகதி நள்ளிரவு 1 மணியளவில் இந்திய வல்லாதிக்க இராணுவம் மீது அவளது எம்16 ரக துப்பாக்கியில் குண்டுகள் சீறிப்பாய்ந்தன. அந்த தாக்குதல் 2 ஆம் லெப் மாலதியின் இறுதி தாக்குதல். புலிகள் போராட்ட வரலாற்றில் முதல் பெண் போராளி 2 ஆம் லெப் மாலதி வித்தாகி வீழ்ந்தாள். அதுவே தமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு வித்தாக அமைந்தது.

தலை வணங்கா தமிழன் ,

லெ.பா.சந்திரன்