Sunday, February 20, 2011

கும்பம் 8- பெப்ரவரி 20 வரலாற்றில் இன்று

நிகழ்வுகள்

1547 - ஆறாம் எட்வேர்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.

1627 - யாழ்ப்பாணத்தைத் தாக்கிய சூறாவளியில் சிக்கி பலர் இறந்தனர்.

1798 - பாப்பரசர் ஆறாம் பயஸ் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

1835 - சிலியின் கொன்செப்சியோன் நகரம் நிலநடுக்கத்தில் அழிந்தது.

1910 - எகிப்தியப் பிரதமர் பூட்ரோஸ் காலி (Boutros Ghali) கொல்லப்பட்டார்.

1944 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கா எனிவெட்டாக் தீவைக் கைப்பற்றியது.

1962 - மேர்க்குரி திட்டம்: ஜோன் கிளென் பூமியை மூன்று முறை சுற்றி பூமியைச் சுற்றிய முதலாவது அமெரிக்கர் என்ற புகழைப் பெற்றார்.

1965 - அப்பலோ விண்கலங்கள் சந்திரனில் இறங்குவதற்கான இடங்களை வெற்றிகரமாகப் படங்கள் எடுத்த ரேஞ்சர் 8 விண்கலம் சந்திரனுடன் மோதியது.

1987 - அருணாசலப் பிரதேசம் அசாமில் இருந்து பிரிந்து தனி மாநிலமாகியது.

2002 - எகிப்தில் தொடருந்து ஒன்று தீப்பிடித்ததில் 370 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1876 - கா. நமச்சிவாயம், தமிழறிஞர் (இ. 1936)

1937 - ரொபேர்ட் ஹியூபர், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானிய வேதியியலாளர்

1945 - ஜியார்ஜ் ஸ்மூட், அமெரிக்க விண்ணியல் அறிஞர்

1963 - சார்ல்ஸ் பார்க்லி, அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்

1977 - ஸ்டெஃபான் மார்பெரி, அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்

இறப்புகள்

1896 - ஆணல்ட் சதாசிவம்பிள்ளை, ஈழத்தின் தமிழறிஞர், புலவர் (பி. 1820)

1907 - ஹென்றி முவாசான், நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு வேதியியலாளர், (பி. 1852)

1916 - கிளாஸ் ஆர்னல்ட்சன், நோபல் பரிசு பெற்ற சுவீடன் எழுத்தாளர் (பி. 1844)

1972 - மரீயா கோப்பர்ட்-மேயெர், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானிய இயற்பியலாளர், (பி. 1906)

1976 - ரெனே காசின், நோபல் பரிசு பெற்றவர். (பி. 1887)

2008 - டி. ஜி. எஸ். தினகரன், கிறித்துவ மறைபரப்புனர் (பி. 1935)

2011 - மலேசியா வாசுதேவன், பாடகர், நடிகர்

No comments: