Saturday, January 22, 2011

சுறவம் 8 - ஜனவரி 22 வரலாற்றில் இன்று

நிகழ்வுகள்

1506 - 150 சுவிஸ் பாதுகாப்புப் படைகளைக்கொண்ட முதற் தொகுதி வத்திக்கானை அடைந்தது.

1798 - நெதர்லாந்தில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.

1840 - பிரித்தானிய குடியேற்றவாதிகள் நியூசிலாந்தை அடைந்தனர்.

1863 - ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக போலந்து, லித்துவேனியா, பெலரஸ் ஆகிய நாடுகளில் கிளர்ச்சி வெடித்தது.

1879 - தென்னாபிரிக்காவின் சூலுப் படைகள் ஐசண்டல்வானாவில் வைத்து பிரித்தானியப் படைகளைத் தோற்கடித்தனர்.

1889 - கொலம்பியா கிராமபோன் வாஷிங்டனில் அமைக்கப்பட்டது.

1899 - ஆறு ஆஸ்திரேலிய காலனிகளின் தலைவர்கள் கூட்டமைப்பு பற்றி விவாதிக்க மெல்பேர்னில் கூடினர்.

1901 - 64 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த விக்டோரியா மகாராணி தனது 81வது அகவையில் காலமானதை அடுத்து அவரது மூத்த மகன் ஏழாம் எட்வேர்ட் பிரித்தானியாவின் மன்னரானார்.

1905 - சென் பீட்டர்ஸ்பேர்க்கில் சார் மன்னருக்கெதிராக தொழிலாளர்களின் எழுச்சி முறியடிக்கப்பட்டது.

1906 - பிரிட்டிஷ் கொலம்பியாவின் வான்கூவர் தீவில் வலென்சியா என்ற பயணிகள் கப்பல் பாறைகளுடன் மோதியதில் 130 பேர் கொல்லப்பட்டனர்.

1941 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியம் லிபியாவின் டோப்ருக் நகரை நாசிப் படைகளிடம் இருந்து கைப்பற்றியது.

1942 - இரண்டாம் உலகப் போர்: சிங்கப்பூர் செண்பக விநாயகர் கோயில் ஜப்பானியரின் குண்டுவீச்சினால் பெரும் சேதமுற்றது.

1952 - உலகின் முதலாவது பயணிகள் ஜெட் விமானம் (BOACயின் Comet) சேவைக்கு விடப்பட்டது.

1957 - சினாய் தீபகற்பத்தில் இருந்து இஸ்ரேல் வெளியேறியது.

1964 - கென்னத் கவுண்டா வட றொடீசியாவின் முதலாவது அதிபரானார்.

1973 - நைஜீரியாவின் கானோ விமானநிலையத்தில் போயிங் விமானம் ஒன்று வீழ்ந்து வெடித்ததில் 176 பேர் கொல்லப்பட்டனர்.

1980 - நோபல் பரிசு பெற்ற சோவியத் இயற்பியலாளர் அந்திரே சாகரொவ் மாஸ்கோவில் கைது செய்யப்பட்டார்.

1984 - ஆப்பிள் மக்கிண்டொஷ் கணினி அறிமுகப்படுத்தப்பட்டது.

1992 - சாயீரின் தேசிய வானொலி நிலையத்தை தீவிரவாதிகள் கைப்பற்றி அரசை பதவி விலகும்படி அறிவித்தனர்.

1999 - இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் ஆஸ்திரேலிய கிறிஸ்தவ மதப் போதகர் கிரஹாம் ஸ்டைன்ஸ் என்பவரும் அவரது இரு மகன்களும் இந்துத் தீவிரவாதிகளால் உயிருடன் எரிக்கப்பட்டனர்.

2003 - பயனியர் 10 விண்கலத்துடன் கடைசித் தொடர்பு மேற்கொள்ளப்பட்டது.

2004 - ஆர்க்குட் தொடங்கப்பட்டது.

பிறப்புகள்

1561 - பிரான்சிஸ் பேக்கன், ஆங்கிலேய மெய்யியலாளர் (இ. 1626)

1788 - ஜார்ஜ் கோர்டன் பைரன், ஆங்கில-ஸ்கொட்டியக் கவிஞர் (இ. 1824)

1901 - விக்டோரியா, பிரித்தானிய மகாராணி (பி. 1819)

1908 - லேவ் லான்டாவு, நோபல் பரிசு பெற்ற ரசிய இயற்பியலாளர் (இ. 1968)

1909 - ஊ தாண்ட், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் (இ. 1974)

1922 - தி. வே. கோபாலையர், தமிழறிஞர் (இ. 2007)

1936 - அலன் ஹீகர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்

1988 - கிரெக் ஓடென், அமெரிக்காவின் கூடைப்பந்து ஆட்டக்காரர்

இறப்புகள்



1666 - ஷா ஜகான், முகலாலயப் பேரரசர் (பி. 1592)

1922 - பிரெட்ரிக் பாஜெர், நோபல் பரிசு பெற்றவர் ([இ. 1837)

1947 - சுவாமி ஞானப்பிரகாசர், ஈழத்தின் பன்மொழிப் புலவர் (பி. 1875)

2005 - வேந்தனார் இளங்கோ, ஆஸ்திரேலியத் தமிழறிஞர்

2008 - ஹீத் லெட்ஜர், ஹாலிவுட் நடிகர் (பி. 1979)

No comments: