Saturday, October 10, 2009

கழிவும் கலிசடையும்

தீவிரவாதத்தை ஒழிப்பதாக கூறிக்கொண்டு இலட்சக்கணக்கான தமிழர்களை படுகொலை செய்யவும் எஞ்சியுள்ள மக்களையும் பட்டினியாலும் நோயாலும் தினமும் சாகடித்து கொண்டிருக்கிற இலங்கை அரசுக்கு "முழு ஆதரவு" அளித்து ஏராளமான‌ ஆயுதங்களையும் பணத்தையும் கொடுத்து ஒரு பெரிய "இனப்படுகொலையை" நடத்தி கொண்டிருக்கிறது "இந்திய தேசிய காங்கிரஸ்" தலைமையிலான இந்திய அரசு.

ஒட்டுமொத்த தமிழர்களும் இந்த இனப்படுகொலையை கண்டு வேதனையில் இருக்க தன் கட்சியை பலப்படுத்த கட்டுகட்டாக பணத்தை இறைத்து கொண்டிருக்கிறது காங்கிரஸ்

விளைவு?

தன்னை வாழவைத்து கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு "கோக்" குடித்து வயிற்றை புண்ணாக்க கற்றுகொடுத்த இளைய தளபதி காங்கிரசுடன் கைகோர்க்க‌ தலையை ஆட்டிவிட்டாரம்.

கழிவும் கலிசடையும் ஒன்னுசேர்ந்து கலக்கபோவுது
இனி இந்திய சாக்கடை அரசியல் உலகம் முழுக்க நாறப்போவுது

No comments: