Friday, July 23, 2010

ஜூலை 21 - வரலாற்றில் இன்று

நிகழ்வுகள்

கிமு 356 – ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றான கிரேக்கக் கோயில் ஆர்ட்டெமிஸ் கோயில் தீவைத்துக் கொளுத்தப்பட்டு அழிக்கப்பட்டது.

1545 - ஆங்கிலக் கால்வாயில் வைட் தீவில் முதற்தடவையாக பிரெஞ்சுப் படைகள் தரையிறங்கின.

1718 - ஒட்டோமான் பேரரசுக்கும் வெனிஸ் குடியரசுக்கும் இடையில் உடன்பாடு ஏற்பட்டது.

1774 - ரஷ்யாவும் ஒட்டோமான் பேரரசும் தமது ஏழு ஆண்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தனர்.

1831 - பெல்ஜியத்தின் முதலாவது மன்னர் லெப்பால்ட் I முடி சூடிய நாள்.

1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: வேர்ஜீனியாவில் மனாசஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற முக்கியமான போரில் கூட்டமைப்பு அணி வெற்றி பெற்றது.

1944 - இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் குவாமில் தரையிறங்கி ஜப்பானியப் படைகளுக்கெதிராகத் தாக்குதலை ஆரம்பித்தனர் (ஆகஸ்ட் 10 இல் இது நிறைவடைந்தது).

1954 - ஜெனீவா மாநாட்டில் வியட்நாம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

1961 - நாசாவின் மனிதரை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தில் இரண்டாவது பயணம் மேர்க்குரி-ரெட்ஸ்டோன் 4. கஸ் கிரிசம் என்பவர் விண்வெளிக்குப் பயணித்தார்.

1964 – சிங்கப்பூரில் மலே இனத்தவர்களுக்கும் சீனர்களுக்கும் இடையில் கலவரம் மூண்டதில் 23 பேர் கொல்லப்பட்டு பலர் காயமடைந்தனர்.

1969 - நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்றின் ஆகியோர் அப்பல்லோ 11 விண்கலத்தில் சென்று சந்திரனில் நடந்த முதல் மனிதர் என்ற புகழைப் பெற்றனர்.

1972 - வட அயர்லாந்து தலைநகர் பெல்பாஸ்ட்டில் இடம்பெற்ற 22 தொடர் குண்டுவெடிப்புகளில் 9 பேர் கொல்லப்பட்டு 130 பேர் படுகாயமடைந்தனர்.

1977 - நான்கு நாட்கள் நீடித்த லிபிய-எகிப்தியப் போர் ஆரம்பமானது.

2007 - ஹரி பொட்டர் தொடர் நாவலின் கடைசிப் பாகம் வெளிவந்தது.

பிறப்புகள்

1899 - ஏர்னெஸ்ட் ஹெமிங்வே, அமெரிக்க எழுத்தாளர் (இ. 1961)

இறப்புகள்

1899 - சாரதா தேவி, ஆன்மிகவாதி, சுவாமி இராமகிருஷ்ணரின் மனைவி (பி. 1853)

1998 - அலன் ஷெப்பர்ட், விண்வெளிக்குச் சென்ற முதலாவது அமெரிக்கர் (பி. 1923)

2001 - சிவாஜி கணேசன், தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. 1927)

2009 - கங்குபாய், இந்துஸ்தானி இசைப் பாடகி (பி. 1913)

சிறப்பு நாள்

பெல்ஜியம் - தேசிய நாள்

பொலீவியா - மாவீரர் நாள்

குவாம் - விடுதலை நாள் (1944)

சிங்கப்பூர் - இன சமத்துவ நாள்



வேதநாயகம் இறப்பு.
தமிழும், தமிழ்நாடும் உயர்ந்த நிலையிலே வாழவேண்டும் என்னும் நோக்கம் கொண்டு உழைத்தவரும், பெண்கள்விக்காகவும், பெண்களின் பெருமைக்காகவும் தமிழகத்திலே முதலாவதாக தொண்டு செய்தவருமான வேதநாயகம் திருச்சி அருகில் உள்ள குளத்தூரில் 1826 -ஆம் ஆண்டு பிறந்தார். சவரிமுத்து, ஆரோக்கியமரியம்மாள் என்பவர்கள் இவரது பெற்றோர். இவர் மாயூரம் "நீதிபதி வேதநாயகம்" என்றும் அழைக்கப்பட்டார். 21 .07 .1889 -இல் உயிர் துறந்தார்.

"வடமொழி கற்றால் மறுமைக்கு நலம், ஆங்கிலம் படித்தால் இம்மைக்கு நலம்" என்பது நண்பிக்கையாக நிலவிய அந்நாளில் தமிழை ஊன்றிக் கற்று தனது 11 -வது அகைவையிலேயே தமிழில் புலமை பெற்றார். பா புனைவதிலும் தேர்ச்சி பெற்றார். ஆங்கில் உள்பட பல மொழிகளையும் பயின்றார்.

அக்காலத்தில். தமிழ்நாட்டில் தமிழ் இசைக்கு இடமில்லாமல் இருந்தது. தெளுங்கிசையே பொது மேடையில் ஆட்சி புரிந்தது. தமிழிசையை வளர்க்கவேண்டுமேன்ரும், அறமும் இறைப்பற்று உறுதியும் கற்பிக்க வேண்டுமென்றும் விரும்பிய வதனயகம் "சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள்" என்னும் இசை நூலை 1878 -ஆம் ஆண்டில் வெளியிட்டார்.

மாவட்ட நீதிமன்றத் தலைவர் அலுவலுக்கான தேர்வில் முதல் இடத்தில் தேர்ச்சி பெற்று 1857 -ஆம் ஆண்டில் தரங்கம்பாடியுலும், 1859 -இல் சீர்காளியுளும், 1860 -இல்மாயூரத்திலும் மாவட்ட நடுவராகப் பணியாற்றினார். 1873 -இல் ஓய்வு பெற்றார்.

நீதி துறையிலும், இலக்கியத்துறையிலும் தமிழுலகின் வழிகாட்டியாகத் திகழ்ந்தார். வழக்குமன்றத்தில் தமிழே ஆட்சிமொழியாக இருக்க வேண்டுமென்று கருத்துத் தெரிவித்தார். தமிழ் மொழியில் "நாவல்" என்னும் பினைக்கதையை முதன்முதலில் எழுதியவர் இவரே ஆவர். ஒளவையின் "தையல் சொல் கேளேல்" எனும் பழமொழி உள்பட பெண்களை இழிவுபடுத்தும் பழமொழிகளை நீக்குதல் நலம் என்றார் வேதநாயகம்.

தமிழ் மீது ஆர்வம் கொண்டு உழைத்தவர் என்ற போதிலும் இவரது எழுத்துக்களில் அயல் மொழிச் சொற்களின் கலப்பு மிக அதிகமாகவே காணப்படுகிறது. சமற்கிருதக் கலப்பு திணிக்கப்பட்ட காலக்கட்டத்தில் தூய தமிழ் வளர்க்கும் எண்ணம் கொண்டிராத குறையாகவே தூருகிறது. நல்லெண்ணத்தோடு அவர் தொடங்கிய சில நற்பணிகள் திறன் ஆய்வுகளோடு தொடரப்பட வேண்டும்

No comments: