Saturday, October 10, 2009

தமிழர்களே மறக்காமல் நன்றி சொல்லுவோம்

தமிழர்களே மறக்காமல் நன்றி சொல்லுவோம்

ஒரு சில மாதங்களுக்கு முன்பு

ஈழத்தமிழர்களை பாதுகாக்க‌ கடிதம் எழுதிக்கொண்டே இருந்தார் தமிழின தலைவர்.

ஈழத்தில் இலட்சம் தமிழர்கள் இறந்தபோது, பல அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்திகொண்டிருக்க, முத்துகுமார் தொடங்கி பல இளைஞர்கள் தீக்குளிக்க, தமிழர்கள் வேதனையில் இருக்க "தமிழின"தலைவர், ஈழத்தமிழர்களை பாதுகாக்க "அரை நாள் உண்ணாவிரதம்" இருந்து தமிழர்களின் மீது தனக்குள்ள "நன்றியை" காட்டி அனைவரையும் "அசத்தினார்"

(அது மட்டுமா "ஒன்றிரன்டு மக்கள்தான் இறந்திருக்கிறார்கள், பெரியபாதிப்பு எதுவுமில்லை" என்று தொலைகாட்சிகளுக்கு செய்தி கொடுத்தார் காங்கிரசு கருங்காலி இலங்கோவன்)

இப்பொழுது தமிழின‌ப்படுகொலைக்கு காரணமான காங்கிரசு கட்சியின் ஒ.எஸ்.ஆர் இறந்ததற்காக அரசு விடுமுறையே அறிவித்திருக்கிறார். அதோடு நிருத்தாமல், "தமிழகமே துக்கத்தில் மூழ்கியுள்ளது" என்று வழக்கம்போல தனது பொன்மொழியை உதிர்த்திருக்கிறார் "மைனாரிட்டி" முதல்வர். அவர‌து வீடுதான் அவருக்கு தமிழகமோ?

தமிழர்களின் உயிருக்காக குரல் கொடுக்காமல் சீக்கியர்களின் மயிருக்காக குரல் கொடுக்கும் பிரதமர் !!

தமிழர்களின் உயிருக்காக கடிதம் எழுதிக்கொண்டே இருந்துவிட்டு ஒரு தெலுங்கன் இறந்ததற்காக அரசுவிடுமுறை
அறிவிக்கும் முதல்வர் !!

நாமும் மறக்காமல் "நன்றி" காட்டவேண்டும் நன்பர்களே !!

1 comment:

S.Arockia Romulus said...

அடே தழிழா மறத்தமிழா - மானம் உன்னில் மருந்திற்கேனுமி(ல்)லையோ?


உன் இனம் இலங்கையிலே பாடை ஏறிக்கொண்டிருக்கிறது-

இந்தியமட்டைப்பந்து அணியோ அங்கு சென்று ஆடை கட்டி ஒய்யாரமாக ஆடிக்கொண்டிருக்கிறது -

நீயும்வேலை வெட்டியை விட்டு ரசிக்கின்றாய்-(அடே தழிழா )

ஒவ்வொரு ஓட்டத்திற்கும் உன் கைகளைத் தட்டிக்கொள்கிறாயே!-தழிழீழ

பசிளம் குழந்தையின் வாட்டம் உன் இதயத்தை தட்டவில்லையா?

இல்லை உனக்கு இதயமே இல்லையா? -(அடே தழிழா )




முத்துக்குமரன் எனும் தியாகச்சிகரத்தின் கருகிய உடலைக்



கண்டுமுன் இதயம் உருகவில்லையா?



உன் இதய நாளங்கள் இறுகவில்லையா?-(அடே தழிழா)



காலையின் உன் எதிர்ப்புக்கண்டு மத்திய ,மாநில அரசுகள் ஆட்டம் காண்கின்றன என்கின்றாய்



மாலையில் அவர்களது மேடையே உன்னால்தான் கூட்டம் காண்கின்றது



அறிவிலாதவனா நீ? எப்போது ஆட்டுமந்தையானாய்? -(அடே தழிழா)



அங்கே துகிலுரிக்கப்படும் மங்கையை காணுகையில் - உன்னுடன்



துகிலெழும்பும் உன் தங்கை நினைவுக்கு வரவில்லையா?



சிதறும் உடல்களை பார்க்கும் போது -உன்னுடன்உணவருந்தும்



உன் பெற்றோர் நினைவுக்கு வரவில்லையா?-(அடே தழிழா)







இருட்டிலிருந்து வெளியே வா! இதய பூட்டுக்களை தகர்த்தெறி!!நாம் மறத்தமிழர் உறவுகளை மறந்த தமிழரில்லை!!!மானம் கொண்டு வானம் தொடலாம் வா!!!!!!!!!!